Wednesday, December 26, 2007

கலக்கும் லாலு!!

பல மாநிலங்களுக்கு குடிநீர் சப்ளை செய்து, ரயில்வே துறை சம்பாதிக்க முடியுமா? ஏன் முடியாது என்று புதுமையான திட்டத்தை தீட்டியிருக்கிறார், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்!

ரயில்வே துறை அமைச்சராக லாலு பொறுப்பேற்றதில் இருந்து, ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது.

"ரயில்வே துறை லாபம் குவிக்க இன்னும் பல வழிகள் உள்ளது. அதைப்படிப்படியாக நிறைவேற்றுவேன்' என்று, அமைச்சர் கூறியிருந்தார். அதன் முதல் கட்டமாக, குடிநீர் "பைப் லைன்' திட்டம் பற்றி லாலு தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.

நாடு முழுவதும் போடப்பட்டுள்ள 63 ஆயிரம் கி.மீ., நீள தண்டவாளங்களில், இரு பக்கமும், குடிநீர் பைப்களை புதைத்து, பல்வேறு மாநிலங்களில் உள்ள நதி நீரை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு சப்ளை செய்வது தான் லாலுவின் திட்டம்.

இந்த திட்டம் நிறைவேறினால், சில மாநிலங்களில் பல ஆண்டாக மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயம் நீங்கும்; வறட்சியில் உள்ள சில மாநிலங்களுக்கு தண்ணீர் சப்ளை கிடைக்கும்.

முழு செய்திக்கு: தண்டவாளம் அருகே "பைப் லைன்' லாபத்தை பெருக்க லாலு புது திட்டம்

உண்மையிலேயா லாலு கலக்குகிறார்!!!!

நன்றி: தினமலர்

பின் குறிப்பு:
இது சென்ற வார செய்திதான்... இப்போது தான் பார்த்தேன். :)

Monday, December 24, 2007

எ.ஏ.தி.க தலைவருக்கு வாழ்த்துக்கள்!!!!!!



எ.ஏ.தி.க தலைவர், வருங்காலத் தமிழகத்தின் விடிவெள்ளி, பிணாங்கு சிங்கம் எங்கள் தலைவர் டி.பி.சி.டி(அரவிந்த்) க்கு இன்று பிறந்தநாள்! அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!! :P






தமிழக மக்களே... சிந்தித்துப் பாருங்கள்... புலியையும் அடக்கி நண்பனாக்கும் திறமை கொண்ட ஒரே அரசியல்வாதி, எங்கள் தலைவர், கொள்கைக் குன்று டி.பி.சி.டி மட்டுமே!!!! இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து எங்களுக்கு ஓட்டுப்போட்டு 200011 தேர்தலில் எங்கள் தலைவரை முதல்வராக்குங்கள்!!!!

பின் குறிப்பு:
கும்மி not allowed... :P



Monday, December 17, 2007

இளம் ஜோடி(adults only) - ந.ஒ.க போட்டிக்கு அல்ல!!

அவருக்கு சில நாட்களாகவே அந்தப் பிரச்சனை இருக்கிறது. ஆனால் யாருக்கும் தெரியாது. இது யாருக்காவது தெரிந்தால் சமூகத்தில் அவருக்கு இருக்கும் மதிப்பு என்னாகுமோ என்று மிகவும் பயப்படுகிறார்.

நேற்று கூட இப்படித்தான், திடீரென கை, கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அந்தப் பிரச்சனை வந்தால் உடனே "அந்த" வேலையை முடிக்க வேண்டும் இல்லையென்றால் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது. வேறு எதுவுமே யோசிக்க முடிவதில்லை...

அப்பாடா இன்று வெள்ளிக்கிழமை ஆயிற்று.. சனி, ஞாயிறு இரு நாட்களும் குறைந்தது இரண்டு முறையாவது 'அந்த' வேலையைச் செய்து விடலாம் என்று மிகவும் சந்தோசமாக இருந்தது அவருக்கு. ஆனால் வீட்டுக்குப் போனதும் ஒரு இடி காத்துக்கொண்டு இருந்தது..

"என்னங்க பாப்பா நாளைக்கு sentosa போகனும் ன்னு சொல்லுறாங்க. கூட்டீட்டுப் போகலாம்" என்று அவர் வீட்டுக்குச் சென்றதும் மனைவி கேட்டார். அவரால் மறுக்க முடியவில்லை. மறுத்தால் மனைவிக்குத் தெரிந்துவிடுமே.. அப்புறம் அவ்வளவுதான்.

ஆனால் அவருக்கு பயமாக இருந்தது ஒரு நாள் முழுவதும் தாங்க முடியுமா என்று.. ஆனால் முயன்று பார்க்கலாம் என்று நினைத்தார்.

மறுநாள் காலையில் M.R.T யில் செல்வதாக முடிவெடுத்து M.R.T யில் சென்றனர். ஒரு மணி நேரம் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. மவுண்ட் பேபர் சென்று அங்கிருந்து கேபிள் காரில் செல்ல முடிவெடுத்தனர்.

மவுண்ட் பேவரில் ஒரு நாயைப் பார்த்ததும் அவருக்கு "அந்த" நினைப்பு வந்துவிட்டது.. கை கால் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது.. தனியாகச் சென்று ஒரு தம் இழுத்து கொஞ்சம் மனதை மாற்றி விட்டு வந்தார்...

அடுத்து sentosa சென்ற பின் மாலை வரை சுற்றிப் பார்த்தனர். அது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அவருக்கே சந்தோசமாக இருந்தது அவரால் அதைச் செய்யாமல் ஒரு நாள் முழுவதும் இருக்க முடியும் என....

அப்போது தான் பார்த்தார் அந்த கைகோர்த்துச் சென்ற அந்த இளம் ஜோடியை.. மீண்டும் அவருக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. மனைவியிடம் உடனே கிளம்பச் சொல்லி வீட்டுக்குக் கிளம்பிவிட்டனர்...

"இனி வீட்டில் போய் சமைக்க முடியாது, இங்கேயே சாபபிட்டுவிடலாம்" என்று மனைவி சொன்னதை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டார்.. அவரால் சாப்பிடக்கூட முடியவில்லை.. ஒருவழியாக சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்..

ஏற்கனவே தூங்க ஆரம்பித்திருந்த அவரது மகளை உள்ளே எடுத்துச் சென்று மனைவியும் மகளுடன் சேர்ந்து தூங்க ஆரம்பித்தார்..

அது வரை காத்திருந்த அவர் லேப்டாப்பைத் திறந்து ப்ளாக்கருக்குள் நுழைந்தார். "அந்த இளம் ஜோடி கை கோர்த்து...." என்று "நஒக - இளம் ஜோடி(adults only)" என்ற தலைப்பில் கதை எழுத ஆரம்பித்தார்.

ஆம்... இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு "நச்சென்று ஒரு சிறுகதை"யாவது எழுதவில்லை என்றால் கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது.... யாருக்காவது இதற்கு ஏதாவது வைத்தியம் தெரியுமா???

பின்குறிப்பு:
இந்தக் கதை முழுவதும் கற்பனையே... இதில் வரும் "அவர்" கதாப்பாத்திரம் எந்தப் பதிவரையும் குறிப்பதல்ல....


இந்தக் கதை யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.... சிரிப்பதற்காக மட்டுமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்தக் கதையை இங்கும் பதிந்துள்ளேன்....

Saturday, December 15, 2007

எந்தப் பூவும் அழகல்ல இந்தப் பூவூடன் ஒப்பிட்டால்....

இந்த முறையாவது PIT போட்டியில கலந்து கொள்ள(ல்ல)னும் ன்ன்னு நினைச்சேன்.... ஆனா வேலைப் பளுவால் படங்கள் எதுவும் எடுக்க முடியவில்லை. அதனால் என்னிடம் இருந்த பழய பூக்களைப் பதிவிடுகிறேன்....



இவை போட்டிக்கு அல்ல....



இந்தப் பூக்கள் எல்லாம் பினாங்கில் எடுத்தது....
















இது என் அலுவலகம் அருகில் இருந்த பார்க்கில் எடுத்தது...




ஆனால் போட்டியில் இருக்கும் எந்தப் பூவும் அழகல்ல கீழே இருக்கும் பூவுடன் ஒப்பிட்டால்..... :)))




Thursday, December 6, 2007

எதிர்பாராத திருப்பம்!

இதன் முதல் பாகம்: தப்பா நினச்சுக்குவாளோ?

அவள் இப்படி மறுத்துவிடுவாள் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

நான் அப்படியென்ன கேட்டுவிட்டேன்? அவள் வீட்டு பால்கனியில் இருக்கும் பூக்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்றுதானே கேட்டேன்? இதை ஏன் மறுக்க வேண்டும்?

அவள் ஜுராங் பறவைப் பூங்காவில் வேலை பார்க்கிறாளாம்.. பறவைகளுடன் தினமும் பழகும் அவள் பறவைகளைப் போல இனிய மனமுடையவளாக இருப்பாள் என்று நினைத்துத் தானே அவளுடன் பழகினேன்? அவள் இவ்வளவு கல்நெஞ்சக்காரியாக இருப்பாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அந்த நிகழ்ச்சி நடந்த நாள் முதல் அவளை சந்திப்பதையே முற்றிலும் தவிர்த்துவிட்டேன். அவளுடன் ஜாகிங் போவதையும் நிறுத்திவிட்டேன்.

அண்ணி கூட சமாதானப் படுத்தினாள், "சீனர்களின் செண்டிமெண்ட்டுகள் உனக்குத் தெரியாததா.. பூக்களைப் படம் எடுக்கக் கூடாதென ஏதாவது செண்டிமெண்ட் இருக்குமோ என்னவோ" என்று.. ஆனாலும் என் மனம் சமாதானமடையவில்லை.

அவள் தினமும் காலையில் ஜாகிங் செல்லும்போது என் வீட்டு ஜன்னல் வழியாக நான் வருகிறேனா எனப் பார்ப்பது எனக்குத் தெரிந்தது..ஆனாலும் என் முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

அடுத்த நாள் மாலையில் வீட்டில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் அண்ணி ஒரு கிப்ட் பேக்கை அவள் என்னிடம் கொடுக்கச் சொன்னதாகத் தந்தாள்..

அந்தப் பேக்கில் ஒரு கடிதமும் ஒரு சிடியும் இருந்தது.

டியர் ஸ்வீட் ஹார்ட்,
என் மேல் என்ன கோவம் உனக்கு?

என் வீட்டில் இருக்கும் பூக்கள் அவ்வளவாக நன்றாக இல்லை. அதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன்.
நேற்று புங்கோல் பார்க்குக்கு சென்ற போது எடுத்த அழகிய மலர்கள் இந்த சிடியில் இருக்கிறது. அவற்றைப் போட்டிக்குப் பயன்படுத்திக்கொள். அத்துடன் பேர்ட்ஸ் பார்க்கில் எடுத்த பறவைகள் படங்களும் இருக்கிறது அதை எப்போழுதாவது "பறவைகள்" என்ற தலைப்பில் போட்டி வந்தால் பயன்படுத்திக்கொள்..

நாளை காலையில் ஜாகிங்கிற்கு உன்னை எதிர்பார்க்கிறேன்...


எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.. இவளைப்போய் தப்பாக நினைத்துவிட்டோமே என்று.. மறுநாள் காலையில் 6 மணிக்கே எழுந்து அவளுடன் ஜாகிங் கிளம்பிவிட்டேன்..

என்னைப் பார்த்ததும் புன்னகைத்தாள்..

சாரி... உன் நல்ல மனசைப் புரிஞ்சுக்காமத் தப்பா நினைச்சுட்டேன்...
இட்ஸ் ஒகே.. ஸ்வீட் ஹார்ட்..


என் மேல கோவம் இல்லையே?
நோ மை சைல்ட்... நீயும் என் மகன் மாதிரிதானே.. நான் எப்படி உன்மேல் கோவப்படுவேன்?

தேங்க்யூ ஆண்டி....

என் அம்மாவின் வயதிருக்கும் அந்தச் சீனப் பெண் என் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்தவாறு ஜாகிங் முடித்து வீட்டுக்குக் கிளம்பினேன். இனிமேல் தினமும் அவளுடன் ஜாகிங் செல்வேன்....

இந்தக் கதையை இங்கும் படிக்கலாம்.....

Tuesday, December 4, 2007

நச்சுனு ஒரு கதை - தப்பா நினைக்க மாட்டயே?

அந்தச் சீனப் பெண், என் பக்கத்து வீடு தான் என்றாலும் இது வரை அவளுடன் பேசியதில்லை. எப்போதாவது லிப்ட்டில் இருவரும் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்வோம். அவ்வளவுதான்.

எப்படியாவது அவளிடம் அந்த விசயத்தைப் பேசிவிடவேண்டும் என நினைத்தேன். எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை. அவளுடன் அதிகப் பழக்கமும் இல்லை. அதனால் மெதுவாக அவளுடன் பழக ஆரம்பித்து நன்றாகப் பழகியபின் மெதுவாக விசயத்தை சொல்லலாம் என முடிவு செய்தேன்.

வேறு யாராவது முந்திவிடுவார்களோ பயமாக இருக்கிறது. எதிர் ப்ளாக்கில் இருக்கும் ஆனந்த் வேறு அடிக்கடி அவள் வீட்டு பால்கனியை நோட்டமிட்டுக் கொண்டே இருக்கிறான். ..


இப்பொழுதெல்லாம் அவள் இரவு வீட்டுக்குத் தாமதமாக வருகிறாள். அதனால் அவளை லிப்ட்டில் கூட சந்திக்க முடிவதில்லை. எப்படி அவளை சந்திப்பது என்றே தெரியவில்லை.

வேறு வழியே இல்லை, தினமும் 6 மணிக்கு எழுந்து அவள் ஜாகிங் போகும் போது பின்னாலே செல்ல வேண்டியது தான் என முடிவு செய்தேன்.

முதல் நாளில் அவள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் நானும் வெளியே வந்தேன். மெதுவாக அவளிடம் "hi" சொன்னேன். அவளும் பதிலுக்கு "hi" சொன்னாள். அதற்கு மேல் அவளிடம் பேசமுடிய வில்லை. இதேபோல் 3 நாட்கள் தொடர்ந்தது.

தினமும் ஜாகிங் செல்வதைப் பார்த்து அண்ணிக்கு, என்மேல் சந்தேகம் வந்துவிட்டது. என்னால் அவரிடம் விசயத்தை மறைக்க முடியவில்லை. முழுவதும் சொல்லிவிட்டேன். நான் வேண்டுமானால் பேசிப் பார்க்கட்டுமா என்று அண்ணி கேட்டார். இல்லை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

இப்பொழுதெல்லாம் தினமும் அவளுடன் ஜாகிங் செல்கிறேன்...

இப்படியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் எங்கள் நட்பு வளர்ந்து வந்தது.. ஆனால் அந்த விசயத்தைப் பேச மட்டும் எனக்கு தைரியம் வரவில்லை..

அண்ணி வேறு அடிக்கடி பயமுறுத்துகிறார்.. "உடனே பேசிவிடு. இல்லைன்னா வேறு யாராவது முந்திவிடுவார்கள்" என்று.

எப்படியும் இன்று பேசிவிடவேண்டும் என முடிவு செய்துவிட்டேன். மெதூவாகப் பேசத் தொடங்கினேன்...

hi,

அவளும் பதிலுக்கு hi சொன்னாள்.

நான் உன்னிடம் ஒரு முக்கியமான விசயம் பேசனும்.

சொல்லு என்ன விசயம்..

ஒன்னும் தப்பா நினைக்க மாட்டயே?
இல்லை தப்பா நினைக்க மாட்டேன்.. சொல்லு.

இல்ல... அது வந்து...தப்பா நினைக்கக் கூடாது... உனக்குப் பிடிக்கலைன்னா விட்டுறுவோம்... ஒகேவா?

சரி......... சொல்லித் தொலை...
அது வந்து ... வந்து
................................
.....................................
..........................................
................................................
.....................................................
"PIT" போட்டில இந்த மாதம் தலைப்பு மலர்கள். அதுக்கு உன் வீட்டு பால்கனில இருக்குற பூக்களை போட்டோ எடுத்துக்கலாமா?



'நச்சுனு ஒரு கதை' - போட்டியும், இதுவரை ஆட்டையில் உள்ள பதிவர்களும

பின்குறிப்பு:
இந்தக் கதையில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் முற்றிலும் கற்பனை... கற்பனை.... கற்பனையே!!!!(நேத்து நான் பக்கத்து வீட்டுப் பொண்ணு கிட்ட அவங்க வீட்டுல இருக்குற ரோஜாப்பூவை கிளிக்கிக்கிறலாமா என்று கேட்டதற்கும் அவள் கூடாது என்று சொல்லி என் மூக்கை உடைத்ததற்கும், இந்தக் கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை)

Friday, November 30, 2007

தேவதை தூங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் இதற்கு முன் எப்போதாவது தேவதை தூஙகுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
இதுவரை பார்த்தது இல்லை எனில் இங்கு பார்த்துக்கொள்ளுங்கள்........

எங்க வீட்டு குட்டி தேவதை இப்படித் தான் தூங்குவாங்க....





தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் போது இப்படித்தான் இருப்பாங்க!!!!



Monday, November 26, 2007

பினாங் - kek lok si -புத்த ஆலயம்























*தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய பௌத்த ஆலயம்.
*1890 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இன்று வரை புதிய கட்டுமானப் பணிகள்/ புதுப்பிப்புப் பணிகள் தொடர்கிறது.
*இங்குள்ள ஸ்தூபி "10000 புத்தர்களின் ஸ்தூபி(Wan Fo Pau Ta or The Pagoda of
10 000 Buddhas)" என அழைக்கப்படுகிறது.
*2002 ஆம் வருடம் Kuan Yin (Goddess of Mercy)யின் 30.2மீ உயர வெண்கலச் சிலை அமைக்கப் பட்டுள்ள்ளது
*இரு தியான மண்டபங்கள் உள்ளது(ஒன்று பழையது ஒன்று புதியது)
*புத்தரின் பிரதான சிலை புதிய மண்டபத்தில் உள்ளது.

Sunday, November 18, 2007

மாண்புமிகு வேலைக்காரர் முனியப்பர்

நான் ஆணாதிக்கவாதி இல்லைன்னு நிரூபிக்க எனக்கு வேறு வழி எதுவும் தெரியாததால் இந்தப் பதிவை இடுகிறேன். நம்ம மை ஃபிரண்ட் அக்கா "மாண்புமிகு வேலைக்காரி முனியம்மா" ன்னு ஒரு பதிவு போட்டாங்க. நானும் அதப்படித்து ரசித்து நல்லா இருக்குன்னு கமெண்ட் வேற போட்டுட்டேன்.

அப்புறமாப் பாத்தா, "இம்மாதிரி ஜோக்குகள் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே" ன்னு கடுமையான கண்டனங்கள் எல்லாம் அந்தப் பதிவுக்குத் தெரிவிச்சுருக்காங்க. அந்தப் பதிவுக்கு கமெண்ட் போட்டதால எனக்கும் யாராவது "ஆணாதிக்கவாதி" பட்டம் தந்துவிடக் கூடாது என்பதற்காக சில வேலைக்காரன் ஜோக்ஸ்(நெட்ல சுட்டது தான்)...

நம்ம முனியப்பர் இப்பத்தாங்க புதுசா ஒரு வீட்டுல வேலைக்குச் சேந்துருக்கார்..
முதலாளி: என் மேசை மேல பாத்தியா ஒரு மாத தூசி படிஞ்சிருக்கும் போலத் தெரியுது?
முனியப்பர்
: அது என் தப்பு இல்ல எஜமான். நான் வேலைக்குச் சேந்தே ஒரு வாரம் தான் ஆகுது
*************
முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்ணி ஊத்தியாச்சா?
முனியப்பர்:
ஐயா! நல்ல மழை பெஞ்சுக்கிட்டு இருக்கு.
முதலாளி:
அதனால என்ன குடை பிடிச்சுக்கிட்டு ஊத்து!

**************
முனியப்பர் கடைல வெங்காயம் வாங்கப் போறார்....
கடைக்காரரே, ஒரு பத்து கிலோ வெங்காயம், சின்னச் சின்ன வெங்காயமாப் போடுங்க. பெருசா இருந்தா ரெம்ப கனமா இருக்கும். தூக்க முடியாது!!!!!!
*****************************
முனியப்பர் புதுசா ஒரு கடைல வேலைக்குச் சேந்துருக்கார்....
முதலாளி: என்னடா டின்ல எண்ணை குறையுது?
முனியப்பர்: டின் அடியில சின்ன ஓட்டை இருந்துருக்கு, கவனிக்காம விட்டுட்டேன்..
முதலாளி:
டேய்.. டின் மேல தான எண்ணை குறையுது. அடியில் ஓட்டைன்னு கதை விட்டு ஏமாற்றவா பாக்குற?
*****************************
ஒரு கடைக்கு நைட் வாட்ச்மேன் வேலை கேட்டுப் போறாரு நம்ம முனியப்பர்...

முதலாளி: நைட் வாட்ச்மேன் வேலை கேக்குறயே.. உனக்கு அனுபவம் இருக்கா?
முனியப்பர்:
என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. நைட் தூங்குறப்ப சின்னச் சத்தம் கேட்டாலும் எந்திரிச்சுருவேன்!!!

***************************************************************

நான் ஆணாதிக்கவாதி இல்லை! இல்லை! இல்லை!!!!!!!!!!!!!!

Thursday, November 15, 2007

தினமலர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.

விக்கிபீடியாவில் பீகாரைப் பற்றிப் பதிவாகியுள்ள ஒரு தவறான தகவலுக்கு என் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தினமலர் ஒரு "தரமான நடுநிலை" நாளிதழ் என்பதும் அதில் வரும் செய்திகளில் எந்த ஒரு சிறு தவறும் இருக்காது என்பதும் அனைவரும் அறிந்ததுதான்.
தினமலரின் நேற்றய(நவம்பர்-14,2007) இந்த

வரம்பு மீறினாரா மேற்கு வங்க கவர்னர்?......

செய்தியில் 2004இல் பீகாரின் முதல்வர் "லாலு பிரசாத்" எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.



ஆனால் விக்கிபீடியா அப்போது முதல்வர் "ரப்ரி தேவி" என்று தவறான தகவல் தந்துள்ளது.



தினமலரின் செய்தி எந்த விதத்திலும் தவறாக இருக்கமுடியாது. எனவே விக்கிபீடியாவில் இந்தத் தகவலைத் தவறாகப் பதிவு செய்தவருக்கு என் கடுமையான கண்டனங்கள்!

ஒருவேளை உண்மையிலேயே அப்போது ரப்ரிதான் முதல்வர் எனில், அவ்வாறு நடந்ததற்கு வரலாறு தினமலரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும்.(ஏற்கனவே டைம்ஸ் ஆப்பு இந்தியாவிடம் கேட்டதைப் போல்.)
********************************************
தினமலரில் நவம்பர்-13, 2007 அன்று வந்த
http://manuneedhi.blogspot.com/2007/11/blog-post_13.htm இந்த செய்தியும் முழுக்க உண்மை என்பதையும், ஒன்றைப் பத்தாகவும், பத்தை நூறாகவும் ஆக்கும் தினமலரின் "கற்பனைத் திறன்" இதில் இல்லை என்பதையும் அனைவரும் நம்புமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...(தினமலர் சுட்டி கிடைக்கவில்லை.. அதனால் தினமலரில் இருந்து "தமிழன்" என்னும் வலைப்பதிவில் copy & past செய்திருந்த லின்க் தந்துள்ளேன்.. )
நன்றி: தமிழன், தினமலர்

Tuesday, November 13, 2007

குலக்கல்வி தொழிற்கல்வியா?

மூதறிஞர் ராஜாஜி அவர்கள் புதிய கல்விக் கொள்கையைக்(குல கல்வித் திட்டம்) கொண்டு வந்த போது, நான் பிறக்கவே இல்லை. அது பற்றி நான் அறிந்த விவரங்கள், புத்தகங்கள் மூலமாகவும், அந்தத் தலைமுறையினர் மூலமாகவும் அறிந்து கொண்டவை மட்டுமே.
இத்திட்டம் பற்றி நான் புரிந்து கொண்டது:
**தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே கல்வி.
**மீதி நேரம் அப்பா/குடும்பத்தினர்
செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளலாம், இல்லையேல் கட்டாயமில்லை, வேறு தொழிலும் பழகலாம்.

இது குறித்து வெளியாகியுள்ள பல பதிவுகளும்(இத்திட்டத்திற்கு ஆதரவானவர்கள் எழுதியதும், எதிர்ப்பவர்கள் எழுதியதும்), என் புரிதல் சரி என்பதையே உறுதி செய்கிறது.

ஆனால் திரு.ஜீவி அவர்கள் தன் மறக்கமுடியாத மதுரை நினைவுகள் -2 பதிவில்,

பள்ளிகளில் வழக்கத்தில் இருந்த கைத்தொழில்/குடியுரிமைப் பயிற்சி வகுப்புகளே, "குலக்கல்வித் திட்டம்" என்று தெரிவித்துள்ளார்.
**வாரத்தில் இரண்டு வகுப்புகள்(பீரியட்) மட்டுமே இந்த வகுப்புகள் இருக்கும்.
**இதற்கான பயிற்சி பள்ளியில் வழங்கப் படும்.
(நான் படித்த போது எங்கள்பள்ளியில் [6 முதல் 10வரை படித்த அரசு உயர்நிலைப்பள்ளியில்] விவசாய வகுப்புகளும், நீதிபோதனை வகுப்புகளும் இருந்தது. என் தம்பி படித்த நடுநிலைப் பள்ளியில் தச்சுக்கலை(க்ராப்ட்) மற்றும் நெசவு வகுப்புகள் இருந்தன. நான் 10வகுப்பு முடித்தது 1996ம் வருடம்)

ஆனால் நான் அறிந்த வரையில் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தின் படி,
ஒரு நாளில் 3 மணி நேரம் மட்டுமே பள்ளி நடக்கும்.மீதமுள்ள நேரத்தில் தன் குடும்பத்தொழில்/ வேறு தொழில்கள் செய்துகொள்ளலாம்.
இதற்க்குப் பள்ளிகளில் எந்த வகுப்புகளும் கிடையாது. மதிப்பெண் எதுவும் கிடையாது.


திரு.ஜீவி அவர்கள் கைத்தொழில் வகுப்புகளையும், குலக்கல்வித் திட்டத்தையும் குழப்பிக்கொள்கிறாரா, அல்லது வேண்டுமென்றே தவறான ஒரு தகவலைத் தருகிறாரா என்று தெரியவில்லை.

*************************************

இனி குலக் கல்வித் திட்டம் பற்றி:
ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்த போது[1952-1954] இருந்த நிதி நெருக்கடியின் காரணமாக, சுமார் 6000 பள்ளிகளை மூடிவிட்டு மீதமுள்ள பள்ளிகளில் காலை 3 மணி நேரம் ஒரு பகுதி, மாணவர்களுக்கும், மாலை 3 மணி நேரம் ஒரு பகுதி மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தத் தொடங்கப்பட்ட திட்டம் தான் இது.

மீதமுள்ள நேரம் மாணவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தபோது(மாற்றுக் கருத்து கொண்டவர்கள் எழுப்பியபோது) அவர் தெரிவித்தது தான், இந்த "குடும்பத்தினர் செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளலாம் இல்லையேல் கட்டாயமில்லை, வேறு தொழிலும் பழகலாம்."

இத்திட்டம் கொண்டுவரப்பட்ட நேரத்தில்:
**சில நூற்றாண்டுகளாகப் படிப்புரிமை மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட வகுப்பினரில் 70%க்கும் மேற்பட்டோர் முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருந்தனர்.

**முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 70%க்கும் மேற்பட்டோர் பல தலைமுறைகள் கல்வி கற்று நல்ல வேலைகளில் இருந்தனர்.(அரசுப் பணிகளில்
70%க்கும் மேல் இருந்தனர்.)


இத்திட்டம் செயல்படுத்தப் பட்டிருந்தால்

**முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும், பெற்றோர் குலத்தொழில் புரியும் 70% மாணவர்கள், தங்கள் தந்தை செய்யும் தொழில் மட்டுமே கற்றிருக்க முடியும். கல்வியறிவற்ற தந்தைகள் அவர்களுக்கு வேறு எந்தப் பயிற்சியும் அளிக்க முடியாது. வீட்டில் பெற்றோர் எதுவும் சொல்லித்தர முடியாத நிலையில் 3 மணி நேரக் கல்வியால் அவர்கள் என்ன கற்றுக் கொண்டிருக்க முடியும்?

**முந்தய தலைமுறைகளில் இருந்து நல்ல கல்வியறிவு பெற்ற, உயர் வகுப்பினர், தன் பிள்ளைகளுக்குத் தேவையான பயிற்சிகள் தந்திருப்பர். "வெள்ளைக் காலர் பணி"களுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப் பட்டிருக்கும். இவர்களுக்கு, அந்த 3 மணி நேரக் கல்வி தவிர பல பயிற்சிகள் இவர்கள் பெற்றோர்களிடமிருந்து கிடைத்திருக்கும்.



இவ்வாறு இருக்கும்போது எப்படி முதல் தலைமுறையாகக் கல்வி கற்றவர்கள் பலதலைமுறையாக நல்லநிலையில் இருப்பவர்களிடம் போட்டியிட்டு வேலைகள் பெற்றிருக்கமுடியும்? இத்திட்டம் செயல்பட்டிருந்தால் அரசுப்பணிகள், மருத்துவம், பொறியியல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் முற்படுத்தப் பட்ட மக்களின் ஆதிக்கம் இன்னும் இருந்து கொண்டுதானே இருக்கும்? விவசாயி மகன் விவசாயியாகவும், துணி துவைப்பவர் மகன் துணி
துவைப்பவருமாகத் தானே இருந்திருக்க முடியும்? இத்திட்டத்தை பெரியார், காமராசர் முதல் சாதாரண மக்கள் வரை
எதிர்த்ததில் என்ன தவறு இருக்கிறது?

----------------------
ராஜாஜி அவர்களுக்கு "அப்பன் வேலையத் தான் பிள்ளை செய்யவேண்டும்" என்ற உள்நோக்கம் இல்லை என்றே வைத்துக்கொண்டாலும்,

இத்திட்டம் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கக் கொண்டுவரப்பட்டது எனில்,
ராஜாஜிக்குப் பின்வந்த கர்மவீரர் காமராசரால் எப்படி
மூடப்பட்ட 6000 பள்ளிகளையும் திறந்து அதற்கு மேலும் புதிய பள்ளிகள் திறக்க முடிந்தது?
(என் அம்மா, அப்பா 10ஆம் வகுப்பு வரை படித்ததும், அவர்கள் எங்களைப் பட்டப்படிப்புகள் வரை படிக்கவைத்ததும் காமராசரால் தான். இது எனக்கு மட்டுமில்லை, என் தலைமுறையில் இருக்கும் பெரும்பாண்மையோருக்கும் இது பொருந்தும்)


பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தவர்கள், மூன்று மணி நேரமாவது பள்ளிகளுக்கு அனுப்புவார்கள் என்பதற்காக கொண்டுவரப்பட்டதென்றால்
காமராசரால் மதிய உணவுத்திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களையும் முழுநேரமும் பள்ளிக்குக் கொண்டு வரமுடிந்ததே?

இதில் யார் சிறந்த நிர்வாகி?
6000 பள்ளிகளை மூடிய ராஜாஜியா?
இல்லை கல்விக்கண் திறந்த கர்மவீரரா?

*************************************
அடுத்த பதிவு: ராஜாஜி மூதறிஞரா?
(ஒன்று அல்லது இரண்டு வாரங்களில்)
இதுவும் ஜீவி அவர்களின் அதே பதிவில் கேட்டிருந்த கேள்விக்குப் பதில் தான்.
//
குலக்கல்விக்கு வித்திட்டவர் என்று கூசாமல் சொன்ன வாயால், அவரையே 'மூதறிஞர்' என்று எப்படிப்புகழ்பாட முடிகிறது என்பது புரியவில்லை. மூதறிஞர் என்று அவரை அழைக்கும் அளவுக்கு அவருக்கு என்ன நன்றிக்கடன் பட்டிருக்கிறார்களோ,அதுவும் தெரியவில்லை.
//
இந்த வரிகளை, ஜீவி அவர்கள் பெரிதும் மதிப்பதாகக் கூறும் பெரியார் மீதும், காமராசர் மீதும்,
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்த மற்ற தலைவர்களின் மீதும் பரப்பப்படும் அவதூறாகவே கருதமுடிகிறது.
இதற்கு என் அடுத்த பதிவில் பதில் தருகிறேன்.



தொடர்பான சில சுட்டிகள்:
ஜீவி அவர்களின் பதிவு: http://jeeveeji.blogspot.com/2007/11/2.html
திரு அவர்களின் பதிவு: http://aalamaram.blogspot.com/2006/08/blog-post_11.html
விக்கிப்பீடியாவில்: http://en.wikipedia.org/wiki/Hereditary_Education_Policy
இதையும் பாருங்கள்: http://www.geocities.com/tamiltribune/07/1102.html

Sunday, October 28, 2007

பதில் சொல்லுங்கள்! பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்!!!!!!

1. இந்தியாவின் தலைநகர் எது?
அ. புது டெல்லி
ஆ. புது ஜல்லி

2. பாரதப் பிரதமர் யார்?
அ. மன்மோகன்சிங்
ஆ. கல்மோகன்சிங்

பதில்களைப் பின்னூட்டங்களாக இடுங்கள்!! பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்!!!
:)

டிஸ்கி:
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் புதுமைகள் பல புகுத்திவரும் ஒரு தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும்(கீழே சிவப்பு எழுத்துக்களில்) இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்படி யாராவது சந்தேகப் பட்டால் நான் பொறுப்பல்ல.

தெர்மாமீட்டரில் இருக்கும் திரவத்தின் பெயர் என்ன?
அ.பாதரசம்
ஆ.மிளகு ரசம்

பிரசாந்த், ஐஸ்வர்யாராய் சேர்ந்து நடித்த படத்தின் பெயர் என்ன?
அ.ஜீன்ஸ்
ஆ.பெர்முடாஸ்.

அமெரிக்காவின் official building எது?
அ.White House
ஆ.Rest House
(நன்றி: அவந்திகா)

sharu Khan நடிச்ச படம் எது?
அ.கபி குஷி கபி கம்
ஆ.பபிள் கம்?
(நன்றி: அவந்திகா)

Thursday, October 25, 2007

தீபாவளி

டேய் ராமு, எங்க வீட்டுல தீவாளிக்கு எல்லாருக்கும் ட்ரெஸ் எடுத்தாச்சு. எனக்கு ரெண்டு பேண்ட்டு, சட்ட. உனக்கு ட்ரெஸ் எடுத்தாச்சா?

இல்லடா சோமு, எங்க அப்பாக்கு ஃபயர்ஆபீசுல இன்னும் 10 நாள் கழிச்சுதா போனஸ் போடுவாக. அதுக்கு அடுத்து தான் ட்ரெஸ் எடுக்கனும். எனக்கும் 2 செட் ட்ரெஸ் கேட்டுருக்கே. எங்கப்பா வாங்கித் தருவாரு.

எங்கப்பாட்ட நா கம்பிமத்தாப்பு, புஸ்வானம், ராக்கட்டு இன்னும் ரெம்ப வேட்டு கேட்டுருக்கேன். அவரு தீவாளிக்கு ஒருவாரத்துக்கு முன்னாடி எல்லா வாங்கித் தரேன்னு சொல்லிருக்காரு. -சோமு

எங்கப்பா, அம்மா ரெண்டு பேத்துக்கும் ஃபயர்ஆபீசுலயே ரெம்ப வேட்டு தருவாங்க. எனக்கு அது போதும். -ராமு.
-----------------------------
டேய் ராமு வேகமாப் படிச்சு முடிச்சுட்டு வந்து தூங்கு ராசா.

இதோ வந்துட்டேம்பா.
யப்பா, சோமு வீட்டுலயெல்லாம் ட்ரெஸ் எடுத்துட்டாங்களாம்ப்பா. எனக்கு எப்ப எடுத்துத் தருவ?

போனஸ் போட்டவுடனே வாங்கித்தற்றேண்டா கண்ணா..

சரிப்பா எனக்கு 2 ட்ரெஸ் வேணும். அவங்கப்பா அவனுக்கு ரெம்ப வேட்டு வாங்கித் தருவாராம்.

எனக்கு, உங்கம்மாவுக்கு ரெண்டு பேருக்குமே ஆபீஸ்ல வேட்டு தருவாங்கல்ல. அது பூரா உனக்குத்தான? இப்ப பேசாம படுத்துத் தூங்கு.
------------------------------
டே ராமு எந்திரிடா.
என்னம்மா இன்னு விடியலயே.. அதுக்குள்ள எதுக்கு எழுப்புற?

இன்னக்கி வேலக்கி வேகமாப் போகனுண்டா. சோறு காச்சி வச்சிருக்கேண்டா. சாப்புட்டு ஸ்கூலுக்குப் போ. சாவிய பாட்டி வீட்ல குடுத்துட்டுப் போ.

சரிம்மா போய்ட்டு வா.
-------------------------------
பத்திரிக்கைச் செய்தி:
சிவகாசி அருகே உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன் மரணம், மனைவி படுகாயம்.........

-------------------------------
டே ராமு, தண்ணி கொண்டாடா குடிக்க.

நீ எந்திரிக்காதம்மா. நா அங்கயே கொண்டுவரேன்.

சரிடா குடுத்துட்டு, சோமு வீட்டுக்குப் போ அங்க வேட்டு போட்டுட்டு இருப்பாங்க. போய்ப் பார்ரு.

இல்லம்மா நா போகல.
-------------------------------
டேய் சோமு, ராமு பாவண்டா. அவனப் போயிக் கூட்டீட்டு வா, ரெண்டு பேரு ஒன்னா வேட்டுப் போடுங்க.

சரிப்பா நா போயிக் கூட்டீட்டு வரேன்.

டே ராமு, வாடா வேட்டுப் போடலாம். எங்கப்பா கூட்டீட்டு வரச்சொன்னாரு உன்னய.
இல்லடா சோமு நா வரல.

ராமு, போப்பா. சும்மாப் போயி வேடிக்கயாவது பாரு.
சரிம்மா போறேன்.
--------------------------------
டேய் ராமு, இன்னும் நீ ஸ்கூலுக்குக் கிளம்பலயாடா. நாங்கெளம்பிட்டேன். வேகமாக் கெளம்புடா போகலாம்.

இல்லடா, இன்னைலருந்து நா ஃபயராபீசுக்கு வேலைக்குப் போகப் போறேன். நீ கெளம்பு.

பள்ளிக்குச் செல்லும் சோமுவை ஏக்கத்துடன் பார்த்த்துக் கொண்டே வேலைக்குக் கிளம்பினான் ராமு...
*****************************************
சில தகவல்கள்:

* சிவகாசி, சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 500க்கும் மேல். இவற்றின் மொத்த உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு சுமார் ரூ.400கோடிக்கு மேல்.

*இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 90% இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

* இவற்றில் 40% மேற்பட்ட தொழிற்சாலைகள் முறையான அனுமதி பெறாதவை. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாதவை 60% க்கும் மேல். பாதுகாப்பான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் 20% தொழிற்சாலைகளில் மட்டுமே உள்ளது.

* ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கானோர் தீ விபத்துக்களில் மரணமடைகின்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் தீ விபத்துக்கான சிகிச்சைகளுக்கு எந்த வசதியும் இல்லாததால், காயமடைபவர்கள் மதுரை அரசு மருத்துவமனக்கே எடுத்துச் செல்லப்படுகின்றனர்.(சிவகாசியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர்).

* இத்தொழிற்சாலைகளில் பணி புரிவோர் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல்(நேரடியாகவும்/மறைமுகமாகவும்). இவர்களின் ஒருநாள் ஊதியம் அதிகபட்சம் 50ரூபாய்.
இதில் ஆயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்களும் அடக்கம்.

* இத்தொழிலாளர்களுக்கென தனி அமைப்பு, தொழிற்சங்கங்கள் ஏதும் இல்லை.

Monday, October 22, 2007

லக்கிலுக் VS இலைக்காரன்









VS



வலையுலகில் அஇஅதிமுக வின் கொள்கை பரப்புச் செயலாலராகவும், 80 கோடி இந்துக்களின் குரலை ஒலிப்பவராகவும் திகழ்பவர், ஸ்ரீராம பக்தரான ஸ்ரீமான். இலைக்காரன் என்பவர். இவர் அம்மாவின் புகழைப் பரப்ப நடத்தும் வலைப்பூ "அம்மான்னா சும்மாவா"

திமுகவின் கொ.ப.செ யாகத் திகழ்பவர் திரு.லக்கிலுக் அவர்கள். இவர் நடத்தும் வலைப்பூ "சும்மா டைம்பாஸ் மச்சி". மேலும் டாக்டர் கலைஞர் உட்பட பல வலைப்பூக்களில் உறுப்பினராகவும் உள்ளார்.

பதிவுலகில் நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கும் விவாதம் லக்கிலுக்கும் இலைக்காரரும் ஒரே பதிவரா இல்லையா என்பது தான்.
இது குறித்து பல புகார்கள் வந்ததை அடுத்து வலையுலக புலனாய்வு அமைப்பான BBI(Bureau of Blogging Invistigation) தனது புலனாய்வைத் தொடங்கியது.

புலனாய்வின் முடிவில் இருவரும் வெவ்வேறு பதிவர்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் BBIக்குக் கிடைத்துள்ளன. பதிவர்களைப் பற்றிய விவரங்களைப் பாதுகாப்பது BBI யின் கடமை என்பதால் இது குறித்த ஆதாரங்களை வெளியிட முடியாது.

இந்தப் புலனாய்வின் போது அதிர்ச்சிகரமான பல உண்மைகளை BBI கண்டுபிடித்துள்ளது. அது குறித்த BBI யின் அறிக்கை கீழே.

*****************************************


இலைக்காரரின் பதிவு அதிமுக மற்றும் பல இந்து அமைப்புகளைக் கிண்டல் செய்வதற்காக நடத்தப்படும் வலைப்பூ என்பது பல பதிவர்களின் கருத்து. இந்த விசாரனையின் போது அது உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது.

அதிமுக, இந்து அமைப்புகள் மற்றும் ஸ்ரீராமர் ஆகியோரைக் கிண்டல் செய்யும் படியாக சில பதிவுகளை எழுதி அதன் மூலம் திராவிடப் பதிவர்களைத் தன் பதிவை வாசிக்க வைக்கிறார். பின் திம்மிகள் என்று இவர் அன்புடன் அழைக்கும் திராவிடப் பதிவர்களைத் தன் வலையில் விழ வைத்து தன் கட்சியில் சேர்த்து விடுகிறார்.

இதற்கு நல்ல உதாரணம் திராவிடப் பதிவர் என்று அறியப்பட்ட லக்கிலுக் அவர்களின் சமீபத்திய மாற்றங்கள். அவரது கடைசிப் பதிவில் கூட இதைப் பார்க்கலாம்.
அடுத்த உதாரணம் பகுத்தறிவுப் பதிவர் கோவி.கண்ணன் அவர்கள். புரட்ச்சிதலைவி பற்றிய இவரது கடைசி சில பதிவுகளைப் பார்ப்பவர்களுக்குப் புரியும். இவர்கள் இருவரும் இலைக்காரன் பதிவில் அடிக்கடி பின்னூட்டம் இடுபவர்கள் அனைவரும் அறிந்தது தான்.

சமீபத்தில் இலைக்காரனுக்கு உதவியாக ஒரு "சாணக்கியன்" என்னும் புதிய பதிவர் ஒருவரும் வந்துள்ளார். இவரும் இலையாரின் வழியில் இந்து அமைப்புகளைக் கிண்டல் செய்து சில பதிவுகளை வெளியிட்டு, ஒரு திராவிடப் பதிவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் உண்மையில் இவரும் இலைக்காரனுடன் இணைந்து 80 கோடி இந்துக்களுக்காகக் குரல் கொடுக்க வந்துள்ள ஒரு பதிவரே ஆவார்.(கோவியார் கூட சமீபத்தில் இலைக்காரரின் வழிகாட்டுதலின் படி, இந்தப் பதிவில் பின்னூட்டியிருக்கிறார்.)

இவர்களின் வலையில் விழாமல் ஜாக்கிரதையாக இருக்கும்படி அனைத்துப் பதிவர்களையும் BBI கேட்டுக்கொள்கிறது.


*****************************************

டிஸ்கி1: சிறிது நாட்களாக "நீங்கள் தான் இலைக்காரனா?" என்று லக்கிலுக்கைக் கேட்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதாம். அதனால் இது போன்ற ஒரு பதிவு இட்டால், இனிமேல் என் ஒவ்வொரு பதிவிலும் 10 பின்னூட்டங்கள் இடுவதாக லக்கி வாக்களித்துள்ளார். அதனால் தான் நான் இந்தப் பதிவை இட்டுள்ளேன். அதை அவர் செயல்படுத்துவார் என நம்புகிறேன்.
(இலைக்காரன் எழுதுவது போன்று ஒரு பதிவு எழுதினால், அங்கு கூட யாரும் வந்து "நீங்கள் தான் இலைக்காரனா" என்று நேரடியாக லக்கியை கேட்கவில்லையாம்...)

டிஸ்கி2: இது சீரியஸ் பதிவு என்பதால் கோவி.கண்ணன், லக்கிலுக் மற்றும்/அல்லது இலைக்காரன் ஆகியோர் தங்களைக் கலாய்ப்பதாகத் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என நம்புகிறேன்.

டிஸ்கி3: இது லக்கிலுக் அவர்களின் சீரியஸ் பதிவைப் போல மிகவும் நீளமான பதிவாகிவிட்டதால், இன்னும் இருக்கும் பல டிஸ்கிகளைத் தனிப் பதிவாகத் தருகிறேன்.

Tuesday, October 16, 2007

மீன் வேண்டாம். மீன் பிடிக்கக் கற்றுத் தாருங்கள்!

பசி என்று வரும் ஒருவனுக்கு சாப்பிட மீன் தருவதை விட அவருக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவது சிறந்தது.
பசியைப் போக்க மீன் தந்துவிட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவது அதை விட சிறந்தது.


தமிழக அரசின் "இலவசங்கள்" இது போன்ற பசியைப் போக்க மீன் தருவது போலவே ஆகும். ஆனால் மீன் பிடிக்கக் கற்றுத் தரும் திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.(சென்ற அரசு மீனும் தரவில்லை, மீன் பிடிக்கக் கற்றும் தரவில்லை என்பது வேறு விசயம்...)

இப்படிப் பட்ட திட்டங்களில் ஒன்று தான் கலைஞர் அவர்களின்
"ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு விமான பணிப் பெண் பயிற்சி" தரும் திட்டம்.

இது குறித்த தட்ஸ்தமிழ் செய்தி இங்கே
இது குறித்து பதிவர் உடன்பிறப்பு அவர்களின் இடுகை இங்கே

தமிழகத்துக்குத் தேவை "இலவசங்கள்" அல்ல. இது போன்ற திட்டங்கள் தான்.

எடுத்துக்காட்டாக,
அனைத்து விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ததில் அரசுக்கு இழப்பு ரூ6866 கோடி. இதில் ஏழை விவசாயிகளின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்திருக்கலாம். பணக்கார விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ததற்குப் பதில் அந்தப் பணத்தில் இனிமேல் விவசாயிகளுக்கு நட்டம் வராமல் தடுக்கும் முறைகளை ஆராய்வதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.


வேலையில்லா இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்குவதற்குப் பதில் அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சுயதொழில் தொடங்கவும் திட்டங்கள் தீட்டலாம்.(உதவித்தொகை பசிக்கு மீன் தருவது போல் தான். அது மட்டும் போதாது)

"விமான பணிப் பெண் பயிற்சி" திட்டம் போல மீன் பிடிக்கக் கற்றுத்தரும் வகையான திட்டங்கள் பல கலைஞர் அவர்கள் தருவார் என நம்புவோம்.

காட்டுமிராண்டித்தனம். :(

தலித் வழக்கறிஞரின் வாயில் மலம் திணிப்பு-மதுரையில் கொடுமை

மதுரையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரின் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது. இந்த மகா பாதகச் செயலைச் செய்த பாமக செயலாளர் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை சமயநல்லூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளவனுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது மோதல் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் சுரேஷ் தனியே சென்றபோது அவரை வழிமறித்த கிள்ளிவளவன் மற்றும் மதுரை பாமக மாவட்ட செயலாளர் கிட்டு ஆகியோர் கொண்ட கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளது. அத்தோடு விடாமல் அவரது வாயில் மலத்தையும் திணித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சுரேஷ் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளன் மற்றும் அவரது அடியாட்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் பாமக மாவட்ட செயலாளர் கிட்டுவை போலீசார் கைது செய்யவில்லை. இந் நிலையில் பாமக தலைவர் ஜிகே மணி மதுரை வந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர் பாமக செயலாளரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார்.

:(
நன்றி: தட்ஸ்தமிழ்.

Sunday, October 7, 2007

சத்ரு சம்ஹார யாகம்.....

உங்கள் எதிரிகளை அழிக்க வேண்டுமா? வாங்க சத்ரு சம்ஹார யாகம் நடத்துவோம்...



""சத்ரு சம்ஹார யாகம்' பலமா நடந்துண்டு இருக் கறது ஓய்... அதனால தான் சென்னைக்கு வர முடியலை...!'' என்று பேச்சை துவக்கினார் குப்பண்ணா.

""அது என்ன சத்ரு சம்சார யாகம்ன்னு சொல்லும் வே...'' என்று கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

""வம்பா போச்சு ஓய்... சத்ரு சம்சார யாகம் இல்லை... "சத்ரு சம்ஹார யாகம்'ன்னு சொன்னேன்... அதாவது எதிரிகளை அழிக்கற யாகம்... நடக்கறது எங்கே தெரியுமோ... ஊட்டி மலையில... இப்ப புரியறதா...'' என்றார் குப்பண்ணா.

""புரியுது... அந்த யாகம் நடத்தினா என்ன நடக்கும் வே...'' என்று கேட்டார் அண்ணாச்சி.

""போன ஜூன் மாசம் யாகம் நடந்தப்ப, அறிவாலயத் தலைவர் குடும்பத்துல பிரச்னை வந்து பெரும் பிளவு ஏற்பட்டது... சில நாளைக்கு முன்னால நடத்திய யாகத்தால சுப்ரீம் கோர்ட்ல கெட்ட பெயர் வந்தது... அதனால, சென்னைக்கு திரும்பறதா இருந்த புரோகிராமை "கேன்சல்' பண்ணிட்டு யாகத்தை திரும்ப "ஸ்டார்ட்' பண்ணச் சொல்லிட்டாங்க... யாகத்தை மேலும் தீவிரப்படுத்தி நடத்திண்டிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

(தினமலர், அக்டோபர்-7-2007)


இதைப் பார்த்து சிரிப்பதா? கோவப்படுவதா? இல்லை இவர்களைப் பார்த்து வருத்தப் படுவதா?

நீங்களும் இங்க போயி படிச்சு சிரிங்க...

Sunday, September 23, 2007

வேதாந்தியைக் கைவிட்ட வேதாந்தம்.....

முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்து வி.எச்.பியைச் சேர்ந்த சாமியார் வேதாந்தி பேசியிருப்பதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாஜகவும், வி.எச்.பியும் கூறியுள்ளன.

முதல்வர் குறித்துக் கூட அயோத்தியைச் சேர்ந்த யாரோ ஒருவர் இதுபோன்ற வார்த்தைகளைப் பிரயோகித்தது கூட நான் அறிந்தேன். அவருக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது கருத்துக்கள் பாஜகவின் கருத்துக்களும் அல்ல. அதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
-இல.கணேசன்.


பாஜக சார்பில் இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சில நாடாளுமன்றக் குழுக்களின் உறுப்பினராகவும் இருந்தவர், திடீரென்று பாஜகவுக்கு சம்பந்தமில்லாத யாரோ ஒருவரானது எப்படி?

இதுகுறித்துக் கூறுகையில், வேதாந்தி வி.எச்.பி. அமைப்பில் உறுப்பினராகக் கூட இல்லை. அவரது கருத்து வி.எச்.பியின் கருத்து கிடையாது, அது அவரது சொந்தக் கருத்து.
-வி.எச்.பி. அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம்


வி.எச்.பி யின் ஒரு மண்டலத் தலைவர் திடீரென்று அந்த அமைப்பில் உறுப்பினராகக் கூட இல்லாமல் போனது எப்படி?

நன்றி- தட்ஸ் தமிழ்.

முழு செய்திக்கு -வேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தமில்லை - பாஜக, வி.எச்.பி.

வேதாந்தியின் பல்டி: நான் ஃபாத்வா விதிக்கவில்லை - வேதாந்தி பல்டி

Friday, September 21, 2007

இறைவன் எல்லாம் வல்லவனா?

இறைவனின் இயல்புகளில் முக்கியமான ஒன்றாகக் கூறப்படுவது, அவனின் வல்லமை.-"அவன் எல்லாம் வல்லவன்". அவனால் முடியாதது ஒன்றுமே இல்லை.

இறைவனின் இந்த இயல்புக்கு எதிராக இறை மறுப்பாளர்கள் வைக்கும் முக்கிய வாதம்:

இறைவன் எல்லாம் வல்லவன் எனில்,
"அவனால் தூக்கமுடியாத அளவு பெரிய கல் ஒன்றை அவனால் உருவாக்க முடியுமா?"

அவனால் அப்படிப்பட்ட கல்லை உருவாக்க முடியும் எனில்:
அவன் உருவாக்கிய கல்லைத் தூக்க முடியாதவன் எப்படி "எல்லாம் வல்லவன்" ஆகமுடியும்?

அவனால் அப்படிப்பட்ட கல்லை உருவாக்க முடியாது எனில்:
அதை உருவாக்க முடியாதவன் எப்படி "எல்லாம் வல்லவன்" ஆகமுடியும்?

எனவே "இறைவன் எல்லாம் வல்லவன்" என்னும் கூற்று எப்படி உண்மையாக இருக்க முடியும்?

Tuesday, September 11, 2007

மினி சந்திப்பு- கோவி.கண்ணன் சொல்ல மறந்தவை மட்டும்..

"நட்புகளை உண்டாக்கிக் கொள்ளுதல் போன்ற சிறந்தது வேறு எதுவும் உலகில் இல்லை", என்கிறார் வள்ளுவர்.

நேற்று புதிய நண்பர்கள் இருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்பின் போது பேசியவை/விவாதித்தவை பற்றி கோவி.கண்ணன் விரிவான பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவின் சுட்டி: பதிவர்கள் இருவருடன் ஒரு மினி சந்திப்பு

கோவி.கண்ணன் அவர்கள் சொல்ல மறந்த சில மட்டும் இங்கே...

பாரி.அரசு அவர்கள் பட்டயப் படிப்பு(diploma) முடித்து சிங்கைக்கு வேலைக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய வலைத்தளம் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அரசுவின் அனுபவம் மற்றும் திறமைக்கு அவர் இன்னும் அதிகமான மற்றும் தரமான இடுகைகள் இட்டிருக்கலாம் என GK அவர்கள் குறைப் பட்டுக்கொண்டார். அரசு இனி தரமான இடுகைகள் அதிகமாக இடுவதாகத் தெரிவித்துள்ளார்.

நேற்றய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருந்தது.

டிஸ்கி:
//
சுமார் மூன்று மணி நேரம் நடந்த எங்கள் சந்திப்பில் இருமுறை காஃபி, ஒருமுறை குளிர்பானம், அதனுடன் மிக்சர் என நேரம் கடந்ததே தெரியவில்லை
//
GK யின் இடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். உண்மையில் அங்கு சாப்பிட்டது "மிக்சர்" இல்லை "சீவல்":).

Sunday, September 9, 2007

முரண்பாடு - பாவங்களும் இறைவனின் இருத்தலும்

இறைவன் இருப்பது உண்மை எனில்,

1. இறைவன் பாவங்களை அழிக்க நினைக்கிறான் ஆனால் முடியவில்லை.
அல்லது
2. அவனால் முடியும் ஆனால் செய்ய விரும்பவில்லை.
அல்லது
3. அவனால் முடியாது மற்றும் செய்யவும் விரும்பவில்லை.
அல்லது
4 கடைசியாக அவனால் முடியும் மற்றும் செய்யவும் விரும்புகிறான்.

............................

1. அவன் பாவங்களை அழிக்க நினைக்கிறான் ஆனால் முடியவில்லை எனில்,
அவன் "எல்லாம் வல்லவன்" இல்லை.

2. அவனால் முடியும் ஆனால் செய்ய விரும்பவில்லை எனில்,
அவன் "கருணையுள்ளவன்" இல்லை.

3. அவனால் முடியாது மற்றும் செய்யவும் விரும்பவில்லை எனில்,
அவன் "எல்லாம் வல்லவனும்" இல்லை, "கருணையுள்ளவனும்" இல்லை.

4. ஆனால் அவனால் முடியும் மற்றும் செய்யவும் விரும்புகிறான் எனில்,
பாவங்கள் எப்படி இருக்க முடியும்?

- கிரேக்கத் தத்துவ ஞானி எபிகுரஸ் (கி.மு 3ம் நூற்றாண்டு)

Either God wants to abolish evil and cannot,
or he can but does not want to,
or he cannot and does not want to,
or lastly he can and wants to.

If he wants to remove evil, and cannot,
he is not omnipotent;
If he can, but does not want to,
he is not benevolent;
If he neither can nor wants to,
he is neither omnipotent nor benevolent;
But if God can abolish evil and wants to,
how does evil exist?

-Greek philosopher Epicurus(3rd century BCE).

Saturday, September 8, 2007

ஆமணக்கு புதிர் - தாத்தா சொன்னது

நாங்கள் சிறு வயதில் இருக்கும்போது எங்கள் தாத்த்தா தினமும் இரவு ஏதேனும் புதிர் அல்லது விடுகதை சொல்வார். அந்தப் புதிர்களில் ஒன்று:

இரு விவசாயிகள், அவர்களின் தோட்டத்தில் விளைந்த ஆமணக்கு விதைகளை விற்ப்பதற்க்காக வியாபாரி ஒருவரிடம் கொண்டு சென்றனர். இருவரிடமும் தலா 30 கிலோ ஆமணக்கு விதைகள் இருந்தது. ஒருவரிடம் இருந்த விதைகள் தரமானதாகவும், அடுத்தவரிடம் இருந்த விதைகள் சற்று தரம் குறைந்ததாகவும் இருந்தது.

வியாபாரி தரமான விதைகளை 2 கிலோ 10 ரூபாய்க்கும், தரம் குறைவாக இருந்த விதைகளை 3 கிலோ 10 ரூபாய்க்கும் வாங்கிக்கொள்ள சம்மதித்தார்.

வியாபாரி, "தரமற்ற விதைகளைத் தனியாக என்னால் விற்க முடியாது. எனவே முதலில் இரண்டு விதைகளையும் கலந்த்து கொள்ளலாம் பின் ஒவ்வொரு 5 கிலோவாக நிறுத்துக்கொண்டு 20 ரூபாய்(2கிலோ நல்ல விதைக்கு 10ரூபாய் + 3 கிலோ தரம் குறைந்த விதைக்கு 10 ரூபாய்) தந்துவிடுகிறேன். நீங்கள் உங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள்." என்று கூறினார். இதை இரு விவசாயிகளும் ஏற்றுக் கொண்டனர்.

மொத்தமுள்ள 60 கிலோ விதைகளையும் 12 தடவைகளில் ஒரு முறைக்கு 5 கிலோ வீதம் அளந்து விட்டு ரூ.240(12*20) விவசாயிகளிடம் கொடுத்து பிரித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்.

தரமான விதை கொண்டு வந்த விவசாயிக்கு 30 கிலோவுக்கு ரூ.150(15*10), தரம் குறைவான விதை கொண்டு வந்த விவசாயிக்கு 30 கிலோவுக்கு ரூ.100 ஆகமொத்தம் ரூ.250 இருக்கவேண்டும். மீதம் ரூ10 என்ன ஆயிற்று?


"தெரியல தாத்தா. நீங்களே சொல்லிடுங்க", என்று அவரிடம் கேட்டால் அவர் சொல்லும் ஒரே பதில் "அதுதான் அந்த வியாபாரியின் தந்திரம்".

அந்தத் தந்திரம் என்ன என்பதை கண்டுபிடித்துப் பின்னூட்டம் இடுங்கள்....

Friday, September 7, 2007

நாத்திகர்கள், ஆத்திகர்கள் பட்டியல்

ஆன்மீக நண்பர்கள் மன்னிககவும். இது "தமிழ்பித்தனுக்கான" பதில் மட்டுமே. உங்கள் மனதைப் புண்படுத்த இல்லை.

நாத்திகர்கள்:

தந்தை பெரியார்
அறிஞர் அண்ணா
ஜவஹர்லால் நேரு
என்.எஸ்.கிருஷ்ணன்

நடிகர் சத்தியராஜ்
நடிகர் கமலஹாசன்

பெரியார் புகழ் பரப்பும் பாரீஸ் தோழர்கள் தமிழச்சி, மாசிலா
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

Abraham Lincoln
Albert Einstein
Charles Darwin
Benjamin Franklin
Napoleon Bonaparte

முழுப் பட்டியலுக்கு:

http://www.wonderfulatheistsofcfl.org/Quotes.htm

இந்திய நாத்திகர்கள்:
http://en.wikipedia.org/wiki/Category:Indian_atheists

ஆன்மீக வா(வியா)திகள்/வாந்திகள்:

காஞ்சி "காம""கேடிகள்" ஜெயேந்திரர், விஜயேந்திரர்
பிரேமானந்தா
சதூர்வேதி
பாபர் மசூதியை இடித்த "பக்த கேடிகள்"
யாழ்கோபி தமிழ்பித்தன்

இன்னும் பல கேடிகளின் பெயர் தெரிந்தாலும் நேரப் பற்றாக் குறையால் எழுத முடியவில்லை.

Monday, August 27, 2007

சாதீயமும் சகோதர மனப்பான்மையும்.

ஆயிரக்கணக்கான ஜாதிகளால் நாடே பிளவுப்பட்டு இருக்கும் போது இந்தியாவை ஒரு நாடு என்று அழைக்க முடியாது. ஜாதியும், சகோதர மனப்பான்மையும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகாது. எனவே இரண்டும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பால், இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் வெறுத்து போய் உள்ளனர். அவர்களை இனம் கண்டு நக்சலைட்டுகள் தங்கள் வசம் மாற்றி வருகின்றனர். இதனால், நக்சலைட் அமைப்பு வளர்ந்து வருகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூக, ஜனநாயக கட்டமைப்புக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை வேற்றுமைபடுத்த கூடாது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்களே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுகின்றனர். கீழ்மட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்காதவரை ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பலன் தராது."


-மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ், 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில்.

******************************

இதைப் பார்த்ததும் என் மனதில் எழுந்த சில கேள்விகள்...

இட ஒதுக்கீடு விடயத்தில் மட்டும் தேவைப்படும் சகோதர மனப்பான்மை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விடயத்தில் தேவை இல்லையா?

இதே சகோதர மனப்பான்மையுடன் அனைவரையும் கருவறைக்குள் அனுமதிப்பார்களா?

சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியைத் தாக்கியும் தடுத்தும் வெறியாட்டம் போட்ட போது சகோதர மனப்பான்மை எங்கே சென்றது?

இதே சகோதர மனப்பான்மையுடன் காஞ்சி சங்கர மடத்தின் அடுத்த சங்கராச்சாரியாராக வேறு சாதியைச் சார்ந்த ஒருவரை ஏற்றுக்கொள்வார்களா?(கொலைகாரர் ஒருவர் இருக்கும் இடத்திற்கு வர வேறு யாரும் விரும்ப மாட்டார்கள் என்பது வேறு விடயம்...)

இந்தக் கேள்விகளுக்கு யாரிடமாவது பதில் இருந்தால் தெரிவியுங்களேன்..
***************************

-ஜெகதீசன்

Sunday, August 19, 2007

சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...

சிங்கப்பூரில் எல்லா இடங்களிலும் தமிழ் இருக்கும். இதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

"தளமேடை இடைவெளியை கவனத்தில் கொள்ளுங்கள்", "விளக்கு மின்னும் போது உள்ளே நுழையாதீர்கள்" என்பது போன்ற வாக்கியங்களைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இது போல அனைத்து இடங்களிலும் தமிழ் இருக்கும்.

ஒரு வேலையாக இந்தியத் தூதரகத்திற்கு சென்றேன். அங்கு தமிழ் இல்லை. ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே உள்ளது. சிங்கப்பூரின் எல்லா இடங்களிலும் தமிழ் இருக்கும் போது இந்தியத் தூதரகத்தில் மட்டும் இல்லாமல் இருப்பது நெருடலாக இருக்கிறது.

தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்திய அரசு ஏன் தமிழுக்கும் ஆதரவு தரக்கூடாது? இத் தூதரகங்களில் தமிழிலும் அலுவல்களை நடத்தலாமே?

சும்மா!!!!!


இது தாங்க நான்.....


Monday, August 13, 2007

எங்கள் குட்டி தேவதை !!!!!!!!!


டேய் சித்தப்பா..... தூங்குறப்ப தொந்தரவு பண்ணாதே....



ஆஹா!!! எந்திரிச்சிட்டோமே! இனி பால் குடிக்கச் சொல்லுவாங்களே.. எப்படித் தப்பிக்குறது??...

Sunday, August 12, 2007

இனிவரும் தமிழினம்

இனிவரும் தமிழினம் - உயர்ந்து ஓங்க வேண்டும்.

உலகத் தமிழ் அறக்கட்டளையின் வெளியீடான, "திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி" ஆகிய மூன்றும் கொண்ட நூலில், "தமிழின எதிர்கால வழிகாட்டி" பகுதியில் திரு. தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய "இனிவரும் தமிழினம் - உயர்ந்து ஓங்க வேண்டும்" என்ற கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த இடுகை. (பக்கம் - 1765)

அந்தக் கட்டுரையின் சில பகுதிகள்:

கி.பி 1200 இறுதியில் அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட தமிழகம் இறுதியாக ஆண்ட ஆங்கிலேயர் ஆட்சியில் ஒரு மாநிலமாக சிறுத்துப் போனது போன்று தமிழினத்தின் மாண்பும் சிதைந்து போனது. பல நூற்றாண்டுகளாகத் தமிழினத்தின் மீட்சிக்கு பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வந்த போதிலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் இம்முயற்சிகள் பன்மடங்காக மேலோங்கிற்று. ஆங்கிலேயர் வழங்கிய கல்வியும் - பிற மதங்களின் மனித நேயமும் தமிழினத்தின் விடியலுக்கு வித்தாக அமைந்தது என்பதை மறுக்கவியலாது.

வள்ளலார், மறைமலையடிகளார், திரு.வி.க போன்ற தமிழ் அறிஞர்களின் அயராத முயற்சியும் - தந்தை பெரியாரின் சுயமரியாதைப் போராட்டமும் அறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் போராட்டமும், மொழிப்போராட்டங்களும், தமிழர் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட வழி வகுத்தது என்பது மறுக்கவியலாத உண்மையாகும். ......................
........................................................................
........................................................................


நாடு

பிறரின் நாடுகளைப் பிடிப்பதல்ல தமிழினத்தின் நோக்கம். தனக்குரியதை மீட்டெடுக்க வேண்டும். ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை எனும் கவிஞர் காசி ஆனந்தனின் வைர வரிகள் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சங்களிலே ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
எந்த இனம் அரசாளும் உரிமையை இழந்து விடுகிறதோ, அந்த இனம் பிற இனத்தவரின் தயவில் தான் வாழ வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் உரிமை போன்றவற்றில் தலைதூக்கினால் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும். இத்தகய அடக்கு முறையை முறியடிக்க எழுந்ததுதான் தமிழீழ விடுதலைப் போராட்டம்.

மொழி
...............................................................
தமிழ்ர்கள் கட்டிய கோயிலில் தமிழ் மொழிக்கு இடமில்லை என்று கூறும் மதத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்யாத அர்ச்சகர்களையும், கோயில்களையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
.........................................

இனம்

சாதிப் பெயர்களைத் தவிர்க்க வேண்டும். சாதிவாரியான அமைப்புகள் கலைக்கப்பட வேண்டும். சாதிப் பெருமையை விட்டொழித்துத் தமிழினப் பெருமையை நிலைநாட்டச் செய்ய வேண்டும். ஒரே இனமாக சேர்ந்து வாழ வேண்டும்.
..........................................................................

சமயம் - மதம்

திருக்குறள் தமிழ் இனத்தின் பொது மறை எனவும், ஏனய சமய மறைகள் அனைத்தும் தனி மறைகள் எனவும் தமிழினம் பின்பற்ற வேண்டும்.
.......................................

கல்வி

தமிழ் சமுதாயத்திற்கு முறையான வாய்ப்பு வழங்கப்பட்டால் கல்வித்துறையில் உலகை ஆளும் என்பதற்கு சான்றுகள் கட்டியம் கூறுகின்றன.
....................................................................................

ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குள் தமிழினம் கல்வித் துறையில் கணிசமான அளவில் விரைந்து முன்னேற்றம் கண்டுள்ளது.
......................................
.....................................

சிறுபான்மை இனம்

தமிழர்கள் வாழுகின்ற அனைத்து நாடுகளிலும் சிறுபான்மை இனமாக வாழுகின்றார்கள். தமிழகத் தமிழர்கள் இந்தியாவில் சிறுபான்மை, மற்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் ஆங்காங்கே சிறுபான்மை.

சிறுபான்மையினர் எக்காலத்திலும் அரசாளும் உரிமையைப் பெறுவதில்லை. அரசு சட்டங்கள் இயற்றுவதில்லை. அரசு தரப்பில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வரையறுப்பதில்லை. பெரும்பான்மையர் சிறுபான்மையினர் குரிது எப்போதுமே கவலைப்படுவதில்லை.
.....................................................
.....................................................

தமிழினத்திற்கும், தமிழுக்கும் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உலகளாவிய அளவில் தமிழீழ விடுதலைப் பேராளிகளே வருங்காலத்தில் சிறுபான்மை இனம் என்ற நிலையில் இருந்து தமிழினத்தை மீட்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளைத் தோற்றுவிக்கப் போகிறார்கள். அவர்களை உற்சாகப் படுத்த வேண்டிய உதவிகளை தமிழினத்தவர் ஒவ்வொருவரும் விரைந்தும் ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டும்.
......................................................
......................................................

கல்வியும் பொருளாதார மேம்பாடும் இனி வரும் தமிழினத்தை உயர்த்தும். தமிழீழம் தமிழர் தன்மானம் காக்கும். வெற்றி நிச்சியம்.

Saturday, August 11, 2007

வழிகாட்டும் வள்ளுவர்-2

ராஜன், என்னுடன் பணிபுரிந்த நண்பன். அவனும் எங்கள் திட்டப்பணித் தலைவர்(P.L) இளங்கோவும் மிகவும் நெருக்கம். பல விசயங்களில்(ஆன்மீகம்,...) அவர்கள் ஒரே கருத்து கொண்டவர்கள் என்பதால் எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பார்கள்(தேனீர் இடைவேளையின் போது இருவரும் எங்களால் ஒன்றாகவே கலாய்க்கப் படுவ்ர்...).

ஒரு புதிய திட்டப்பணி(project), நல்ல சவாலானது(web services ,swt,....). அந்தப் பணிக்கான ஆட்களைத் தேர்வு செய்யும் போது இளங்கோ, ராஜனைத் தேர்ந்தெடுக்க வில்லை. இது ஏன் என்பது அனைவருக்கும் மிகவும் குழப்பமாக இருந்தது.

ஒரு நாள் தனியாக இருந்தபோது அவரிடம் இது பற்றி நான் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்:

ராஜனுக்கும் எனக்கும் உள்ள நட்பு வேறு, வேலை வேறு. ஒரு வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் போது அவரால் முடியுமா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதமை யெல்லாந் தரும்.

-திருக்குறள்(அதிகாரம்- 51(தெரிந்து தெளிதல்) ; குறள்-507)

(அமர்த்தும் பணியில் அறியவேண்டுவன எதனையும் அறியாத ஒருவரை அவர்மீது நாம் வைத்திருக்கும் பாசத்தையே அடிப்படையாகக்கொண்டு அமர்த்துதல், நம்மை உலகம் அறிவில்லாதவர் எனத் தூற்றும் படியான எல்லாத் தீமைகளையும் கொடுக்கும்)

Wednesday, August 8, 2007

வழிகாட்டும் வள்ளுவர்-1

இளங்கோ, நான் இதற்கு முன் பணி புரிந்த நிறுவனத்தில் என் திட்டப்பணித் தலைவர்(Project Leader). அவர் ரெம்ப நல்லர். நாங்கள் என்ன செய்தாலும் ஒன்றும் சொல்லமாட்டார். அவர் கோவப்பட்டு நாங்கள் பாத்ததே இல்லை.(ஆனால் ஐஸ் வைத்தே எல்லா வேலையும் வாங்கிடுவார்).

ஒரு நாள் திட்டப்பணி மேலாளரிடமிருந்து(Project manager) தொலைபேசி. வழக்கம் போல ஏதோ ஒரு பிரச்சனைய சரியாகப் புரிந்துகொள்ளாமல் இளங்கோவக் காய்ச்சி எடுத்துக் கொண்டு இருந்தார். இளங்கோவும் வழக்கம் போல பொறுமையா விளக்கி அவருக்குப் புரிய வைத்தார். அதுக்குப் பின் எங்களிடம் வந்து வாங்க டீ குடிக்கப் போகலாம்ன்னு கூப்பிட்டார். ("தேனீர் இடைவேளை" என்ற பெயரில் 1/2 மணி நேரம் தினமும் மொக்கை போடுவோம். அந்த மொக்கையில் இளங்கோவும் கலந்து கொள்வார். நான் தான் சொன்னேனே, "அவரு ரெம்ப நல்லவருன்னு")

அன்று பேசும்பொழுது அவரிடம் நான் கேட்டேன், "திட்டப்பணி மேலாளர்(Project manager) படுத்துற பாட்டை எல்லாம் கோவப்படாமல்இருப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எங்களுடட கிறுக்குத்தனங்களுக்குக் கூட கோவப் படமாமல் இருக்கிறீர்களே. அது ஏன்?" .

அதற்கு அவர் சொன்ன பதில்:

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.

-திருக்குறள்(அதிகாரம்- 31(வெகுளாமை) ; குறள்-301)

(எங்கு தன் சினம் செல்லுமோ, அங்கு சினங்கொள்ளாதிருப்பவனே சினத்தைக் காப்பவனாவான். சினங்கொள்ள முடியாத இடத்தில் காத்தால்தான் என்ன; காவாக்கால் என்ன
?)

ரெம்ப நாள் கழித்து தமிழ் எழுதத் தொடங்கியுள்ளேன். பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.