Monday, January 17, 2011

ஆண்ட்ராய்டு தமிழ் விசைப்பலகை

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான தமிழ் விசைப் பலகை "தமிழ்விசை", ஆண்ட்ராய்டு சந்தையில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நாள் (தை முதல் நாள்) அன்று தமிழா! குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசைப்பலகையை ஆண்ட்ராய்டு 1.6 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளங்கள் உள்ள செல்பேசிகளில் பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இன்னும் இயங்குதள அளவிலான தமிழ் ஆதரவு இல்லை. எனவே
தமிழ்விசை விசைப்பலகையுடன் ஒரு "preview view" வருகிறது. நீங்கள் தட்டச்சும் போது "preview view" வில் நீங்கள் தட்டச்சுவது தமிழில் தெரியும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தமிழ் படிக்க தற்போதைக்கு ஓப்ரா மினி அல்லது செட்(sett) உலாவிகளைப் பயன்படுத்தலாம்.

தமிழ்விசையை ஆண்ட்ராய்டு சந்தையில் தரவிறக்க உங்கள் செல்பேசியில் ஆண்ட்ராய்டு சந்தைக்குச் சென்று "tamilvisai அல்லது tamil visai அல்லது tamil keyboard" எனத் தேடவும்.

இந்த மென்பொருள் திறவுமூல மென்பொருள். இதன் மூலத்தை
https://code.google.com/p/android-tamilkey/
இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

வழுக்கள் அல்லது ஆலோசனைகள் இருந்தால் இங்கு தெரிவிக்கவும்
https://code.google.com/p/android-tamilkey/
அல்லது
http://www.thamizha.com/project/android-tamilkey

ஆலோசனைகள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

Sunday, September 12, 2010

அடிங்... எத்தன பேரு கிளம்பீருக்கீங்க இது மாதிரி?

Hindi இந்தியாவின் national language
Sanskrit is divine language
Gods எல்லாம் Sanskrit ல தான் பேசிக்குவாங்க.
Tamil, Telugu எல்லாம் Sanskrit ல இருந்து தான் வந்தது.

Wednesday, July 21, 2010

ப்ருக்கோலி-உருளைக்கிழங்கு காரக்குழம்பு/சாம்பார்/குருமா

ப்ருக்கோலி-உருளைக்கிழங்கு காரக்குழம்பு

தேவையானவை:
1) உருளைக்கிழங்கு -3
2) ப்ருக்கோலி - 168கி
3) தக்காளி -2
4)மாங்காய்
5) பெரிய வெங்காயம்(சின்னது) - 1
6)மிளகாய் - 3
7) கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம்,கரிவேப்பிலை இன்ன பிற பொருட்கள்
8) வீட்டிலுள்ள எல்லா மசாலாக்களும் (அந்த ஓரத்தில் இருக்கும் பாபாஸ் மசாலா தவிர)
9)இஞ்சி-பூண்டு விழுது மற்றும் fridge ல இருக்கும் மற்ற எல்லா விழுதுகளும்
10)மேலே சொல்லாமல் விடுபட்ட இன்ன பிற பொருட்களும்

செய்முறை:
1)அலுவலகத்திலிருந்து சரியாக 6மணிக்கு வெளியேறி நேராக காமன்வெல்த் சென்-சியாங் பேரங்காடிக்குச் செல்லவும். அங்கு மாங்காய், உருளைக்கிழங்கு(baby potato - காய்கறிப் பகுதியில் 3 அல்லது 4வது வரிசையில் அல்லது வேறெங்காவது இருக்கும்..), தக்காளி வாங்கிக்கொள்ளவும்.

2)வீட்டுக்கு வந்து லுங்கிக்கு மாறிக்கொள்ளவும் (சமைப்பதற்கு ட்ரவுசரைவிட லுங்கி வசதியாக இருக்கும்)

3)உருளைக்கிழங்கு, தக்காளி, மாங்காய் ப்ருக்கோலி, மிளகாய், காய்கறி வெட்டும் தட்டு, கத்தி ஆகியவற்றை நன்கு கழுவிக்கொள்ளவும்.

4)மேலே குறிப்பிட்ட காய்கறிகளையும், வெங்காயத்தையும் நறுக்கவும்.

5) உருளைக்கிழங்கை தனியாக ஒரு 1/3 வேக்காடு வேகவைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.

6)வானலியில் சிறிது எண்ணை ஊற்றி காயவைக்கவும். எண்ணை காய்ந்ததும் கடுகு, உளுந்து இன்ன பிற பொருட்கள் போட்டு தாளித்து கரிவேப்பிலை போடவும்.

67வெட்டிவைத்துள்ள வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

7) 1/3வேக்காடு வெந்த உ.கிழங்கு, ப்ருக்கோலி, மாங்காய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

8) பாபா மசாலா தவிர்த்த எல்லா மசாலாக்களும் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். மசாலா வாசம் அல்லது பச்சை வாசம் அல்லது வேறு எதாவது வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

9)வெட்டிவைத்த தக்காளியை சேர்க்கவும்.(பொதுவாக தக்காளி 6வது பாயிண்ட் இருக்குமிடத்தில் சேர்ப்பார்கள். ஆனால் விஜய் டீவி சமயல் சமயல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஒருத்தர் இந்த இடத்தில் சேர்த்தால் நன்றாக இருக்கும் அப்படின்னு சொன்னார்....)

10) தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலகவும்.

11) கரண்டியில் கொஞ்சம் குழம்பு எடுத்து கையில் ஊற்றி உப்பு காரம் சரியாக இருக்கிறதா என நக்கி சரிபார்த்துக்கொள்ளவும்.

12)அடுப்பைக் குறைத்து வைத்து, வானலியை மூடி குழம்பு கொதிக்கும் வரை/காய்கறிகள் வேகும் வரை காத்திருக்கவும்

13) காய்கறி வெட்டும் தட்டு, வெட்டிய காய்கறிகளை வைத்திருந்த தட்டுகள், கத்தி, நேற்றிரவு ஜூஸ் குடித்த டம்ளர் ஆகியவற்றைக் கழுவிக் கவிழ்த்து வைக்கவும். இடையில் இரண்டு முறை கொஞ்சம் குழம்பைக் கையில் ஊற்றி நக்கிப் பார்த்து உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளவும்.

14) குழம்பு தயார். இறக்கும் போது கொஞ்சம் மல்லி இலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.

15) குழம்பை fridge இல் வைக்கத்தக்க பாத்திரத்திற்கு மாற்றி வைத்துவிட்டு வானலியைக் கழுவவும்.

16) fridgeஇல் இருந்து எடுத்த மசாலா, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, இன்ன பிறவற்றை மறக்காமல் திரும்ப வைக்கவும்.

பில்ஸ்பெர்ரி ரெடிமேட் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட இந்தக் குழம்பு மிகவும் ஏற்றது.
(பில்ஸ்பெர்ரி ரெடிமேட் ரொட்டிசெய்வது குறித்த குறிப்பு இங்கே: http://jegadeesangurusamy.blogspot.com/2008/09/3.html
)




ப்ருக்கோலி-உருளைக்கிழங்கு சாம்பார்
மேலே குறிப்பிட்டுள்ள சமையல் குறிப்பில், காய்கறிகளை வேகவைக்கும் போது வேகவைத்த பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்தால் அது சாம்பார்.

ப்ருக்கோலி-உருளைக்கிழங்கு குருமா
எந்தக் குழம்பு வைத்தாலும் குழம்பை இறக்குவதற்கு 5 நிமிடம் முன் அரை கப் தயிர் சேர்த்து வேகவைத்து இறக்கினால் அதற்குப் பெயர் குருமா என என் அறை நண்பர்(ஆந்திராக்காரர்) சொன்னார். அவரின் கூற்றுப்படி, மேலே குறிப்பிட்ட குழம்பை இறக்குவதற்கு 5.35 நிமிடங்களுக்கு முன் தயிர் சேர்த்து இறக்கினால் அது குருமா.

உரிமைத் துறப்பு:
1) இந்தக் செய்முறை வாசிக்க அல்லது வாசிக்காமலிருக்க மட்டுமே
2) இதை யாராவது செய்து சாப்பிட முயற்சித்தால் அது சொந்த செலவில் சூனியம் மட்டுமே
3) இதை சாப்பிட்டு எதாவது நேர்ந்தால் அதற்கு நானோ அல்லது கூகுளோ எந்த விதத்திலும் பொறுப்பல்ல. வேண்டுமெனில் ஏன் எழுதல... எதாவது எழுது என்று நச்சரித்தவர்கள் பொறுப்பேற்கலாம்.


நன்றி.. வேறொரு சமையல் குறிப்புடன் அடுத்த ஆண்டு மீண்டும் சந்திக்கிறேன்.

Thursday, December 24, 2009

நான் இருக்கிறேன்!!

நான் இருக்கிறேன்!!
நானும் இருக்கிறேன்!!!
நான் இன்னும் இருக்கிறேன்!!!!

Wednesday, October 14, 2009

யார் சொன்னது அங்கு அவலம் என்று?

ஆம்! அங்கு அவலம் ஏதும் இல்லை. பாலாறும், தேனாறும் பாய்ந்து ஓடுகிறது. இப்போது அங்கிருக்கும் ஒரே பிரச்சனை இந்த ஆறுகளில் இருந்து மொண்டு குடிக்கப் போதுமான அளவு சொம்புகள் இல்லை என்பதே!
வெளியிலிருப்பவர்கள் இந்த ஆறுகளில் இருந்து பாலும், தேனும் திருடிவிடக்கூடாது என்பதற்காகவும், இந்த ஆறுகள் வெளியே சென்றுவிடாமல் இருப்பதற்காகவும் பாதுகாப்புக்காக மட்டுமே முள்வேலி!

இந்தத் தமிழக இதழ்களுக்கு வேறு வேலையே இல்லை.
நல்ல வேளை நமது குழுவினர் அங்கு சென்று உண்மைகளை அறிந்து நமக்குத் தெரிவித்துள்ளனர். இல்லையெனில் இன்னும் இந்த இதழ்கள் சொல்வதையே நாம் நம்பிக்கொண்டிருந்திருப்போம். அவர்களுக்குக் கோடி நன்றிகள்!

சொம்பு பற்றாக்குறையை நீக்க தியாகத் திருவிளக்கும், இனத்தலைவரும் விரைவில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள்.

மக்கள் எவ்வளவு மகிழ்வாய் இருக்கிறார்கள் தெரியுமா? பொழுது போவதற்காக, பாதுகாப்பிற்காக இருக்கும் ராணுவத்தினருடன் கபடியும் கில்லியும் விளையாடி மகிழ்கிறார்கள். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் ராணுவத்தினர் பழக எவ்வளவு இனிமையானவர்கள் என்று.

"************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************
************** *********************** ************************** *************************** *************************** ***** *****************************************"

"*******" இருக்கும் இடங்களில் உங்களுக்குப் பிடித்த சொற்களை நிரப்பி இந்தக் குழுவினரையும் அவர்களை அங்கு அனுப்பியவர்களையும் பாராட்டுங்கள்! (உங்களது பாராட்டுக்கள் 2000 சொற்களுக்கு மிகுந்து இருக்க வேண்டும். எவ்வளவு பாராட்டினாலும் உக்காந்து கேட்டுக்கிட்டே இருப்போம் நாங்க..)

இதற்கும் மேலும் அங்கு அவலம் என்று யாரேனும் சொன்னால், இந்தக் குழுவினரும், அவர்களை அங்கு அனுப்பிய தியாகத் திருவிளக்கும், இனத்தலைவரும் தங்கள் குடும்பங்களுடன் சென்று முகாம்களில் மக்களுடன் சேர்ந்து வாழ்வார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

Wednesday, August 5, 2009

ஆமத்தூர்

நம்ம இப்ப இருக்குறது விருதுநகர் பேருந்து நிலையம். இதோ வருது பாருங்க சிவகாசி போற 3ம் எண் பேருந்து... வாங்க ஏறலாம்.. ஏறியாச்சா.. ஜன்னல் சீட்டுல உக்காந்துக்கோங்க.... இன்னும் 15 நிமிசப் பயணத்துல ஊருக்குப் போய்ச் சேந்துரலாம்..

இதோ இது தான் குமாரலிங்கபுரம்.. இதைத் தாண்டினா 2 நிமிசத்துல கவலூர் வந்துரும்.
இதோ கவலூரைத் தாண்டீட்டோம். சாலையின் இரு புறத்திலும் ஒரு திடீர் மாற்றம் தெரியுதா... ஆமாம்... நம்ம இப்ப ஆமத்தூர் எல்லைக்கு வந்துட்டோம்...

சாலையின் இரு புறத்திலும் பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள். பெரும்பாலும் நெற்பயிர்கள்.. இடையிடையே சில வயல்களில் பாசிப்பயறு, உளுந்து போன்ற தானியங்கள். சில வயல்களில் பருத்தி போன்ற பணப் பயிர்கள்.. சிலவற்றில் பூத்துக் குலுங்கும் சூரிய காந்தி. வயல்களில் பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இளம் பெண்டிரும் இளையரும்.

சாலையின் இடதுபுறத்தில் ஊரைஒட்டி ஒரு பெரிய குளம். குளக்கரையில் மிகப் பெரிய ஆலமரம் ஒன்று. குளத்தைச் சுற்றிலும் வேம்பு, புளி எனப் பலதரப்பட்ட மரங்கள். போனவாரம் பெய்த மழையில் குளம் நிரம்பி வழிகிறது. குளத்தில் பூத்துக் குலுங்கும் தாமரை மற்றும் அல்லி மலர்கள்.

குளத்தின் அருகே ஒரு நந்தவனம். நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள்.. முல்லை, மல்லி, நந்தியாவட்டை, பிச்சி, ரோஜா, கேந்தி, செவ்வந்தி, வாடாமல்லி எனப் பலதரப்பட்ட மலர்கள். நந்தவனத்தின் நடுவே ஒரு முருகன் கோயில்.

குளத்தில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள். குளக்கரையில் அமர்ந்து அறுவடை பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பெரியவர்கள். அரசியல் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள்.

அந்த இளைஞர்களைக் கிண்டல் அடித்துக்கொண்டே குளக்கரையில் இருக்கும் அடி குழாயில் நீர் எடுக்க வந்து கொண்டிருக்கும் இளம் பெண்கள். இதைத் தெரிந்தும் தெரியாதது போல் ரசித்துக்கொண்டே தம் பேச்சுக்களைத் தொடரும் இளையர்கள்.

குளத்தை தாண்டியதும் சிறிது தூரத்தில் பேருந்து நிறுத்தம். பேருந்து நிறுத்தத்தை ஒட்டி ஒரு பெரிய கடைவீதி. கடை வீதியைத் தாண்டியதும் அகலமான தெருக்கள். வீடுகளின் முற்றத்தில் தானியங்களை உலர வைத்துக் கொண்டிருக்கும் பெண்டிர். தானியங்களைக் கொத்த வரும் பறவைகளை, பாவம் சாப்பிட்டுப் போகட்டும் என்று துரத்தாமல் விடும் பெண்டிர்."

ம்ம்ம்ம்ம்...... இப்படியெல்லாம் சொல்லனுமின்னு எனக்கும் ஆசைதான். ஆனா எங்க ஊரு ஒன்னும் தஞ்சாவூர் பக்கத்துல இல்லையே... பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில இல்ல இருக்கு. இருந்தாலும் "காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு" ஆச்சே... அதனால எங்க ஊரைப் பத்தி சொல்லப் போறேன் இந்தத் தொடரில்.

அடுத்த பகுதி விரைவில்...

***********************************************************************************
ஒரு விளம்பரம்..

சிங்கை பதிவர்கள் அனைவரும் சேர்ந்து "பதிவர்களை டரியலாக்கும்" தலைப்புகளுடன் ஒரு கட்டுரைப் போட்டி நடத்துவது அனைவரும் அறிந்ததே... போட்டிக்கான உங்கள் ஆக்கங்களை அனுப்ப இறுதி நாள் ஆகஸ்டு-15. அதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது.. எனவே உங்கள் ஆக்கங்களை விரைவில் அனுப்பவும்.

நானும் ஒரு பரிசு அறிவிக்கலாமின்னு இருக்கேன்.. மணற்கேணி-2009 போட்டியில் வெல்லும் முதல் 3 நபர்களுக்கு, நான் ஒரு கிழமை(வாரம்) காலம் ஆமத்தூரைச் சுற்றிக் காட்டுகிறேன். பயணம், உணவு & உறைவிடச் செலவுகள் அனைத்தும் நான் ஏற்றுக் கொள்கிறேன்..

மணற்கேணி போட்டியில் வெற்றி பெறுவோர், தங்களது கடவுச்சீட்டு விவரங்களை எனக்கு அனுப்பினால் ஆமத்தூர் செல்ல விசா ஏற்பாடு செய்யப்படும்...

ஆமத்தூர் வர நீங்க செய்யவேண்டியதெல்லாம்....
"மணற்கேணி போட்டியில் கலந்துகொள்ளுங்கள் & வெல்லுங்கள்... போனசாக உங்களுக்கு ஒரு கிழமை சிங்கை பயணமும் கிடைக்குதே.... "

Friday, July 24, 2009

பதிவுலக விருது அங்கீகர ஆணையம்!

பிரபல தமிழ்ப் பத்திரிக்கைகளே பதிவர்களின் பதிவுகளை திருடி செய்தியாக வெளியிடுளியிடும் அளவுக்கு பதிவுலகம் அசுர வளர்ச்சியடைந்துள்ளது.சிறிது காலம் முன் வரை பதிவுலகை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மூத்த பதிவர்கள், இப்போது அவர்களின் இருப்பைக் காத்துக்கொள்வதற்காக ஆளுக்கொரு விருது வழங்கி தங்களை பல்கலைகழகத்தின் துணை வேந்தர்போல காட்டிக்கொள்கிறார்கள்.

கரப்பான்பூச்சி விருது, மூட்டைப்பூச்சி விருது எனப் பெயரிட்டு இவர்களே விருதுகளை வழங்குகின்றனர். இந்தப் போக்கை இப்படியே விடுவது ஆரோக்கியமானதல்ல. எனவே விருது வழங்குதலைக் ஒழுங்குபடுத்த ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாததாகின்றது.

இதற்காக அமைக்கப்பட்டது தான் "பதிவுலக விருது அங்கீகர ஆணையம்". இனி இந்த ஆணையத்தின் அங்கீகரம் பெற்ற அமைப்புகள் / பதிவர்கள் மட்டுமே இனி விருதுகள் வழங்க வேண்டும்! அங்கீகரம் பெறாதவர்கள் விருதுகள் வழங்குவது சட்ட விரோதமானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதில் பதிவர்களும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். விருது பெறும் முன் அந்த விருது ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவரால் தரப்படும் விருதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அங்கீகரம் பெறாத விருதுகளைத் தங்கள் பதிவுகளில் இணைப்பதைத் தவிர்க்கவும்.


விரைவில்
1. தொடர் பதிவு அங்கீகர ஆணையம்
2. வலைப் போட்டிகள் அங்கீகர ஆணையம்
3. வலைத் திரட்டிகள் அங்கீகர ஆணையம்
எனப் பதிவுலகம் சார்ந்த அனைத்து செயல்களுக்கும் ஆணையங்கள் அமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்!

இப்படிக்கு
பதிவுலக விருது அங்கீகர ஆணையம்