Sunday, September 23, 2007

வேதாந்தியைக் கைவிட்ட வேதாந்தம்.....

முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்து வி.எச்.பியைச் சேர்ந்த சாமியார் வேதாந்தி பேசியிருப்பதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாஜகவும், வி.எச்.பியும் கூறியுள்ளன.

முதல்வர் குறித்துக் கூட அயோத்தியைச் சேர்ந்த யாரோ ஒருவர் இதுபோன்ற வார்த்தைகளைப் பிரயோகித்தது கூட நான் அறிந்தேன். அவருக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது கருத்துக்கள் பாஜகவின் கருத்துக்களும் அல்ல. அதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
-இல.கணேசன்.


பாஜக சார்பில் இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சில நாடாளுமன்றக் குழுக்களின் உறுப்பினராகவும் இருந்தவர், திடீரென்று பாஜகவுக்கு சம்பந்தமில்லாத யாரோ ஒருவரானது எப்படி?

இதுகுறித்துக் கூறுகையில், வேதாந்தி வி.எச்.பி. அமைப்பில் உறுப்பினராகக் கூட இல்லை. அவரது கருத்து வி.எச்.பியின் கருத்து கிடையாது, அது அவரது சொந்தக் கருத்து.
-வி.எச்.பி. அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம்


வி.எச்.பி யின் ஒரு மண்டலத் தலைவர் திடீரென்று அந்த அமைப்பில் உறுப்பினராகக் கூட இல்லாமல் போனது எப்படி?

நன்றி- தட்ஸ் தமிழ்.

முழு செய்திக்கு -வேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தமில்லை - பாஜக, வி.எச்.பி.

வேதாந்தியின் பல்டி: நான் ஃபாத்வா விதிக்கவில்லை - வேதாந்தி பல்டி

Friday, September 21, 2007

இறைவன் எல்லாம் வல்லவனா?

இறைவனின் இயல்புகளில் முக்கியமான ஒன்றாகக் கூறப்படுவது, அவனின் வல்லமை.-"அவன் எல்லாம் வல்லவன்". அவனால் முடியாதது ஒன்றுமே இல்லை.

இறைவனின் இந்த இயல்புக்கு எதிராக இறை மறுப்பாளர்கள் வைக்கும் முக்கிய வாதம்:

இறைவன் எல்லாம் வல்லவன் எனில்,
"அவனால் தூக்கமுடியாத அளவு பெரிய கல் ஒன்றை அவனால் உருவாக்க முடியுமா?"

அவனால் அப்படிப்பட்ட கல்லை உருவாக்க முடியும் எனில்:
அவன் உருவாக்கிய கல்லைத் தூக்க முடியாதவன் எப்படி "எல்லாம் வல்லவன்" ஆகமுடியும்?

அவனால் அப்படிப்பட்ட கல்லை உருவாக்க முடியாது எனில்:
அதை உருவாக்க முடியாதவன் எப்படி "எல்லாம் வல்லவன்" ஆகமுடியும்?

எனவே "இறைவன் எல்லாம் வல்லவன்" என்னும் கூற்று எப்படி உண்மையாக இருக்க முடியும்?

Tuesday, September 11, 2007

மினி சந்திப்பு- கோவி.கண்ணன் சொல்ல மறந்தவை மட்டும்..

"நட்புகளை உண்டாக்கிக் கொள்ளுதல் போன்ற சிறந்தது வேறு எதுவும் உலகில் இல்லை", என்கிறார் வள்ளுவர்.

நேற்று புதிய நண்பர்கள் இருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்பின் போது பேசியவை/விவாதித்தவை பற்றி கோவி.கண்ணன் விரிவான பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவின் சுட்டி: பதிவர்கள் இருவருடன் ஒரு மினி சந்திப்பு

கோவி.கண்ணன் அவர்கள் சொல்ல மறந்த சில மட்டும் இங்கே...

பாரி.அரசு அவர்கள் பட்டயப் படிப்பு(diploma) முடித்து சிங்கைக்கு வேலைக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய வலைத்தளம் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அரசுவின் அனுபவம் மற்றும் திறமைக்கு அவர் இன்னும் அதிகமான மற்றும் தரமான இடுகைகள் இட்டிருக்கலாம் என GK அவர்கள் குறைப் பட்டுக்கொண்டார். அரசு இனி தரமான இடுகைகள் அதிகமாக இடுவதாகத் தெரிவித்துள்ளார்.

நேற்றய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருந்தது.

டிஸ்கி:
//
சுமார் மூன்று மணி நேரம் நடந்த எங்கள் சந்திப்பில் இருமுறை காஃபி, ஒருமுறை குளிர்பானம், அதனுடன் மிக்சர் என நேரம் கடந்ததே தெரியவில்லை
//
GK யின் இடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். உண்மையில் அங்கு சாப்பிட்டது "மிக்சர்" இல்லை "சீவல்":).

Sunday, September 9, 2007

முரண்பாடு - பாவங்களும் இறைவனின் இருத்தலும்

இறைவன் இருப்பது உண்மை எனில்,

1. இறைவன் பாவங்களை அழிக்க நினைக்கிறான் ஆனால் முடியவில்லை.
அல்லது
2. அவனால் முடியும் ஆனால் செய்ய விரும்பவில்லை.
அல்லது
3. அவனால் முடியாது மற்றும் செய்யவும் விரும்பவில்லை.
அல்லது
4 கடைசியாக அவனால் முடியும் மற்றும் செய்யவும் விரும்புகிறான்.

............................

1. அவன் பாவங்களை அழிக்க நினைக்கிறான் ஆனால் முடியவில்லை எனில்,
அவன் "எல்லாம் வல்லவன்" இல்லை.

2. அவனால் முடியும் ஆனால் செய்ய விரும்பவில்லை எனில்,
அவன் "கருணையுள்ளவன்" இல்லை.

3. அவனால் முடியாது மற்றும் செய்யவும் விரும்பவில்லை எனில்,
அவன் "எல்லாம் வல்லவனும்" இல்லை, "கருணையுள்ளவனும்" இல்லை.

4. ஆனால் அவனால் முடியும் மற்றும் செய்யவும் விரும்புகிறான் எனில்,
பாவங்கள் எப்படி இருக்க முடியும்?

- கிரேக்கத் தத்துவ ஞானி எபிகுரஸ் (கி.மு 3ம் நூற்றாண்டு)

Either God wants to abolish evil and cannot,
or he can but does not want to,
or he cannot and does not want to,
or lastly he can and wants to.

If he wants to remove evil, and cannot,
he is not omnipotent;
If he can, but does not want to,
he is not benevolent;
If he neither can nor wants to,
he is neither omnipotent nor benevolent;
But if God can abolish evil and wants to,
how does evil exist?

-Greek philosopher Epicurus(3rd century BCE).

Saturday, September 8, 2007

ஆமணக்கு புதிர் - தாத்தா சொன்னது

நாங்கள் சிறு வயதில் இருக்கும்போது எங்கள் தாத்த்தா தினமும் இரவு ஏதேனும் புதிர் அல்லது விடுகதை சொல்வார். அந்தப் புதிர்களில் ஒன்று:

இரு விவசாயிகள், அவர்களின் தோட்டத்தில் விளைந்த ஆமணக்கு விதைகளை விற்ப்பதற்க்காக வியாபாரி ஒருவரிடம் கொண்டு சென்றனர். இருவரிடமும் தலா 30 கிலோ ஆமணக்கு விதைகள் இருந்தது. ஒருவரிடம் இருந்த விதைகள் தரமானதாகவும், அடுத்தவரிடம் இருந்த விதைகள் சற்று தரம் குறைந்ததாகவும் இருந்தது.

வியாபாரி தரமான விதைகளை 2 கிலோ 10 ரூபாய்க்கும், தரம் குறைவாக இருந்த விதைகளை 3 கிலோ 10 ரூபாய்க்கும் வாங்கிக்கொள்ள சம்மதித்தார்.

வியாபாரி, "தரமற்ற விதைகளைத் தனியாக என்னால் விற்க முடியாது. எனவே முதலில் இரண்டு விதைகளையும் கலந்த்து கொள்ளலாம் பின் ஒவ்வொரு 5 கிலோவாக நிறுத்துக்கொண்டு 20 ரூபாய்(2கிலோ நல்ல விதைக்கு 10ரூபாய் + 3 கிலோ தரம் குறைந்த விதைக்கு 10 ரூபாய்) தந்துவிடுகிறேன். நீங்கள் உங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள்." என்று கூறினார். இதை இரு விவசாயிகளும் ஏற்றுக் கொண்டனர்.

மொத்தமுள்ள 60 கிலோ விதைகளையும் 12 தடவைகளில் ஒரு முறைக்கு 5 கிலோ வீதம் அளந்து விட்டு ரூ.240(12*20) விவசாயிகளிடம் கொடுத்து பிரித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்.

தரமான விதை கொண்டு வந்த விவசாயிக்கு 30 கிலோவுக்கு ரூ.150(15*10), தரம் குறைவான விதை கொண்டு வந்த விவசாயிக்கு 30 கிலோவுக்கு ரூ.100 ஆகமொத்தம் ரூ.250 இருக்கவேண்டும். மீதம் ரூ10 என்ன ஆயிற்று?


"தெரியல தாத்தா. நீங்களே சொல்லிடுங்க", என்று அவரிடம் கேட்டால் அவர் சொல்லும் ஒரே பதில் "அதுதான் அந்த வியாபாரியின் தந்திரம்".

அந்தத் தந்திரம் என்ன என்பதை கண்டுபிடித்துப் பின்னூட்டம் இடுங்கள்....

Friday, September 7, 2007

நாத்திகர்கள், ஆத்திகர்கள் பட்டியல்

ஆன்மீக நண்பர்கள் மன்னிககவும். இது "தமிழ்பித்தனுக்கான" பதில் மட்டுமே. உங்கள் மனதைப் புண்படுத்த இல்லை.

நாத்திகர்கள்:

தந்தை பெரியார்
அறிஞர் அண்ணா
ஜவஹர்லால் நேரு
என்.எஸ்.கிருஷ்ணன்

நடிகர் சத்தியராஜ்
நடிகர் கமலஹாசன்

பெரியார் புகழ் பரப்பும் பாரீஸ் தோழர்கள் தமிழச்சி, மாசிலா
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

Abraham Lincoln
Albert Einstein
Charles Darwin
Benjamin Franklin
Napoleon Bonaparte

முழுப் பட்டியலுக்கு:

http://www.wonderfulatheistsofcfl.org/Quotes.htm

இந்திய நாத்திகர்கள்:
http://en.wikipedia.org/wiki/Category:Indian_atheists

ஆன்மீக வா(வியா)திகள்/வாந்திகள்:

காஞ்சி "காம""கேடிகள்" ஜெயேந்திரர், விஜயேந்திரர்
பிரேமானந்தா
சதூர்வேதி
பாபர் மசூதியை இடித்த "பக்த கேடிகள்"
யாழ்கோபி தமிழ்பித்தன்

இன்னும் பல கேடிகளின் பெயர் தெரிந்தாலும் நேரப் பற்றாக் குறையால் எழுத முடியவில்லை.