பிரபல தமிழ்ப் பத்திரிக்கைகளே பதிவர்களின் பதிவுகளை திருடி செய்தியாக வெளியிடுளியிடும் அளவுக்கு பதிவுலகம் அசுர வளர்ச்சியடைந்துள்ளது.சிறிது காலம் முன் வரை பதிவுலகை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மூத்த பதிவர்கள், இப்போது அவர்களின் இருப்பைக் காத்துக்கொள்வதற்காக ஆளுக்கொரு விருது வழங்கி தங்களை பல்கலைகழகத்தின் துணை வேந்தர்போல காட்டிக்கொள்கிறார்கள்.
கரப்பான்பூச்சி விருது, மூட்டைப்பூச்சி விருது எனப் பெயரிட்டு இவர்களே விருதுகளை வழங்குகின்றனர். இந்தப் போக்கை இப்படியே விடுவது ஆரோக்கியமானதல்ல. எனவே விருது வழங்குதலைக் ஒழுங்குபடுத்த ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாததாகின்றது.
இதற்காக அமைக்கப்பட்டது தான் "பதிவுலக விருது அங்கீகர ஆணையம்". இனி இந்த ஆணையத்தின் அங்கீகரம் பெற்ற அமைப்புகள் / பதிவர்கள் மட்டுமே இனி விருதுகள் வழங்க வேண்டும்! அங்கீகரம் பெறாதவர்கள் விருதுகள் வழங்குவது சட்ட விரோதமானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் பதிவர்களும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். விருது பெறும் முன் அந்த விருது ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவரால் தரப்படும் விருதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அங்கீகரம் பெறாத விருதுகளைத் தங்கள் பதிவுகளில் இணைப்பதைத் தவிர்க்கவும்.
விரைவில்
1. தொடர் பதிவு அங்கீகர ஆணையம்
2. வலைப் போட்டிகள் அங்கீகர ஆணையம்
3. வலைத் திரட்டிகள் அங்கீகர ஆணையம்
எனப் பதிவுலகம் சார்ந்த அனைத்து செயல்களுக்கும் ஆணையங்கள் அமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்!
இப்படிக்கு
பதிவுலக விருது அங்கீகர ஆணையம்
Friday, July 24, 2009
Subscribe to:
Posts (Atom)