Friday, August 29, 2008

வெற்றி தரும் பெயர் சோதிடம்.

பெயரில் என்ன இருக்கிறது ...நம்ம கிட்டதான் எல்லாம் இருக்கு..என்னும் அறிவாளிகள்..இத்தனை படிக்க வேண்டாம்..கண்ணீரில் வாழும் ,துன்பத்தில் தவிக்கும் ஒரு சகோதரனுக்காவது.. இந்த கலை உபயோகமானால் ..மகிழ்ச்சி.

இந்தக் கலையை நான் என் குருஜி ஸ்ரீஸ்ரீஸ்ரீ.ராமஷ்ஷதீஸ்வராநந்தாஸ்வாமிகள் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

உதாரணமாக பெயரின் முதல் எழுத்தோ அல்லது மூன்றாவது எழுத்தோ அல்லது நான்கு மற்றும் ஐந்தாவது எழுத்துக்களோ கீழ்க்கண்ட எழுத்துக்களில் ஒன்றாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானதாக இருக்கும்...

அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ,க்,க,கா,கி,கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ,கௌ,ங்,ங,ஙா,ஙி,ஙீ,ஙு,ஙூ,ஙெ,ஙே,ஙை,ஙொ,ஙோ,ஙௌ,
ச்,ச,சா,சி,சீ,சு,சூ,செ,சே,சை,சொ,சோ,சௌ.ஞ்,ஞ,ஞா,ஞி,ஞீ,ஞு,ஞூ,ஞெ,ஞே,ஞை,ஞொ,ஞோ,ஞௌ,
ட்,ட,டா,டி,டீ,டு,டூ,டெ,டே,டை,டொ,டோ,டௌ,ண்,ண,ணா,ணி,ணீ,ணு,ணூ,ணெ,ணே,ணை,ணொ,ணோ,ணௌ,
த்,த,தா,தி,தீ,து,தூ,தெ,தே,தை,தொ,தோ,தௌ,ந்,ந,நா,நி,நீ,நு,நூ,நெ,நே,நை,நொ,நோ,நௌ,
ப்,ப,பா,பி,பீ,பு,பூ,பெ,பே,பை,பொ,போ,பௌ,ம்,ம,மா,மி,மீ,மு,மூ,மெ,மே,மை,மொ,மோ,மௌ,
ய்,ய,யா,யி,யீ,யு,யூ,யெ,யே,யை,யொ,யோ,யௌ,ர்,ர,ரா,ரி,ரீ,ரு,ரூ,ரெ,ரே,ரை,ரொ,ரோ,ரௌ,
ல்,ல,லா,லி,லீ,லு,லூ,லெ,லே,லை,லொ,லோ,லௌ,வ்,வ,வா,வி,வீ,வு,வூ,வெ,வே,வை,வொ,வோ,வௌ,
ழ்,ழ,ழா,ழி,ழீ,ழு,ழூ,ழெ,ழே,ழை,ழொ,ழோ,ழௌ,ள்,ள,ளா,ளி,ளீ,ளு,ளூ,ளெ,ளே,ளை,ளொ,ளோ,ளௌ,
ற்,ற,றா,றி,றீ,று,றூ,றெ,றே,றை,றொ,றோ,றௌ,ன்,ன,னா,னி,னீ,னு,னூ,னெ,னே,னை,னொ,னோ,னௌ.

இதற்குப் பதில் இந்த இடங்களில் வேறு எழுத்துக்களைப் போட்டு பெயரைக் கொஞ்சம் மாற்றினால் போதும், உங்கள் வாழ்க்கை வளமானதாக மாறும்..

உங்கள் பெயர் இது போல் இருந்தால் உடனே என்னை அனுகவும்.. உங்கள் பெயரில் தகுந்த மாற்றங்களைச் செய்து தருகிறேன்..

இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஏனக்கு தட்சணையாக ரூ.12071 மட்டும் தந்தால் போதும்...

எடுத்துக்காட்டாக நான் மாற்றி வைத்த பெயர்கள்:
கோ.கண்ணன் : கோவி.கண்ணன்
அரவிந்த் : டி.பி.சி.டி
சரவணவேல் :குசும்பன்.

விரைவில் வந்து பெயரை மாற்றிக்கொள்ளுங்கள்!!! என் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

Wednesday, August 27, 2008

பழகிட்டு இருக்கேன்.......

Singapore Land Tower & Chevron House

Asian Civilizations Museum


Esplanade



Esplanade


பழகிட்டு இருக்கேன்.. பிடிச்சிருந்தா மதிப்பு மிக்க பொழுதுபோக்கா வைத்துக்கொள்வேன்.. பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை, பொழுதுபோக்கா வைத்துக்கொள்வேன்.... :P

நேரமிருந்தால் படங்களுக்கு விமர்ச்சனம் தரவும்......

Friday, August 22, 2008

அய்யகோ!! நாட்டை முன்னேறவிடாமல் தடுக்கும் இட ஒதுக்கீடு!

உகாண்டாவைப் பாருங்கள்! உருகுவேயைப் பாருங்கள்! நைஜீரியாவைப் பாருங்கள்!! அங்கெல்லாம் இட ஒதுக்கீடா இருக்கிறது?

என்ன கொடுமை இது? ஒரு கல்வி நிலையத்தில் சேர உயர் சாதிக்கு ஒரு மதிப்பெண், தாழ்த்த பட்டவருக்கு தனி மதிப்பெண்? இதனால் எத்தனை திறமையுள்ளவர்கள் பாதிக்கப் படுகின்றனர்?

இப்படி இட ஒதுக்கீட்டில் வந்த திம்மிகளால் தான் SBI யிலும் இந்தியன் வங்கியிலும் யாரும் வாடிக்கையாளர்களுக்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை!

பாருங்கள்.. ஐஐடி களில் எவ்வளவு இடம் நிரப்பப் படாமல் இருக்கிறது என்று..இப்போது கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப் போகிறார்களாம்...ஆண்டு முழுவதும் உயிரை கொடுத்து படித்த மாணவர்கள் 90 சதவிதம் மதிப்பெண் வைத்திருந்தாலும், மிதமுள்ள இருக்கைகளை அவர்களுக்கு தர மாட்டார்களாம்.

வாருங்கள் அனைவரும் சேர்ந்து போராடி இட ஒதுக்கீட்டை ஒழிப்போம்! நாட்டை முன்னேற்றுவோம்!!

குறிச்சொற்கள் : இட ஒதுக்கீடு, உளறல், இந்தியா, அரசியல், உளறல், உச்ச நீதிமன்றம், ஐஐடி, SBI, நிசமாவே புதுப் பதிவர்,ப்ளிச்சிங் பவுடர் உயர் ஜாதி, சமுதயம், பிற்படுத்தப் பட்டோர், இன்ன பிற

பதிவுக்குச் சம்மந்தமில்லாத ஒரு சுட்டி: http://bleachingpowder.blogspot.com/2008/08/blog-post_21.html

அய்யகோ!! நாட்டை முன்னேறவிடாமல் தடுக்கும் இட ஒதுக்கீடு!

உகாண்டாவைப் பாருங்கள்! உருகுவேயைப் பாருங்கள்! நைஜீரியாவைப் பாருங்கள்!! அங்கெல்லாம் இட ஒதுக்கீடா இருக்கிறது?

என்ன கொடுமை இது? ஒரு கல்வி நிலையத்தில் சேர உயர் சாதிக்கு ஒரு மதிப்பெண், தாழ்த்த பட்டவருக்கு தனி மதிப்பெண்? இதனால் எத்தனை திறமையுள்ளவர்கள் பாதிக்கப் படுகின்றனர்?

இப்படி இட ஒதுக்கீட்டில் வந்த திம்மிகளால் தான் SBI யிலும் இந்தியன் வங்கியிலும் யாரும் வாடிக்கையாளர்களுக்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை!

பாருங்கள்.. ஐஐடி களில் எவ்வளவு இடம் நிரப்பப் படாமல் இருக்கிறது என்று..இப்போது கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப் போகிறார்களாம்...ஆண்டு முழுவதும் உயிரை கொடுத்து படித்த மாணவர்கள் 90 சதவிதம் மதிப்பெண் வைத்திருந்தாலும், மிதமுள்ள இருக்கைகளை அவர்களுக்கு தர மாட்டார்களாம்.

வாருங்கள் அனைவரும் சேர்ந்து போராடி இட ஒதுக்கீட்டை ஒழிப்போம்! நாட்டை முன்னேற்றுவோம்!!

குறிச்சொற்கள் : இட ஒதுக்கீடு, உளறல், இந்தியா, அரசியல், உளறல், உச்ச நீதிமன்றம், ஐஐடி, SBI, நிசமாவே புதுப் பதிவர்,ப்ளிச்சிங் பவுடர் உயர் ஜாதி, சமுதயம், பிற்படுத்தப் பட்டோர், இன்ன பிற

பதிவுக்குச் சம்மந்தமில்லாத ஒரு சுட்டி: http://bleachingpowder.blogspot.com/2008/08/blog-post_21.html

நான் ரெம்ப பிசி!!!!!!!!

Friday, August 15, 2008

PIT - நானும் வாரேன்






இதுல எதாவது தேறுதான்னு பார்த்துச் சொல்லுங்களேன்...

எனக்கு முதலாவது ஓரளவுக்குப் பரவாயில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது..

இன்னும் ஒரு 10 மணி நேரம் இருக்கு.. அதுக்குள்ள யாராவது சொல்லுங்களேன்.. எந்தப் படத்தைப் போட்டிக்கு அனுப்பலாம் என்று....


**********************************
முதல் படத்தை போட்டிக்கு அறிவிக்கிறேன்...

PIT மெகா போட்டி : http://photography-in-tamil.blogspot.com/2008/07/pit.html

Thursday, August 14, 2008

பகீரங்கமாக ஒரு எச்சரிக்கைக் கடிதம்!

அன்புள்ள பதிவர்கள் சமூகத்திற்கு,

நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

தமிழ்ப் பதிவுலகில் இந்தவாரம் கடிதம் மற்றும் உணவக வாரம் என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே.. இது வரை கடிதம் மற்றும் உணவக வாரம் சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.

மொத்தமுள்ள 7823 தமிழ்ப் பதிவர்களில் இது வரை 7620 பேர் "பகீரங்கக் கடிதம்" எழுதிவிட்டனர்; 6521 பேர் உணவகப் பதிவு போட்டுவிட்டனர். இது குசேலன்(6200) மற்றும் தசாவதார(6123) வாரங்களை விட நல்ல முன்னேற்றம் தான்.

ஆனால் சென்ற வாரங்களைப் போல இப்போது விட்டுவிடப்போவதில்லை. பதிவர்கள் அனைவரும் கட்டாயம் உணவக மற்றும் கடிதப் பதிவுகள் கட்டாயம் எழுதிட வேண்டும். எழுதாதவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப் படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கடிதத்தைக் கடைசி எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இன்னும் "பகீரங்கக் கடிதம்" எழுதாத 203 பேரும், உணவகப் பதிவு போடாத 1202 பேரும் உடனடியாகப் பதிவுகளைப் போடவேண்டும். இல்லையேல் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும்..

ஒன்றுக்கு மேற்பட்ட உணவகப் பதிவுகளை எழுதிக் குவித்துவரும் கோவியார் போன்றோர், உணவகப் பதிவுகளை நிறுத்திவிட்டு, கடிதப் பதிவு ஒன்றாவது எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

வாருங்கள் பதிவர்களே கடித மற்றும் உணவகப் பதிவு வாரத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வோம்!!!

இப்படிக்கு,
தலைமை, தமிழ்ப் பதிவர்கள் கழகம்.
(நமது கழகத்திற்குத் தலைவர் கிடையாது.... தலைமை மட்டுமே!!)

குறிப்பு:
இது தமிழ்ப் பதிவர்கள் கழகத்தின் தலைமையிடம் இருந்து எனக்கு வந்த மின் அஞ்சல். இதை என் பதிவில் இட்டு அனைவருக்கும் பகீரங்கமாகத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். எனவே இக் கடிதத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இதில் இருக்கும் கருத்துக்கள் (?) கழகத்தின் கருத்துக்களே!!

Tuesday, August 12, 2008

வாருங்கள் மென்பொருள் அடிமைகளே - தோரியத்தில் இருந்து மின்சாரம் எடுப்போம்!


public class ElectricityFromThorium{
private List<Thorium232> thorium232List;
public ElectricityFromThorium(){
thorium232List = new ArrayList<Thorium232>();
}
public ElectricityFromThorium(List<Thorium232> thorium232List){
this.thorium232List = thorium232List;
}

public void addThorium232(Thorium232 th232){
thorium232List.add(th232);
}
Public List<Uranium233> getUraniumList(){
List<Uranium233> ur233Lst = new ArrayList<Uranium233>();
For(Thorium232 tr233 : thorium232List){
Ur233Lst.add(getUraniumFromThorium(tr233));
}

}
private Uranium233 getUraniumFromThorium(Thorium232 th232){
Neutron neutron = Neutron.getInstance();
Thorium233 th233 = getTh233(th232, neutron);
Map<String, Object> paMap = getProtactinium233AndElectron(th233);
Protactinium233 pa233 = paMap.get(“pa233”);
Map<String, Object> urMap = getUranium233AndElectron(pa233);
Uranium233 ur233 = urMap.get(“ur233”);
return ur233;
}
...........
.........
........
..........
}


வாருங்கள் மென்பொருள் அடிமைகளே!! இன்னும் எத்தனை நாள் தான் அடிமைகளாக இருப்பது நாம்? விலங்குகளை உடைத்தெறிந்து விட்டு வாருங்கள்... இந்தியாவுக்குத் தோரியத்தில் இருந்து மின்சாரம் எடுத்துத் தருவோம்!!

மேலே இருப்பது தோரியத்தில் இருந்து மின்சாரம் எடுக்க நான் எழுதிய மென்பொருள். இந்த மென்பொருள் நன்றாக வேலை செய்கிறது. இது இன்னும் சோதனை அளவில் இருக்கிறது. இதில் இன்னும் பல மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கிறது. வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து இந்த மென்பொருளைச் செய்து முடிப்போம்!

இந்த மென்பொருளை நேற்று சோதித்துப் பார்த்தேன். நன்றாக வேலை செய்கிறது. நேற்று முழுதும் என்வீட்டுக் குளியலறைக்கு இந்த மென்பொருளில் இருந்து வந்த மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தினேன்....

பின் குறிப்பு:
இந்தப் பதிவு ஏன்னு புரியாதவங்க இந்தச் சுட்டிகளை எல்லாம் படித்துப் பாருங்கள்:
>> இந்தியா – விற்பனைக்கு!
>> மென்பொருள் வல்லுனர்கள் அமெரிக்காவின் அடிமைகளா?
>> மென்பொருள் துறை/வல்லுனர்கள் என்றால் சாருநிவேதிதா போன்றவர்களுக்கு இளப்பமா?
>> சாரு நிவேதிதாவுக்கு சில கேள்விகள்!

இந்தப் பதிவுக்கு குறிச்சொற்கள்:
சாரு நிவேதிதா, மென்பொருள், இந்தியா, உளரல், போதை, பீச், சுண்டல், கோணல், சாரு, மோரு, அடிமை, தோரியம், மின்சாரம், கூடங்குளம்,..........

Sunday, August 10, 2008

நன்றி மற்றும் குசேலன் நல்லாத்தான இருக்கு?

நன்றி:
குசேலனைப் பார்க்கவேண்டுமா? என நான் இட்ட இடுகைக்கு என்னைத் திட்டி வந்த பின்னூட்டங்கள் மட்டும் குறைந்தது 50 இருக்கும்.

கிரியைத் திட்டி வந்த பின்ன்னூட்டத்தை மட்டுறுத்தியதை எதிர்த்து என்னைத் திட்டி வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 25ஐத் தாண்டும்.. என்னை மட்டுமல்ல என் மனைவியையும்(?) சேர்த்துத் திட்டிப் பின்னூட்டங்கள் வந்தது. (என்னைப் பாராட்டியவருக்கு ஒரு தகவல்: எனக்கு இன்னும் திருமணம் ஆகலை..:P )
என்னைத் திட்டிப் பின்னூட்டம் போட்டவருக்கு/போட்டவர்களுக்கு நன்றி!!!
_________________________________________________________________
குசேலன் நல்லாத்தான இருக்கு?



"ரஜினி வாட்டாள் நாகராஜிடம் மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை." என்று கிரி அவர்கள் தெளிவாக விளக்கிய பின் தான் ரஜினி மீது எந்தத் தப்பும் இல்லை எனப் புரிந்தது. அவரது விளக்கத்தை ஏற்று குசேலன் பார்ப்பதில்லை என்ற முடிவை மாற்றிக் கொண்டு 75 ஆண்டு தமிழ்சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படமான "குசேலன்" படத்தைப் பார்த்தேன்.

லக்கிலுக், பரிசல்காரன், கோவி.கண்ணன் மற்றும் பலர் ரஜினி மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குசேலன் படம் நன்றாக இல்லை என எழுதியுள்ளனர் என்பது படத்தைப் பார்த்தபின் தான் தெரிந்தது. இவர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள் ஒரு சிறந்த படத்தைப் பற்றி இப்படியெல்லாம் எழுத உங்களுக்கு எப்படி மனது வந்தது?

இந்தப் படம் சூப்பர்ஸ்டாரின் தலைசிறந்த படங்களில் ஒன்று. P.வாசு இயக்கிய படங்களில் இதுவே சிறந்தது. ஒரு படத்தில் இதைவிட என்ன இருக்க்வேண்டும் எனத் தெரியவில்லை. :(

என்னைப் பொருத்தவரை இது ஒரு நல்ல படம். மூன்று மணிநேரம் கவலைகளை மறந்து ரசிக்க ஏற்ற படம்.
படத்தைப் பார்த்த பின்னும் சொல்கிறேன், குசேலன் குறித்த என் இந்த இடுகையில் எந்த மாற்றமும் இல்லை :
http://jegadeesangurusamy.blogspot.com/2008/08/blog-post_5893.html
சூப்பர் ஸ்டாரின் படம் எப்போதும் நன்றாகத்தான் இருக்கும் என்பதை நம்பி படம் பார்க்காமலேயே நான் எழுதிய விமர்சனம் அப்படியே உண்மையாக உள்ளது. படம் மிகவும் அருமை.

லக்கி, பரிசல் போன்ற கமல் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், கமல் ரசிகன் என்ற கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு நடுநிலையாளராக, மறுபடியும் இந்தப் படத்தைப் போய்ப் பாருங்கள். அப்போது தெரியும் எவ்வளவு நல்ல படம் என்பது.

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்...
குசேலன் மிகச் சிறந்த படம். அனைவரும் தவறாமல் பார்க்கவும்..

குசேலன் நல்லாத்தான இருக்கு? ஆனா ஏன் எல்லாரும் நல்லா இல்லைன்னு சொல்றாங்க?
ஒன்னுமே புரியலை...

பின் குறிப்பு:
1. நான் குருவி, அழகிய தமிழ்மகன், திருப்பதி, பரமசிவன் போன்ற படங்களைப் பார்த்தபோதும் எனக்கு இப்படித் தான் தோன்றியது.. "படம் நல்லாத்தான இருக்கு? ஏன் எல்லோரும் நல்லா இல்லைன்னு சொல்றாங்க?" :P

2. படத்திற்கும் பதிவுக்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை!

Saturday, August 9, 2008

துர்காவின் மோசடி - KRS க்கு நியாயம் தேவை!

இந்தப் படத்தைப் பாருங்க அவருடைய மோசடி தெரியும்...


ஏன் இந்த மோசடின்னு கேட்டுப் பின்னூட்டமிட்டால் அந்தப் பின்னூட்டத்தையும் மட்டுறுத்துகிறார்.. நீங்களே அவரிடம் நியாயத்தைக் கேளுங்கள்...

இவர் செப்டம்பரில் இடப்போகும் இடுகைக்கு நிஜமா நல்லவன் ஆகஸ்ட்டிலேயே பின்னூட்டமிடுகிறாராம்... :P அந்தக் கூத்தை இங்கு பாருங்கள்:


KRS சின் பிறந்தநாள் செப்டம்பர், 9ம் தேதியா இல்லை ஆகஸ்ட், 9ம் தேதியா என்று அனைவரும் குழம்பவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் இந்தக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் துர்கா....

Wednesday, August 6, 2008

ஒக்கேனக்கல் கர்நாடகத்துக்கே சொந்தம்!

ஒக்கேனக்கல் கர்நாடகத்தின் ஒருங்கினைந்த பகுதி என்று கர்நாடக மின்துறை அமைச்சர் ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்..
(செய்தி இங்கே: http://www.dailythanthi.com/article.asp?NewsID=430299&disdate=8/6/2008&advt=1 )
~~~~~~~~~~~~~~~~~


ஆம்! ஒக்கேனக்கல் கர்நாடகத்துக்கே சொந்தம்...

ஒக்கேனக்கல் மட்டுமல்ல நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்கள் முழுவதுமே கர்நாடகாவுக்கே சொந்தம்!

அதுபோல் வேலூர், காஞ்சிபுரம்,திருவள்ளூர், சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் ஆந்திராவுக்கே!

கோவை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் முழுமையும் கேரளாவுக்கே சொந்தம்.

நாகை, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் புதுவைக்கு உரிமையானவை!

(விரும்பினால் ஒரிசாவும், கோவாவும் கூட ஆளுக்கு 3 மாவட்டங்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்...)

எனவே மத்திய அரசு தலையிட்டு இந்த மாநிலங்களுக்கு விரைவில் நியாயம் கிடைக்க ஆவன செய்யவேண்டும்..

Tuesday, August 5, 2008

எச்சரிக்கை! - சிங்கை சந்திப்பில் கலந்துகொண்டவர்களுக்கு

கடந்த ஞாயிறன்று சிங்கையில் பதிவர் சந்திப்பு நடந்தது தாங்கள் அனைவரும் அறிந்த செய்தியே.
சந்திப்பு இனிதே நடந்து முடிந்தது. அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால், சந்திப்பில் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தை பதிவர்கள் யாரும் சரியாகச் செயல்படுத்தவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது..

அந்தத் தீர்மானம் இது தான்:
3. கலந்து கொண்ட பதிவர்களுக்கு ஒவ்வொரு பதிவரும் 'மீ த பர்ஸ்ட்' பின்னூட்டம் நிபந்தனையின்றி போடவேண்டும்.

இதைப் பதிவர்களில் பலர் செயல்படுத்தவில்லை எனத் தெரிகிறது.
அவர்களுக்கு இது கடைசி எச்சரிக்கை.. விரைவில் "மீ த ஃபர்ஸ்ட்" பின்னூட்டங்காள் போட ஆரம்பிக்குமாறு கடும் எச்சரிக்கை விடுகிறேன்.

இதை செயல் படுத்தாதவர்களுக்கு தண்டனை:

"அடுத்த சந்திப்பில் பாரி.அரசுவுடன், அவர் விரும்பும் தலைப்பில் ஒருமணி நேரம் விவாதிக்க வேண்டும்.

பாரி.அரசு மீ த ஃபர்ஸ்ட் பின்னூட்டம் போடத்தவறினால் ஒரு மணி நேரம் அவர் மௌணவிரதம் இருக்கவேண்டும். "


அதிக மீ த ஃபர்ஸ்ட் பின்னூட்டங்கள் போடுவேருக்கு அடுத்த சந்திப்பில்
"பதிவர் மைஃபிரண்ட் பின்னூட்டி விருது" வழங்கப்படும். இவ்விருது பெறுபவருக்கு அல்வா கொஞ்சம் அதிகமாகத் தரப்படும்...

குறிப்பு: பதிவு குறித்து போடப்படும் பின்னூட்டங்கள் "மீ த ஃபஸ்ட்" பின்னூட்டமாக ஏற்றுக் கொள்ளப்படாது. ஒரு பதிவில் எத்தனை பின்னூட்டங்களும் போடலாம். ஆனால் அதில் ஒன்றாவது "மீ த ஃபஸ்ட்" பின்னூட்டமாக இருக்கவேண்டும்

சூப்பர் ஸ்டார் வாழ்க!!! அவரது புகழ் ஓங்குக!!!

நன்றி

Monday, August 4, 2008

Urgent requestu to ICC - in English (Thanks to ILA) :)

இன்று காலை ICC க்கு ஒரு கடிதம் தமிழில் எழுதினேன். இந்த மரமண்டைக்கு ICC நிர்வாகிகள் யாருக்கும் தமிழ் தெரியாது என்ற உண்மை தெரியாமல் போய்விட்டது. அதனால் நான் மனு கொடுத்து 4 மணி நேரம் ஆகியும் இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்ல.

நம்ம இளா சொல்லித்தான் அவங்களுக்கு தமிழ் தெரியாது என்ற விசயமே தெரியவந்தது.

ஆனால் எனக்கு ஆங்கிலம் சரியாத் தெரியாது என்பதால் ஆங்கிலம் நன்கு தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் பதிவைக் கொடுத்து மொழிபெயர்த்துத் தரச்சொன்னேன். இதோ இது தான் அவர் மொழிபெயர்த்துத் தந்தது. அந்த மொழிபெயர்ப்பாளருக்கு மிக்க நன்றி!


Dear ICC officersulu,
world crickettu history's only himalaya our leader Sachin Ramesh Tendulkaru is you know.

he westindies teams brain laralu test recordu break 96 runus only more requiredu,

so, he quickly lara's recordu broke, qucikly to Namibia or Permuda team give test statusu and arrange a test seriesu having atleastu 5 test matchesu, i requestu you.

if requiredu, for this one 100crore sachin fans signatureu i am ready to get for this.

so pleasu arange a test series againstu Namibia or Permuda teamu.

by,
sachin veriyan

இந்த ப்ளாக்கர் சரியாவே வேலை செய்ய மாட்டேன்னுதுங்க.. அவரு எவ்வளவு பெரிய மொழிபெயர்ப்பாளர். அவரது ஆங்கிலத்தில் spellingu mistakeu எதுவுமே இருக்காது. ஆனால் இந்த ப்ளாக்கர் அங்கங்க சிகப்புக் கோடு போட்டு spellingu mistakeu(இதுக்குக் கூட சிகப்புக் கோடு போடுதுங்க.:(. ) இருக்குன்னு சொல்லுதுங்க.... என்ன கொடுமை இது?

ICCக்கு ஒரு அவசர வேண்டுகோள்!!



அன்புள்ள ஐசிசி நிர்வாகிகளுக்கு,

வணக்கம்.

உலக கிரிக்கட் வரலாற்றின் ஒரே இமயம் எங்கள் தலைவர் சச்சின் ரமேஸ் தெண்டுல்கர் என்பது தாங்கள் அறிந்ததே.

அவர் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பிரயன் லாரா அவர்களின் டெஸ்ட் சாதனையை முறியடிக்க இன்னும் 96 ஓட்டங்கள் தேவைப் படுகிறது.

எனவே அவர் விரைவில் லாராவின் சாதனையை முறியடிக்கும் வகையில், விரைவில் நமீபியா அல்லது பெர்முடா அணிக்குத் தற்காலிகமாகவேனும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதி தந்து, குறைந்தது 5 போட்டிகளாவது கொண்ட டெஸ்ட் தொடரை உடனே ஏற்பாடு செய்யவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தேவைப்பட்டால், இதற்காக ஒரு 100கோடி சச்சின் ரசிகர்களிடமிருந்து கையெழுத்து வாங்கித் தரவும் நான் தயாராக இருக்கிறேன்.

எனவே தயவு செய்து விரைவில் நமீபியா அல்லது பெர்முடா அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை ஏற்பாடு செய்து தர வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
சச்சின் வெறியன்.

Sunday, August 3, 2008

குசேலன் - முதல் நாள் முதல் காட்சி - காணொளி

குசேலன் - முதல் நாள் முதல் காட்சி - காணொளி



குசேலனின் புண்ணியத்தில் முதல் காணொளிப் பதிவும் போட்டுவிட்டேன்...... :)

நன்றி: indiainteracts.com

Saturday, August 2, 2008

குசேலன் - ஒரு மாறுபட்ட பார்வை!



நல்ல சினிமா விரும்பிகளுக்காகவும் தன்னால் ஒரு படம் கொடுக்க முடியும் என சூப்பர்ஸ்டார் ரஜினி நிரூபித்திருக்கும் படம் குசேலன்.

ரஜினியின் தரமான படங்கள் எனப் பட்டியல் போடுபவர்கள் தாராளமாய் இந்தப் படத்துக்கு முதலிடம் கொடுக்கலாம்.

மலையாள ரீமேக்காக இருந்தாலும், குசேலனை தன் சிறந்த படமாகச் சொல்லி மார்த் தட்டிக் கொள்ளலாம் இயக்குநர் பி.வாசு.
-நன்றி: தட்ஸ்தமிழ்
**************************************



இனி குசேலன் என் பார்வையில்:

* சூப்பர்ஸ்டார் தான் சூப்பர்ஸ்டார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். உச்ச நடிகரின் நடிப்பு ஒவ்வொரு படத்திலும் உச்சமடைந்து கொண்டே இருக்கிறது. சுந்தர்ராஜனுக்கு அவர் தரும் பதில்கள் ஒவ்வொன்றும் கலக்கல்!

* நயன்தாரா வழக்கம்போலக் கலக்கியுள்ளார். விஜய் டீவி தனக்குத் தந்த விருதுக்குத் (most entertainer)தகுதியானவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். படத்துக்குப் படம் இவரது நடிப்பு மெருகேறி வருகிறது.

* பசுபதி - வெயில் படத்திற்குப் பின் மீண்டும் ஒருமுறை கலக்கியிருக்கிறார். ஏழை சவரத் தொழிலாளியாக வாழ்ந்துகாட்டியுள்ளார். ரஜினியும் பசுபதியும் சந்திக்கும் காட்சியில் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சியுள்ளனர்.

* மீனா வறுமையிலும் செம்மையாக, கணவனுக்கு ஏற்ற மனைவியாக, அப்படியே புராணகால சுசீலையின் மறு உருவமாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
(சுசீலையைப் பற்றி அறியாதவர்கள் இங்கு கிளிக்கி அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளவும்)

* வடிவேலு, சந்தானம், சந்தானபாரதி மற்றும் லிவிங்ஸ்டன் & கோவின் நகைச்சுவைகள் வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கின்றன. ஆபாசம், இரட்டை அர்த்தம் ஏதும் இல்லாத அருமையான நகைச்சுவை!

* சில காட்சிகளே வந்தாலும் கலக்கிச் சென்றிருக்கிறார் பிரபு.

* ஒவ்வொரு நடிகரும் போட்டி போட்டுக்கொண்டு வாழ்ந்திருக்கின்றனர்.

* அருமையான படத்தை மேலும் சிறப்பாக்கும் பாடல்களும் இசையும்.

மொத்தத்தில் ஒரு கலக்கலான படம். குறைந்தது 4 முறையாவது பார்க்கலாம்..

**********************************

குறிப்புகள் சில:

1. இவ்வளவு அருமையான படத்தினைக் குறை கூறி வரும் விமர்சனங்களைப் பார்க்கும் போது, ரஜினி மீதான அவர்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியே தெரிகிறது.

2. மக்கள் வலையுலகில் வரும் விமர்சனங்களை நம்பாமல், தட்ஸ்தமிழ் போன்ற நல்ல தளங்கள், குமுதம் போன்ற நல்ல இதழ்களில் வரும் விமர்சனங்களை மட்டும் நம்பி, பெருவாரியாத் திரையரங்கிற்குச் சென்று படத்தை ரசித்து மாபெரும் வெற்றியடையச் செய்யவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

3. சூப்பர்ஸ்டாரின் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தருவோர் தமிழ் மக்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தமுறை ஐதராபாத்தில் தந்த பேட்டியில் மேலும் அதிக வியர்வைத்துளிகள் சிந்திவிட்டதால், கொஞ்சம் அதிகமாகப் போட்டு ஒன்றரைப் பவுன் தங்கக்காசாகத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

4. படத்தைப் பார்த்துத் தான் விமர்சனம் எழுதினாயா என்று என்னைப் பார்த்துக் கேள்வி கேட்போருக்கு, என் ஒரே பதில் :
படம் பார்த்துத்தான் திரை விமர்சனம் எழுதவேண்டும் என்று எந்த விதியும் சொல்லவில்லை!

**********************************

என் ஒருவருட வலையுலக வாழ்வில் நான் எழுதிய முதல் திரைவிமர்சனம் இது. எனவே இதை பரிசல்காரனின் "முதல்" தொடர்விளையாட்டிற்கு என் இடுகையாக அறிவிக்கிறேன்..

Friday, August 1, 2008

இந்த மாதம் குசேலன் மாதம்!



இந்தப் படத்துக்கு விளக்கம் தேவையில்லை!!!
:)