Friday, August 22, 2008

அய்யகோ!! நாட்டை முன்னேறவிடாமல் தடுக்கும் இட ஒதுக்கீடு!

உகாண்டாவைப் பாருங்கள்! உருகுவேயைப் பாருங்கள்! நைஜீரியாவைப் பாருங்கள்!! அங்கெல்லாம் இட ஒதுக்கீடா இருக்கிறது?

என்ன கொடுமை இது? ஒரு கல்வி நிலையத்தில் சேர உயர் சாதிக்கு ஒரு மதிப்பெண், தாழ்த்த பட்டவருக்கு தனி மதிப்பெண்? இதனால் எத்தனை திறமையுள்ளவர்கள் பாதிக்கப் படுகின்றனர்?

இப்படி இட ஒதுக்கீட்டில் வந்த திம்மிகளால் தான் SBI யிலும் இந்தியன் வங்கியிலும் யாரும் வாடிக்கையாளர்களுக்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை!

பாருங்கள்.. ஐஐடி களில் எவ்வளவு இடம் நிரப்பப் படாமல் இருக்கிறது என்று..இப்போது கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப் போகிறார்களாம்...ஆண்டு முழுவதும் உயிரை கொடுத்து படித்த மாணவர்கள் 90 சதவிதம் மதிப்பெண் வைத்திருந்தாலும், மிதமுள்ள இருக்கைகளை அவர்களுக்கு தர மாட்டார்களாம்.

வாருங்கள் அனைவரும் சேர்ந்து போராடி இட ஒதுக்கீட்டை ஒழிப்போம்! நாட்டை முன்னேற்றுவோம்!!

குறிச்சொற்கள் : இட ஒதுக்கீடு, உளறல், இந்தியா, அரசியல், உளறல், உச்ச நீதிமன்றம், ஐஐடி, SBI, நிசமாவே புதுப் பதிவர்,ப்ளிச்சிங் பவுடர் உயர் ஜாதி, சமுதயம், பிற்படுத்தப் பட்டோர், இன்ன பிற

பதிவுக்குச் சம்மந்தமில்லாத ஒரு சுட்டி: http://bleachingpowder.blogspot.com/2008/08/blog-post_21.html

5 comments:

said...

இது இதே பதிவில் 2 மணி நேரத்திற்கு முன் போட்ட பதிவின் மீள் பதிவு..

அந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள்:

7 comments:

கோவி.கண்ணன் said...

//குறிச்சொற்கள் : இட ஒதுக்கீடு, உளறல், இந்தியா, அரசியல், உளறல், உச்ச நீதிமன்றம், ஐஐடி, SBI, நிசமாவே புதுப் பதிவர்,ப்ளிச்சிங் பவுடர் உயர் ஜாதி, சமுதயம், பிற்படுத்தப் பட்டோர், இன்ன பிற
//

குறிசொற்கள் குறிப்பார்த்து சரியாக போட்டு இருக்கிறாய் !
:)
August 22, 2008 11:05 AM
டாக்டர் டோனி டான் said...

எங்க நாட்டில் இட ஒதுக்கீடு இல்லை
August 22, 2008 11:05 AM
ஜ்யாஉல் ஹக் said...

எங்க நாட்டிலும் இல்லை
August 22, 2008 11:06 AM
எமதர்மன் said...

எங்க ஊரிலும் இட ஒதுக்கிடூ இல்லை
August 22, 2008 11:06 AM
குப்பை பொறுக்குபவன் said...

என் தொழிலுக்கு இட ஒதிக்கீடு இல்லை
August 22, 2008 11:07 AM
ஜோசப் பால்ராஜ் said...

என்னப்பா இது வைகோ பேசுனமாதிரியில்ல இருக்கு
August 22, 2008 11:09 AM
நிஜமா நல்லவன் said...

வர வர உங்கள் பதிவை விட குறிச்சொற்கள் அருமையா இருக்கு:)
August 22, 2008 12:26 PM

said...

நான் வெள்ளிக்கிழமை விரதம் யாருக்கும் இன்னிக்கு பின்னூட்ட மாட்டேன்.

said...

test..
சோதனை...

said...

எல்லோரும் எல்லாரையும் சமம் என்று நினைக்கிற பக்குவம் வந்துவிட்டால், இட ஒதுக்கீட்டுக்குத் தேவை இருக்காது. பின் தங்கியவர்களை கரம் பிடித்து தூகிவிடும் நிலை இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.




அன்புடன்,
ஜோதிபாரதி.

said...

nanri arumayana sindhanai sossy vethanai