Saturday, August 11, 2007

வழிகாட்டும் வள்ளுவர்-2

ராஜன், என்னுடன் பணிபுரிந்த நண்பன். அவனும் எங்கள் திட்டப்பணித் தலைவர்(P.L) இளங்கோவும் மிகவும் நெருக்கம். பல விசயங்களில்(ஆன்மீகம்,...) அவர்கள் ஒரே கருத்து கொண்டவர்கள் என்பதால் எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பார்கள்(தேனீர் இடைவேளையின் போது இருவரும் எங்களால் ஒன்றாகவே கலாய்க்கப் படுவ்ர்...).

ஒரு புதிய திட்டப்பணி(project), நல்ல சவாலானது(web services ,swt,....). அந்தப் பணிக்கான ஆட்களைத் தேர்வு செய்யும் போது இளங்கோ, ராஜனைத் தேர்ந்தெடுக்க வில்லை. இது ஏன் என்பது அனைவருக்கும் மிகவும் குழப்பமாக இருந்தது.

ஒரு நாள் தனியாக இருந்தபோது அவரிடம் இது பற்றி நான் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்:

ராஜனுக்கும் எனக்கும் உள்ள நட்பு வேறு, வேலை வேறு. ஒரு வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் போது அவரால் முடியுமா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதமை யெல்லாந் தரும்.

-திருக்குறள்(அதிகாரம்- 51(தெரிந்து தெளிதல்) ; குறள்-507)

(அமர்த்தும் பணியில் அறியவேண்டுவன எதனையும் அறியாத ஒருவரை அவர்மீது நாம் வைத்திருக்கும் பாசத்தையே அடிப்படையாகக்கொண்டு அமர்த்துதல், நம்மை உலகம் அறிவில்லாதவர் எனத் தூற்றும் படியான எல்லாத் தீமைகளையும் கொடுக்கும்)

0 comments: