Saturday, August 9, 2008

துர்காவின் மோசடி - KRS க்கு நியாயம் தேவை!

இந்தப் படத்தைப் பாருங்க அவருடைய மோசடி தெரியும்...


ஏன் இந்த மோசடின்னு கேட்டுப் பின்னூட்டமிட்டால் அந்தப் பின்னூட்டத்தையும் மட்டுறுத்துகிறார்.. நீங்களே அவரிடம் நியாயத்தைக் கேளுங்கள்...

இவர் செப்டம்பரில் இடப்போகும் இடுகைக்கு நிஜமா நல்லவன் ஆகஸ்ட்டிலேயே பின்னூட்டமிடுகிறாராம்... :P அந்தக் கூத்தை இங்கு பாருங்கள்:


KRS சின் பிறந்தநாள் செப்டம்பர், 9ம் தேதியா இல்லை ஆகஸ்ட், 9ம் தேதியா என்று அனைவரும் குழம்பவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் இந்தக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் துர்கா....

15 comments:

said...

மீ த பர்ஸ்ட்....

said...

நோ கமேண்ட்ஸ் :)

said...

//
VIKNESHWARAN said...

நோ கமேண்ட்ஸ் :)

//
அதெல்லாம் கிடையாது உங்க கமேண்ட்ஸ் கட்டாயம் வேணும்.... :P

said...

அண்ணே வேண்டாம் விட்டுடுங்க....:(

நீங்க போய் குசேலன் பதிவை எல்லாம் மீள்பதிவு செய்ங்க..:)

said...

சூப்பரு....
துர்காவுக்கேவா????
:)))

துர்கா...
ஜெகா-வை என் பெஸ்ட் ஃபிரெண்டு ஆக்கிக்கலாமா-ன்னு தீவிரமா பரிசீலிச்சிக்கிட்டு இருக்கேன்! :))

said...

//
நிஜமா நல்லவன் said...

அண்ணே வேண்டாம் விட்டுடுங்க....:(

நீங்க போய் குசேலன் பதிவை எல்லாம் மீள்பதிவு செய்ங்க..:)
//
யோவ்... நீரு நிசமாவே நல்லவரு தானா??
நியாயம் வாங்கித்தர வேண்டிய நீங்களே இப்படிச் சொன்னா எப்படி??

செயதது மாரியாத்தாவேயானாலும் தப்பு தப்புதான்!!

Anonymous said...

வெட்டியாக இருக்கீங்கன்னு தெரியும் அண்ணா,ஆனா இம்புட்டு வெட்டியாகவா இருப்பீங்க :)
உங்க கமெண்ட் எப்போவோ publish பண்ணி அதுக்கு பதிலும் போட்டாச்சு

Anonymous said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சூப்பரு....
துர்காவுக்கேவா????
:)))

துர்கா...
ஜெகா-வை என் பெஸ்ட் ஃபிரெண்டு ஆக்கிக்கலாமா-ன்னு தீவிரமா பரிசீலிச்சிக்கிட்டு இருக்கேன்! :))//

all the very best ravi grandpa :)

said...

//
kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சூப்பரு....
துர்காவுக்கேவா????
:)))

துர்கா...
ஜெகா-வை என் பெஸ்ட் ஃபிரெண்டு ஆக்கிக்கலாமா-ன்னு தீவிரமா பரிசீலிச்சிக்கிட்டு இருக்கேன்! :))

//
வாங்க நண்பரே.... :)
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

said...

//
துர்கா said...

வெட்டியாக இருக்கீங்கன்னு தெரியும் அண்ணா,ஆனா இம்புட்டு வெட்டியாகவா இருப்பீங்க :)
உங்க கமெண்ட் எப்போவோ publish பண்ணி அதுக்கு பதிலும் போட்டாச்சு
//
வாம்மா மாரியாத்தா!!!
கடும் போராட்டத்திற்குப் பின் நியாயம் வென்றது!!!!!
:)

said...

அடேங்கப்பா சரியான மோசடிக்காரியாகத்தான் இருக்கா, இலச்சிமலை மாரியாத்தா தான் எல்லோரையும் காப்பாத்தனும் !

said...

எனக்கு ஒன்னுமே புரியல ஜெகு. உங்க பதிவு பின் நவீனத்துவமா? என்னைய மாதிரி சின்ன பசங்களுக்கும் புரியுற மாதிரி சொல்லுங்க.

said...

சம்பந்தப்பட்ட வழக்கின் சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது துர்கா குற்றவாளி என்றே தெரிகிறது. அவரை இ.பி.கோ 399 சட்டப்பட்ட 24 மணி நேரம் தொடர்ந்து சாட் செய்ய தீர்ப்பளிக்கிறேன்.

said...

//
கானா பிரபா said...

சம்பந்தப்பட்ட வழக்கின் சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது துர்கா குற்றவாளி என்றே தெரிகிறது. அவரை இ.பி.கோ 399 சட்டப்பட்ட 24 மணி நேரம் தொடர்ந்து சாட் செய்ய தீர்ப்பளிக்கிறேன்.

//
தண்டனையைப் பார்த்தா, அவருக்கு மாதிரி தெரியலியே...
அவர் கூட சாட் செய்யுறவங்களுக்கில்ல இது தண்டனை... :P

said...

துர்க்கா பாச்க்காரி மட்டும் தான்னு இவ்ளோ நாள் நினைச்சிட்டு இருந்தேன்... இப்போ தான் தெரியுது. சரியான__________ :D