Saturday, June 21, 2008

ஆத்தா கோபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

மலேசிய மாரியாத்தாவின் உக்கிரப் பார்வை என்பக்கம் திரும்பியுள்ளது..

எப்படித் தப்புவது என்றே தெரியவில்லை. யாராவது உதவுங்கள். ஆத்தாவின் கோபத்தில் இருந்து தப்ப என்ன செய்யவேண்டும் என யாராவது பரிகாரம் சொல்லுங்கள்.

நடந்தது என்ன?
வேற ஒன்னும் இல்லைங்க.. மலேசிய மாரியாத்தாவுக்கு பல்லைப் பிடுங்க அறுவை சிகிச்ச்சை நடக்கப்போகுதாம். அவங்க விரைவில் நலம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அந்தப் பதிவில் அப்படியே அவரது அருமை பெருமைகளை எல்லாம் கொஞ்சம் பாராட்டி எழுதியிருந்தேன். அவ்வளவுதான். இதுக்குப் போய் கோபப்பட்டு அலைபேசியில் காய்ச்சி எடுத்துட்டாங்க..

அவ்வளவுதான் முடிஞ்சதுன்னு நினைச்சா.. அங்க வந்து சிவாவும், நல்லவரும் இன்னும் சிலரும் கும்ம ஆரம்பிச்சாங்க... அதுக்கு வேற திட்டு.. என் அலைபேசியே அழுதுவிட்டது...

இது போதாதுன்னு இன்னும் 2 புல்லுருவிகள் இதை வைத்துப் பதிவிட்டு மேலும் கோபத்தை அதிகரிக்க வைத்துவிட்டனர்..

இதுல பாரி.அரசு இருக்காரே..... பதிவு போட்டு நம்ம முன்னோரையே கேவலப் படுத்தீட்டார்..

அண்ணே, எனக்கு அடுத்த வாரம் ஆப்புரேசன். அதுக்கு முன்னாடி தோசை வாங்கித்தாங்கன்னு ஆசையா தங்கச்சி கேட்டா, அதை வச்சுக் கும்மிப் பதிவு போடுறாரு கோவி... :(.. இதுல அவர் வருடக்கணக்கா தடை செய்து வச்சிருந்த அனானி/அதர் ஆப்சனைக் கூட கும்மிக்காக திறந்துவிடுறார்... இப்ப சொல்லுங்க ஆத்தாவுக்கு கோபம் கூடுமா.. கூடாதா? கோபம் கூடுது.. ஆனா எல்லாக் கோபமும் என்மேல தான் வருது அவங்களுக்கு...

எவ்வளவு கோவமுன்னா, ஊர்ல உலகத்துல இருக்குற எல்லாருக்கும் அனுப்பின அந்தப் பல்லு புகைப்படத்தைக் கூட எனக்கு அனுப்பல..... :(

இதுல அங்க போய் கும்மி அடிக்குறவங்க வேற..

அங்க விழுற ஒவ்வொரு கும்மிக்கும் இங்க எனக்குத் திட்டு.. கேட்டா, நான் தான் முதல்ல பதிவு போட்டு ஆரம்பிச்சு வைச்சேனாம்.. ஒரு வாழ்த்து சொன்னது இவ்வளவு பெரிய குத்தமா? :(

வலிக்குது காது. எவ்வளவு தான் திட்டு வாங்குறது... திட்டு வாங்கிக்கிட்டே சிரிக்கிறமாதிரி எவ்வளவு நேரம் தான் நடிக்கமுடியும்?

யாராவது சொல்லுங்களேன்... எப்படித் தப்பிக்கிறது ஆத்தாவின் உக்கிரப் பார்வையில் இருந்து? ஜோகூர் ஆத்தாவுக்கு கூழ் காய்ச்சி ஊற்றக் கூட தயார்.(ரவா தோசை தான் வேணுமின்னா அதுக்கும் தயார்...)

ஆத்தா அப்பாவிச் சிறுவனை மன்னித்து அருள் புரிவாயாக..... :P

மீண்டும் சொல்லிக்கிறேன்... அறுவை சிகிச்சை முடிந்து


இப்படி இருந்த துர்காவை


இப்படி ஆக்கீட்டாங்க எல்லாரும் சேர்ந்து... :(

27 comments:

said...

கூல் ஆக்கனும்ன்னு நினைச்சதால.. கூழ் கூல் ஆகிவிட்டது போலயே...

said...

அப்படியா சொல்லவே இல்லை...

டர்கா...எனக்கு டிரிட் எப்போ..?

said...

வாங்க கயலக்கா... முதல் வருகை.. :)

//
கயல்விழி முத்துலெட்சுமி said...
கூல் ஆக்கனும்ன்னு நினைச்சதால.. கூழ் கூல் ஆகிவிட்டது போலயே...
//
நன்றி.. மாற்றிவிட்டேன்..:)

கோவி அண்ணன் கிட்ட ப்ரூப் பாக்கக் கொடுத்தேன்.. சரியாப் பாக்காம எல்லாம் சரியா இருக்குன்னு சொல்லீட்டார் போல... :(

said...

//இது போதாதுன்னு இன்னும் 2 புல்லுருவிகள் இதை வைத்துப் பதிவிட்டு மேலும் கோபத்தை அதிகரிக்க வைத்துவிட்டனர்..//

யோவ்...இதான் சாக்குன்னு ஆத்தா பேரச்சொல்லி அந்த 2 பேரையும் தாக்குறீரா ? பழி ஒருபக்கம் பாவம் ஒரு பக்கம் !

பொழச்சு போங்க !

said...

'ஆத்தாவுக்கு ஆப்ரேசன் நல்ல படியா நடந்து முடிந்தால் ஆத்தாவை அழைத்துச் சென்று சைனாடவுன் மாரியம்மன் கோவில் பூக்குழியில் இறக்கிவிடுகிறேன்' என்று வேண்டி இருக்கிறேன்.
:)

said...

//அங்க விழுற ஒவ்வொரு கும்மிக்கும் இங்க எனக்குத் திட்டு.. கேட்டா, நான் தான் முதல்ல பதிவு போட்டு ஆரம்பிச்சு வைச்சேனாம்.. //

ஹலோ அங்கே அப்படி போகுதா கதை ?

என்கிட்ட '3 பேரிடம் சொன்ன விசயத்தை 3000 பேர் படிக்க வச்சு எனக்கு எல்லோரோட ஆசிர்வாதத்தோடு பல் ஆப்ரேசன் நல்ல படியா நடக்க வேண்ட வச்சிட்டிங்க...உங்களுக்கு டாங்க்ஸ்' அப்படின்னு சொல்லிச்சே.

said...

//ஜோகூர் ஆத்தாவுக்கு கூழ் காய்ச்சி ஊற்றக் கூட தயார்.(ரவா தோசை தான் வேணுமின்னா அதுக்கும் தயார்...)
//


ஜெகதீசன் தம்பி,

வெறும் ரவாதோசை இல்லை, மிளகாய் பொடியோட வேண்டுமாம். இப்படி ஒரு ஆத்தாவை நான் பார்த்ததே இல்லை.

said...

//ஜோகூர் ஆத்தாவுக்கு கூழ் காய்ச்சி ஊற்றக் கூட தயார்.(ரவா தோசை தான் வேணுமின்னா அதுக்கும் தயார்...)
//


ஜெகதீசன் தம்பி,

வெறும் ரவாதோசை இல்லை, மிளகாய் பொடியோட வேண்டுமாம். இப்படி ஒரு ஆத்தாவை நான் பார்த்ததே இல்லை.

said...

//யாராவது சொல்லுங்களேன்... எப்படித் தப்பிக்கிறது ஆத்தாவின் உக்கிரப் பார்வையில் இருந்து? //

வேற வழியே இல்லை, ஆப்புரேசன் முடியும் வரை அலைபேசியைத் தொடாதே, ஜிமெயில் பக்கமும் வந்துடாதே.

Anonymous said...

//நடந்தது என்ன?
வேற ஒன்னும் இல்லைங்க.. மலேசிய மாரியாத்தாவுக்கு பல்லைப் பிடுங்க அறுவை சிகிச்ச்சை நடக்கப்போகுதாம். //

என்னாண்ட அனுப்பு, ஆப்புரேசன் சக்ஸஸ்.... ஆகும் ! அப்பறம் பிரச்சனையே இருககது

said...

//இதுல அவர் வருடக்கணக்கா தடை செய்து வச்சிருந்த அனானி/அதர் ஆப்சனைக் கூட கும்மிக்காக திறந்துவிடுறார்//

ஹா ஹா ஹா ஹா

//வலிக்குது காது. எவ்வளவு தான் திட்டு வாங்குறது... திட்டு வாங்கிக்கிட்டே சிரிக்கிறமாதிரி எவ்வளவு நேரம் தான் நடிக்கமுடியும்?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//கோவி.கண்ணன் said...
//என்கிட்ட '3 பேரிடம் சொன்ன விசயத்தை 3000 பேர் படிக்க வச்சு எனக்கு எல்லோரோட ஆசிர்வாதத்தோடு பல் ஆப்ரேசன் நல்ல படியா நடக்க வேண்ட வச்சிட்டிங்க...உங்களுக்கு டாங்க்ஸ்' அப்படின்னு சொல்லிச்சே.//

:-))))))))))))))))

எப்படி இருந்த துர்கா இப்படி ஆகிட்டாங்க :-))))

said...

/
மலேசிய மாரியாத்தாவின் உக்கிரப் பார்வை என்பக்கம் திரும்பியுள்ளது..
/

புல்லட் ப்ரூப் மாதிரி எதுனா இருந்தா போட்டுகிடுங்க

said...

கூல் ஆக்கனும்ன்னு நினைச்சதால.. கூழ் கூல் ஆகிவிட்டது போலயே...

said...

அப்படியா சொல்லவே இல்லை...

டர்கா...எனக்கு டிரிட் எப்போ..?

said...

/
கோவி.கண்ணன் said...

//இது போதாதுன்னு இன்னும் 2 புல்லுருவிகள் இதை வைத்துப் பதிவிட்டு மேலும் கோபத்தை அதிகரிக்க வைத்துவிட்டனர்..//

யோவ்...இதான் சாக்குன்னு ஆத்தா பேரச்சொல்லி அந்த 2 பேரையும் தாக்குறீரா ? பழி ஒருபக்கம் பாவம் ஒரு பக்கம் !
/
பொழச்சு போங்க !

said...

/
கோவி.கண்ணன் said...

'ஆத்தாவுக்கு ஆப்ரேசன் நல்ல படியா நடந்து முடிந்தால் ஆத்தாவை அழைத்துச் சென்று சைனாடவுன் மாரியம்மன் கோவில் பூக்குழியில் இறக்கிவிடுகிறேன்' என்று வேண்டி இருக்கிறேன்.
:)
/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

/
கோவி.கண்ணன் said...

என்கிட்ட '3 பேரிடம் சொன்ன விசயத்தை 3000 பேர் படிக்க வச்சு எனக்கு எல்லோரோட ஆசிர்வாதத்தோடு பல் ஆப்ரேசன் நல்ல படியா நடக்க வேண்ட வச்சிட்டிங்க...உங்களுக்கு டாங்க்ஸ்' அப்படின்னு சொல்லிச்சே.
/

:)))))))))))))

said...

/
//ஜோகூர் ஆத்தாவுக்கு கூழ் காய்ச்சி ஊற்றக் கூட தயார்.(ரவா தோசை தான் வேணுமின்னா அதுக்கும் தயார்...)
//



வெறும் ரவாதோசை இல்லை, மிளகாய் பொடியோட வேண்டுமாம். இப்படி ஒரு ஆத்தாவை நான் பார்த்ததே இல்லை.

said...

//யாராவது சொல்லுங்களேன்... எப்படித் தப்பிக்கிறது ஆத்தாவின் உக்கிரப் பார்வையில் இருந்து? //

வேற வழியே இல்லை, ஆப்புரேசன் முடியும் வரை அலைபேசியைத் தொடாதே, ஜிமெயில் பக்கமும் வந்துடாதே.

said...

//இதுல அவர் வருடக்கணக்கா தடை செய்து வச்சிருந்த அனானி/அதர் ஆப்சனைக் கூட கும்மிக்காக திறந்துவிடுறார்//

ஹா ஹா ஹா ஹா

Anonymous said...

/
மலேசிய மாரியாத்தாவுக்கு பல்லைப் பிடுங்க அறுவை சிகிச்ச்சை நடக்கப்போகுதாம்.
/

நான் வேணா நிவாரண நிதில இருந்து எதுனா பணம் அனுப்பட்டா!?!?

said...

/
அவங்க விரைவில் நலம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அந்தப் பதிவில் அப்படியே அவரது அருமை பெருமைகளை எல்லாம் கொஞ்சம் பாராட்டி எழுதியிருந்தேன்.
/

ஒரு ஏழு எட்டு பிட்டு சேத்து போட்டீங்க அவ்வளவுதானே!?!?

:))))

Anonymous said...

/
அவ்வளவுதான். இதுக்குப் போய் கோபப்பட்டு அலைபேசியில் காய்ச்சி எடுத்துட்டாங்க..
/

காய்ச்சறது அவங்க குலத்தொழிலோ!?!?!?

:)))))

said...

/

எவ்வளவு கோவமுன்னா, ஊர்ல உலகத்துல இருக்குற எல்லாருக்கும் அனுப்பின அந்தப் பல்லு புகைப்படத்தைக் கூட எனக்கு அனுப்பல..... :(
/

அப்ப கோவம் ரொம்ப ஜாஸ்திதான்
:((((((((((

said...

ஆத்தா தலையில நாலு தேங்கா ஒடச்சி, ஆத்தா வாயில சூடம் ஏத்தி கும்புடுறேன்னு வேண்டிக்கிட்டீங்கன்னா உக்கிரம் தணியும் !!

Anonymous said...

ஆத்தாவின் அழுகுரலை இங்கே கேளுங்க

said...

:(