Wednesday, December 26, 2007

கலக்கும் லாலு!!

பல மாநிலங்களுக்கு குடிநீர் சப்ளை செய்து, ரயில்வே துறை சம்பாதிக்க முடியுமா? ஏன் முடியாது என்று புதுமையான திட்டத்தை தீட்டியிருக்கிறார், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்!

ரயில்வே துறை அமைச்சராக லாலு பொறுப்பேற்றதில் இருந்து, ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது.

"ரயில்வே துறை லாபம் குவிக்க இன்னும் பல வழிகள் உள்ளது. அதைப்படிப்படியாக நிறைவேற்றுவேன்' என்று, அமைச்சர் கூறியிருந்தார். அதன் முதல் கட்டமாக, குடிநீர் "பைப் லைன்' திட்டம் பற்றி லாலு தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.

நாடு முழுவதும் போடப்பட்டுள்ள 63 ஆயிரம் கி.மீ., நீள தண்டவாளங்களில், இரு பக்கமும், குடிநீர் பைப்களை புதைத்து, பல்வேறு மாநிலங்களில் உள்ள நதி நீரை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு சப்ளை செய்வது தான் லாலுவின் திட்டம்.

இந்த திட்டம் நிறைவேறினால், சில மாநிலங்களில் பல ஆண்டாக மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயம் நீங்கும்; வறட்சியில் உள்ள சில மாநிலங்களுக்கு தண்ணீர் சப்ளை கிடைக்கும்.

முழு செய்திக்கு: தண்டவாளம் அருகே "பைப் லைன்' லாபத்தை பெருக்க லாலு புது திட்டம்

உண்மையிலேயா லாலு கலக்குகிறார்!!!!

நன்றி: தினமலர்

பின் குறிப்பு:
இது சென்ற வார செய்திதான்... இப்போது தான் பார்த்தேன். :)

2 comments:

said...

இது லாலு மண்டையிலே உதிக்காவிட்டாலும் பரவாயில்லை..மக்களுக்கு நல்லது நடந்தா சரி..

said...

//
TBCD said...

இது லாலு மண்டையிலே உதிக்காவிட்டாலும் பரவாயில்லை..மக்களுக்கு நல்லது நடந்தா சரி..

//
கருத்துக்கு நன்றி!