Monday, December 17, 2007

இளம் ஜோடி(adults only) - ந.ஒ.க போட்டிக்கு அல்ல!!

அவருக்கு சில நாட்களாகவே அந்தப் பிரச்சனை இருக்கிறது. ஆனால் யாருக்கும் தெரியாது. இது யாருக்காவது தெரிந்தால் சமூகத்தில் அவருக்கு இருக்கும் மதிப்பு என்னாகுமோ என்று மிகவும் பயப்படுகிறார்.

நேற்று கூட இப்படித்தான், திடீரென கை, கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அந்தப் பிரச்சனை வந்தால் உடனே "அந்த" வேலையை முடிக்க வேண்டும் இல்லையென்றால் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது. வேறு எதுவுமே யோசிக்க முடிவதில்லை...

அப்பாடா இன்று வெள்ளிக்கிழமை ஆயிற்று.. சனி, ஞாயிறு இரு நாட்களும் குறைந்தது இரண்டு முறையாவது 'அந்த' வேலையைச் செய்து விடலாம் என்று மிகவும் சந்தோசமாக இருந்தது அவருக்கு. ஆனால் வீட்டுக்குப் போனதும் ஒரு இடி காத்துக்கொண்டு இருந்தது..

"என்னங்க பாப்பா நாளைக்கு sentosa போகனும் ன்னு சொல்லுறாங்க. கூட்டீட்டுப் போகலாம்" என்று அவர் வீட்டுக்குச் சென்றதும் மனைவி கேட்டார். அவரால் மறுக்க முடியவில்லை. மறுத்தால் மனைவிக்குத் தெரிந்துவிடுமே.. அப்புறம் அவ்வளவுதான்.

ஆனால் அவருக்கு பயமாக இருந்தது ஒரு நாள் முழுவதும் தாங்க முடியுமா என்று.. ஆனால் முயன்று பார்க்கலாம் என்று நினைத்தார்.

மறுநாள் காலையில் M.R.T யில் செல்வதாக முடிவெடுத்து M.R.T யில் சென்றனர். ஒரு மணி நேரம் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. மவுண்ட் பேபர் சென்று அங்கிருந்து கேபிள் காரில் செல்ல முடிவெடுத்தனர்.

மவுண்ட் பேவரில் ஒரு நாயைப் பார்த்ததும் அவருக்கு "அந்த" நினைப்பு வந்துவிட்டது.. கை கால் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது.. தனியாகச் சென்று ஒரு தம் இழுத்து கொஞ்சம் மனதை மாற்றி விட்டு வந்தார்...

அடுத்து sentosa சென்ற பின் மாலை வரை சுற்றிப் பார்த்தனர். அது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அவருக்கே சந்தோசமாக இருந்தது அவரால் அதைச் செய்யாமல் ஒரு நாள் முழுவதும் இருக்க முடியும் என....

அப்போது தான் பார்த்தார் அந்த கைகோர்த்துச் சென்ற அந்த இளம் ஜோடியை.. மீண்டும் அவருக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. மனைவியிடம் உடனே கிளம்பச் சொல்லி வீட்டுக்குக் கிளம்பிவிட்டனர்...

"இனி வீட்டில் போய் சமைக்க முடியாது, இங்கேயே சாபபிட்டுவிடலாம்" என்று மனைவி சொன்னதை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டார்.. அவரால் சாப்பிடக்கூட முடியவில்லை.. ஒருவழியாக சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்..

ஏற்கனவே தூங்க ஆரம்பித்திருந்த அவரது மகளை உள்ளே எடுத்துச் சென்று மனைவியும் மகளுடன் சேர்ந்து தூங்க ஆரம்பித்தார்..

அது வரை காத்திருந்த அவர் லேப்டாப்பைத் திறந்து ப்ளாக்கருக்குள் நுழைந்தார். "அந்த இளம் ஜோடி கை கோர்த்து...." என்று "நஒக - இளம் ஜோடி(adults only)" என்ற தலைப்பில் கதை எழுத ஆரம்பித்தார்.

ஆம்... இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு "நச்சென்று ஒரு சிறுகதை"யாவது எழுதவில்லை என்றால் கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது.... யாருக்காவது இதற்கு ஏதாவது வைத்தியம் தெரியுமா???

பின்குறிப்பு:
இந்தக் கதை முழுவதும் கற்பனையே... இதில் வரும் "அவர்" கதாப்பாத்திரம் எந்தப் பதிவரையும் குறிப்பதல்ல....


இந்தக் கதை யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.... சிரிப்பதற்காக மட்டுமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்தக் கதையை இங்கும் பதிந்துள்ளேன்....

11 comments:

said...

பின்னூட்ட கயமைத்தனம் போல பின்னூட்ட பொறுக்கித்தனம் எதுவும் இருக்கா ?

புரியல்ல...தய

வேண்டாம் காப்புரிமை கேட்பார்.

said...

எதுக்கு காலையில வந்ததும் இப்படியா?

Anonymous said...

ஒகோ "நஒக - இளம் ஜோடி(adults only)" -இந்த கதையை எழுதியது அவர் தானா?

said...

//
புரட்சி தமிழன் said...

எதுக்கு காலையில வந்ததும் இப்படியா?

//
எப்படி?
:)

said...

//
ஒரு adult said...

ஒகோ "நஒக - இளம் ஜோடி(adults only)" -இந்த கதையை எழுதியது அவர் தானா?
//
யாருங்க அது??

said...

//
கோவி.கண்ணன் said...

பின்னூட்ட கயமைத்தனம் போல பின்னூட்ட பொறுக்கித்தனம் எதுவும் இருக்கா ?

புரியல்ல...தய

வேண்டாம் காப்புரிமை கேட்பார்.

//
ஏன்? ஏன்? ஏன் இந்தக் கொலைவெறி??
:P

said...

கோவி.கண்ணன் உங்களை ஜக்கு போட்டு தாக்கு தாக்குனு தாக்கீட்டாரே!!!!!!!!

ஜகதீசன் இன்னும் இன்னும் நிறைய எதிர்பாக்கிறேன் !!

said...

//
மங்களூர் சிவா said...
கோவி.கண்ணன் உங்களை ஜக்கு போட்டு தாக்கு தாக்குனு தாக்கீட்டாரே!!!!!!!!

ஜகதீசன் இன்னும் இன்னும் நிறைய எதிர்பாக்கிறேன் !!

//
ஹல்லோஓஓஓஓ!!!!!!
பின் குறிப்பு பாத்தீங்களா இல்லையா????

இந்தக் கதை கற்பனை!!!!!!!!!!!!!!

said...

//
ஜெகதீசன் said...
//
மங்களூர் சிவா said...
கோவி.கண்ணன் உங்களை ஜக்கு போட்டு தாக்கு தாக்குனு தாக்கீட்டாரே!!!!!!!!

ஜகதீசன் இன்னும் இன்னும் நிறைய எதிர்பாக்கிறேன் !!

//
ஹல்லோஓஓஓஓ!!!!!!
பின் குறிப்பு பாத்தீங்களா இல்லையா????

இந்தக் கதை கற்பனை!!!!!!!!!!!!!!

//
இந்த மாதிரி எத்தினி பின்னூட்டம் பாத்திருப்போம்!!

said...

எலேய்..நீ என்னாத்துக்கு பின்னுட்டம் பாத்துட்டு இருப்பே எங்களுக்குத் தெரியாதா..எவனாச்சும் போட்டா, பின்னடியே ஓடிப் போயி ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு போட... :)))))))))

//*மங்களூர் சிவா said...

இந்த மாதிரி எத்தினி பின்னூட்டம் பாத்திருப்போம்!!*//

said...

//
TBCD said...
எலேய்..நீ என்னாத்துக்கு பின்னுட்டம் பாத்துட்டு இருப்பே எங்களுக்குத் தெரியாதா..எவனாச்சும் போட்டா, பின்னடியே ஓடிப் போயி ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு போட... :)))))))))

//
ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

(TBCD உங்க ஆசைய நிறைவேத்திட்டேன்)