பதிவர் சந்திப்பு சில துளிகள்..
கோவி.கண்ணன்.. பதிவர் சந்திப்பின் முக்கிய இலக்கணங்களில் ஒன்று போண்டாவுடன் சந்திப்பை முடிப்பது என்பது அனைவரும் அறிந்ததே. ஏதோ சில நொண்டிச்சாக்குகளைச்(கடையில் போண்டா இல்லை)சொல்லி போண்டா வாங்கித் தராத கோவியாருக்கு அனைவரும் உங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. :P
கிரி.. ரெம்ப நல்லவரா இருக்கார்.. 4:30க்கு வாங்கன்னா, சரியா 4:30க்கே வந்து நிற்கிறார். இவர் நேரம் தவறாமை பற்றி ரெம்பக் கற்றுக்கொள்ளவேண்டும்.[யாரோ இங்கிருந்து பேருந்தில் 20 நிமிடத்தில் பெடாக் சென்று விடலாம் என்று சொன்னதை நம்பி 4:00 மணிக்குக் கிளம்பினேன்.. பேருந்து அங்கு சென்று சேர 40 நிமிடம் ஆகிவிட்டது...:(]. ஈழத்தமிழர் விவகாரம் குறித்து பாரி.அரசுவிடம் சில விடயங்கள் கேட்டுத் தெளிவு பெற்றார் இவர்.
பாரி.அரசு.. கோவி.கண்ணன் நேற்று காலை அழைத்து பதிவர் சந்திப்பைப் பற்றி, பாரி.அரசுவைக் கலாய்த்து பதிவு எழுதச் சொல்லிக் கேட்டுக்கொண்டார். மன்னிக்கவும் கோவியாரே, அரசு நல்லவர்.. வல்லவர்... நாலுந்தெரிஞ்சவர்...கள அனுபவம் நிறைய உள்ளவர்.. அதனால் அவரை என்னால் கலாய்க்க முடியாது. ஆனாலும் இவர்தான் நேற்றய சந்திப்பின் கதாநாயகன்.. அவரது கள அனுபவங்களை அனைவருக்கும் விளக்கினார்.
செந்தில்(சிங்கை நாதன்).. இவரும் ரெம்ப நல்லவரு.. 5 மணிக்கே கடற்கரைக்கு வந்து காத்திருந்தார்..இவர் கொண்டுவந்திருந்த அல்வாவும், கேழ்வரகு முறுக்கும் சுவையாக இருந்தது. இவர் பதிவர் சந்திப்புகள் பல கடந்த மூத்த பதிவராம்.. ஆனால் இவரது பதிவு எது என்பதைத் தான் தங்கமலை ரகசியம் போல வெளியே சொல்லாமல் இருக்கிறார்.. இவரது பதிவைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு பின்னூட்ட நாயகன் இடுகைக்கு 1000 பின்னூட்டங்கள் வெகுமதியாகத் தருவதாக அறிவித்துள்ளார்...
வடுவூர் குமார்.. சந்திப்புக்கு வந்த எல்லாப் பதிவர்களையும் போல இவரும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். விரைவில் துபாய் செல்கிறார் இவர். அனைவருக்கும் இரவு உணவு இவர்தான் அளித்தார். தமிழ்99 தட்டச்சு முறையின் தேவை குறித்து பாரி.அரசுவிடம் சந்தேகங்கள் கேட்டு அவரிடம் விளக்கங்கள் பெற்றுக்கொண்டார்..
முகவை மைந்தன்.. முகவை குமாரின் பேக்கரிக்குப் பக்கத்து வீட்டுக்காரர்.:).. தமிழ்மணத்துடன் போராடி இப்போது தான் தன் பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார்.சுதந்திரம், கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் பற்றி பாரி.அரசுவுடன் நல்ல விவாதம் புரிந்தார்.. முகவை குமாருக்குப் போட்டியாக விரைவில் ஒரு திரைக்காவியம் இவரே தயாரித்து, இயக்கி, பாடல் எழுதி, பாடி, கதாநாயகனாகவும் நடிக்கப் போவதாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல்... :P
சிவராம் முருகன்.. வலைப் பதிவு தொடங்கி, தமிழ்மணத்துடன் இணைத்ததுடன் சரியாம். அதன்பிறகு எதுவும் எழுதவில்லையாம்.. எழுதவே பயமாக இருக்கிறதாம் இவருக்கு.. கிரியிடம் சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார் பாதுகாப்பாகப் பதிவு எழுதுவது எப்படி என்பது குறித்து...விரைவில் எழுதத் தொடங்குவதாக உறுதியளித்துள்ளார். ஒயின் பாட்டிலைத் திறப்பது எப்படி என்பது குறித்து இவருக்கு விளக்க வகுப்பு எடுக்கப் பட்டது. இது குறித்து அவர் விரைவில் பதிவார்..
நான்... ஹிஹிஹி... இரும்படிக்குற இடத்துல "ஈ"க்கு என்ன வேலை.. அனுபவசாலிகள் தங்கள் அனுபவங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள்.. நான் முறுக்கு மற்றும் அல்வாவை சுவைத்துக் கொண்டே அவர்களது விவாதங்களை கவனித்துக் கொண்டிருந்தேன்..:P
மொத்தத்தில் சந்திப்பு பயனுள்ளதாகவும், இனிமையானதாகவும், புதிய அறிமுகங்களைப் பெற்றுத் தருவதாகவும் இருந்தது.. நான்கு மணி நேரம், ஏதோ அரைமணி நேரம் போல விரைவில் கடந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்துடனே கலைந்தது போல் இருந்தது அனைவரும்.. அடுத்த முறை சந்திப்பு ஏற்பாடு செய்யும் போது மாலை ஒரு 4 மணிக்கே தொடங்குவது போல் ஏற்பாடு செய்தால் ஒரு 2 மணி நேரம் அதிகம் செலவழிக்கலாம்...
கோவி.கண்ணன்.. பதிவர் சந்திப்பின் முக்கிய இலக்கணங்களில் ஒன்று போண்டாவுடன் சந்திப்பை முடிப்பது என்பது அனைவரும் அறிந்ததே. ஏதோ சில நொண்டிச்சாக்குகளைச்(கடையில் போண்டா இல்லை)சொல்லி போண்டா வாங்கித் தராத கோவியாருக்கு அனைவரும் உங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. :P
கிரி.. ரெம்ப நல்லவரா இருக்கார்.. 4:30க்கு வாங்கன்னா, சரியா 4:30க்கே வந்து நிற்கிறார். இவர் நேரம் தவறாமை பற்றி ரெம்பக் கற்றுக்கொள்ளவேண்டும்.[யாரோ இங்கிருந்து பேருந்தில் 20 நிமிடத்தில் பெடாக் சென்று விடலாம் என்று சொன்னதை நம்பி 4:00 மணிக்குக் கிளம்பினேன்.. பேருந்து அங்கு சென்று சேர 40 நிமிடம் ஆகிவிட்டது...:(]. ஈழத்தமிழர் விவகாரம் குறித்து பாரி.அரசுவிடம் சில விடயங்கள் கேட்டுத் தெளிவு பெற்றார் இவர்.
பாரி.அரசு.. கோவி.கண்ணன் நேற்று காலை அழைத்து பதிவர் சந்திப்பைப் பற்றி, பாரி.அரசுவைக் கலாய்த்து பதிவு எழுதச் சொல்லிக் கேட்டுக்கொண்டார். மன்னிக்கவும் கோவியாரே, அரசு நல்லவர்.. வல்லவர்... நாலுந்தெரிஞ்சவர்...கள அனுபவம் நிறைய உள்ளவர்.. அதனால் அவரை என்னால் கலாய்க்க முடியாது. ஆனாலும் இவர்தான் நேற்றய சந்திப்பின் கதாநாயகன்.. அவரது கள அனுபவங்களை அனைவருக்கும் விளக்கினார்.
செந்தில்(சிங்கை நாதன்).. இவரும் ரெம்ப நல்லவரு.. 5 மணிக்கே கடற்கரைக்கு வந்து காத்திருந்தார்..இவர் கொண்டுவந்திருந்த அல்வாவும், கேழ்வரகு முறுக்கும் சுவையாக இருந்தது. இவர் பதிவர் சந்திப்புகள் பல கடந்த மூத்த பதிவராம்.. ஆனால் இவரது பதிவு எது என்பதைத் தான் தங்கமலை ரகசியம் போல வெளியே சொல்லாமல் இருக்கிறார்.. இவரது பதிவைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு பின்னூட்ட நாயகன் இடுகைக்கு 1000 பின்னூட்டங்கள் வெகுமதியாகத் தருவதாக அறிவித்துள்ளார்...
வடுவூர் குமார்.. சந்திப்புக்கு வந்த எல்லாப் பதிவர்களையும் போல இவரும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். விரைவில் துபாய் செல்கிறார் இவர். அனைவருக்கும் இரவு உணவு இவர்தான் அளித்தார். தமிழ்99 தட்டச்சு முறையின் தேவை குறித்து பாரி.அரசுவிடம் சந்தேகங்கள் கேட்டு அவரிடம் விளக்கங்கள் பெற்றுக்கொண்டார்..
முகவை மைந்தன்.. முகவை குமாரின் பேக்கரிக்குப் பக்கத்து வீட்டுக்காரர்.:).. தமிழ்மணத்துடன் போராடி இப்போது தான் தன் பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார்.சுதந்திரம், கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் பற்றி பாரி.அரசுவுடன் நல்ல விவாதம் புரிந்தார்.. முகவை குமாருக்குப் போட்டியாக விரைவில் ஒரு திரைக்காவியம் இவரே தயாரித்து, இயக்கி, பாடல் எழுதி, பாடி, கதாநாயகனாகவும் நடிக்கப் போவதாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல்... :P
சிவராம் முருகன்.. வலைப் பதிவு தொடங்கி, தமிழ்மணத்துடன் இணைத்ததுடன் சரியாம். அதன்பிறகு எதுவும் எழுதவில்லையாம்.. எழுதவே பயமாக இருக்கிறதாம் இவருக்கு.. கிரியிடம் சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார் பாதுகாப்பாகப் பதிவு எழுதுவது எப்படி என்பது குறித்து...விரைவில் எழுதத் தொடங்குவதாக உறுதியளித்துள்ளார். ஒயின் பாட்டிலைத் திறப்பது எப்படி என்பது குறித்து இவருக்கு விளக்க வகுப்பு எடுக்கப் பட்டது. இது குறித்து அவர் விரைவில் பதிவார்..
நான்... ஹிஹிஹி... இரும்படிக்குற இடத்துல "ஈ"க்கு என்ன வேலை.. அனுபவசாலிகள் தங்கள் அனுபவங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள்.. நான் முறுக்கு மற்றும் அல்வாவை சுவைத்துக் கொண்டே அவர்களது விவாதங்களை கவனித்துக் கொண்டிருந்தேன்..:P
மொத்தத்தில் சந்திப்பு பயனுள்ளதாகவும், இனிமையானதாகவும், புதிய அறிமுகங்களைப் பெற்றுத் தருவதாகவும் இருந்தது.. நான்கு மணி நேரம், ஏதோ அரைமணி நேரம் போல விரைவில் கடந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்துடனே கலைந்தது போல் இருந்தது அனைவரும்.. அடுத்த முறை சந்திப்பு ஏற்பாடு செய்யும் போது மாலை ஒரு 4 மணிக்கே தொடங்குவது போல் ஏற்பாடு செய்தால் ஒரு 2 மணி நேரம் அதிகம் செலவழிக்கலாம்...
மதி ஊருக்குச் சென்றபிறகு, சிங்கையில் இருந்த ஒவ்வொரு வார இறுதியும் ஏன் தான் வருகிறதோ என நினைக்கும் அளவுக்கு சிரமமாகவே இருந்திருக்கிறது எனக்கு, தனிமையின் காரணமாக. ஆனால் மற்ற வார இறுதிகள் போல் இல்லாமல்,
இந்தவார இறுதியை இனியதாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!!!
சந்திப்பு குறித்த மற்ற பதிவுகள்:
சிங்கை சிங்கங்களின் சந்திப்பு !
கலகலப்பாக சென்ற சிங்கை வலைப்பதிவர் சந்திப்பு - கிரி


