Wednesday, December 3, 2008

விஜயகாந்த்திடம் ஆட்சியைக் கொடுப்போம்!

அசாதாரண தருணங்களில் அசாதாரண நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அதுவும் அசாதாரண தலைமையின் கீழ் அது நடந்தால்தான் அவை சாத்தியமாகும்.

மீண்டும் ஒருமுறை இந்திய அரசியல் தலைமை நமக்கு தோல்வியைக் கொடுத்துள்ளது. இரு முனைகளில் நாம் இப்போது நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோரம். ஒன்று தீவிரவாதம், இன்னொன்று பொருளாதாரம்.

பெருகி வரும் தீவிரவாதத் தாக்குதல்களால் இந்தியாவின் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் சிதறிப் போகும் வாய்ப்புள்ளது. இந்தியாவின் வளர்ச்சி தடைபட்டால், லட்சக்கணக்கான இந்தியர்களின் கனவுகள் தவிடுபொடியாகும் அபாயம் உள்ளது.

இந்த நிலையை நாம் தாண்டி வர வேண்டும் என்றால், மிகப் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது.

மேல் மட்டத்திலிருந்து இந்த மாற்றம் நிகழ வேண்டும். புதிய அரசியல் சக்தியை உருவாக்கும் வல்லமை நம்மிடம் இல்லை. அதற்கான வசதியும் இல்லை. அதற்கு பல ஆண்டுகளாகும்.

நமக்கு இப்போது என்ன தேவையென்றால், என்.எஸ்.ஜி. வீரர்களைப் போல அதிரடியான ஒரு நடவடிக்கை. மும்பை தாக்குதலில் போலீஸார் லத்தியுடன் தடுமாறிக் கொண்டிருந்தபோது மின்னலென வந்து, தீவிரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டு அனைத்தையும் காலி செய்து விட்டு ஹோட்டல்களை திருப்பிக் கொடுத்து விட்டுப் போனார்களே, அதுபோல, ஒரு விரைவான அதிரடியான மாற்றம் தேவை.

அதைச் செய்ய சரியான நபர் விஜயகாந்த் மட்டுமே. விஜயகாந்த் இங்கேயே இருக்கிறார், உடனடியாகவும் கிடைப்பார். இந்த மாற்றத்திற்காக நாம் பல ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை.

இந்தியாவின் ஜனநாயகத்தில் 3 முக்கிய குழப்பங்கள் அல்லது பிரச்சினைகள் உள்ளன. ஒன்று அரசியல்வாதிகள். அரசியல் துறையை முற்றிலும் தூய்மைப்படுத்த வேண்டியுள்ளது.

2வது அதிகாரவர்க்கம். பிரிட்டிஷ் காலத்து ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்களுடன் உலவிக் கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்துப் போக்கை மூட்டை கட்டி வைக்க வேண்டும் அல்லது கலைத்துப் போட வேண்டும்.

3வது கல்விக்கு அதிக முதலீடு. இது நடந்தால் நிச்சயம் நல்லவர்களை அரசியலுக்குத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் கொண்ட பலரை நம்மால் உருவாக்க முடியும்.

இந்த இடத்தில்தான் விஜயகாந்த்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரிடம் ஐந்து ஆண்டுகள் நாட்டை ஒப்படைக்கலாம். அந்தக் காலத்தை அவரும், அவரது டீமும் திறமையாக பயன்படுத்தி, சிறந்த கொள்கைகள், சிறந்த நிறுவனங்கள், சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு, சிறந்த ஆட்சி ஆகியவற்றைத் தருவார்கள். நிச்சயம் இது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும்.

விஜயகாந்த் தலைமையிலான அரசு வந்தால் ..

- தேசிய பாதுகாப்பு சிறப்பாக இருக்கும்.

- அடிப்படைக் கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மாறும். நல்ல சாலைகள், அதி வேக ரயில்கள், மின் உற்பத்தி ஆலைகள் எல்லாமே சிறப்பாக மாறும்.

- தரமான கல்விக்கு வழி பிறக்கும்.

- கல்வி நிறுவனங்கள் நேர்மையாகவும், சிறந்த தரத்துடனும் விளங்கும்.

- 6000 புதிய நகரங்கள் உருவாகும்.

வித்தியாசமான சிந்தனைகளும், விவேகமான தீர்மானங்களும்தான் இப்போதைய முக்கிய தேவை.

பாஜகவும், காங்கிரஸும் தங்களது மோதல்களை மறந்து, விஜயகாந்த்தயும், 300 தரமான எம்.பிக்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முன்வர வேண்டும்.

ராகுல் காந்தியும், நரேந்திர மோடியும், மாயாவதியும் 2014ம் ஆண்டு வரை காத்திருக்கட்டும், பரவாயில்லை. அதற்குள் விஜயகாந்த் தலைமையில் நாடு விஸ்வரூப வளர்ச்சியைக் கண்டிருக்கும். அவர்களுக்கு அது வசதியான இந்தியாவாகவும் இருக்கும். எனவே அவர்கள் காத்திருக்கலாம்.

இது நிச்சயம் சாத்தியமானதல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மும்பையில் நடந்து என்ன. யாரும் எதிர்பாராத புதிய வகை தீவிரவாதத் தாக்குதல். எனவே விஜயகாந்த் பிரதமர் என்பதும் சாத்தியமாகக் கூடியதுதான்.

பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய, தீர்வுகளுடன் இருக்கக் கூடிய ஒரு தலைமையிடம் நமது நாட்டை சில காலம் ஒப்படைப்போம். நமக்காக பாடுபடக் கூடிய ஒருவரிடம் ஒப்படைப்போம்.

இந்தியாவை கடந்த 60 ஆண்டுகளாக அரசியல்வாதிகளிடம் கொடுத்து விட்டோம். அடுத்த 5 ஆண்டுக்கு விஜயகாந்திடம் கொடுக்கலாமே.

முன்பு வெள்ளையர்களின் ஆட்சியிலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என்பதற்காக ஒரு தனி மனிதரின் பின்னால் நமது நாட்டு மக்கள் அணி திரண்டார்கள். ஒற்றுமையுடன், ஒரே குரலில் உரத்து முழக்கமிட்டார்கள். அதேபோன்ற தருணம் இப்போதும் வந்துள்ளது.

சாதனைகளை மட்டுமே சொந்தமாக வைத்திருக்கும் விஜயகாந்த் நம்மிடம் உள்ளார் என்பதே பலமான விஷயம். எனவே அவரிடம் ஆட்சியைக் கொடுப்போம். புதிய இந்தியாவை சேர்ந்து உருவாக்குவோம்!!

குறிப்புகள்:
இந்தப் பதிவுக்கும், ராஜேஷ் ஜெயின் எழுதி தட்ஸ்தமிழ் மொழிபெயர்த்துள்ள அதிமுக்கியமான இந்தக் கட்டுரைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை!
http://thatstamil.oneindia.in/news/2008/12/02/india-needs-ratan-tata-as-prime-minister-for-5-yea.html


2. அப்படி என்ன சாதித்தார் கேப்டன் என்று கேட்போர், தலைவரின் படங்களை இதுவரை பார்க்காதவர்களாகவே இருக்கமுடியும்..
இருப்பினும் அவர்களுக்காக , கேப்டனின் சாதனைகள் லக்கிலுக்கின் பதிவிலிருந்து:

>>>>>இடி விழுந்தவன் கூட பிழைத்துக் கொண்டதுண்டு. கேப்டனின் அடிவாங்கியவன் பிழைத்ததில்லை.

>>>>>தாயகம் படத்தில் கூட பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்க கடலூர் மாவட்டத்தில் மீனவராக வாழ்ந்துகொண்டிருந்த கேப்டனை தான் கூப்பிட்டார்கள்.நாட்டைக் காக்க மஞ்சப்பையோடு கிளம்பிய கேப்டன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஏகே47 போன்ற நவீன ஆயுதங்களோடு போரிட்டபோதும் தன்னுடைய இரு கால்களாலேயே எட்டி உதைத்து அவர்களை துரத்தியடித்தார்.

>>>>>நரசிம்மா படத்திலும் கூட நாடெங்கும் நாசவேலை நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளை தன்னுடைய அக்னிப் பார்வையாலேயே அழித்தார். பல படங்களிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்கிய அனுபவம் கேப்டனுக்கு உண்டு.

.......
...
முழுப் பதிவு இங்கே: http://www.luckylookonline.com/2008/12/blog-post.html

12 comments:

said...

எங்க இளைய தளபதி விஜயை யாருமே பெருசாக எடுத்துக் கொள்ளாதது கவலையளிக்கிறது.

:(

said...

கப்டன் வாழ்க..கப்டனின் துணைக் கப்டன் ஜெகதீசன் வாழ்க..

said...

அருமையான எதிர்வினை

said...

//முரளிகண்ணன் said...
அருமையான எதிர்வினை
//

இது எதிர்வினை அல்ல இந்தியாவிற்கான 'செய்வினை'

said...

ஆமாமுங்கோவ் , விஜியகாந்த் பிரதமர் ஆனா , நம்ம பிரேம லதாக்கா வ என்ன பண்ணறதாம்..?

said...

:) :) :) :)

said...

நகைச்சுவைக்கு ஒரு அளவேயில்லாம போச்சு. யார் யாரோ ஆளுறாங்க, சரி இவரும் கொஞ்சம் அனுபவிக்கட்டுமே.

said...

ம்ம்ம்ம்....நடக்கட்டும்...நடக்கட்டும்....

said...

கப்டன் அவர்களிடம் கொடுத்தால் இந்தியாவில் இருந்து தீவிர வாதிகள் மட்டும் அல்ல இந்திய மக்களே ஓடும் அபாயம் இருக்கிறது.
கப்டன்=கப் டன், (கப் என்றால் நாற்றம்,ஸ்மெல் டன் என்பது ஆயிரம் கிலோ)
இப்ப சொல்லுங்கள் டன் கணக்கில் நாட்டில் நாற்றம் வந்தால் தீவிரவாதிகள் மட்டும் அல்ல மக்களும் இந்தியாவிற்குள் இருக்க மாட்டார்கள். அப்போது இந்தியா அமைதிப் பூங்காவாகத் திகழும். தொழில் வளம் பெருகும், பொருளாதாரம் மேம்படும். வல்லரசாகும். மாநகரக் காவல் நன்றாக இருக்கும்.
(நன்றி:கவுண்டமணி-செந்தில்)

said...

//"விஜயகாந்த்திடம் ஆட்சியைக் கொடுப்போம்!"//

"ஆட்சி" என்ற பெயரில் படம் எடுத்தால் அதை விஜயகாந்திடம் கொடுங்க

said...

:-)

அதானே, இத எங்கயோ படிச்ச மாதிரி இருந்திச்சே!

said...

ha ha ha!