Monday, March 17, 2008

கடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது

"கடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது" என்று திரு ரத்னேஷ் அவர்கள் கோவி.கண்ணன் அவர்களுக்கு மின் அஞ்சல் செய்திருந்தார். அவரது சொல், எனது பதிவில் 2089ஆம் ஆண்டு வரை மட்டுமாவது பலிக்கிறதா என்று பார்க்கிறேன். மனக்கட்டுப்பாடு இருக்கவேண்டும். முயற்சி செய்கிறேன்.

ஆறு மாதங்கள் பதிவு எழுதியதில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி. குறிப்பாக பதிவர் அ, ஆ, இ, ஈ, உ, ஊ கியோரை மிகவும் நேசிக்கிறேன். கூகுள் சாட் லிஸ்டில் இருந்து தொடர்ந்து என்னுடன் உரையாடும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி.

தொடர்ந்து எழுதியது மிகுந்த அயர்ச்சியைக் கொடுத்துவிட்டது. மீண்டும் 2090ல் எழுதவருவேன். அதற்குள் நல்ல மாற்றங்கள் எனக்குள் ஏற்பட்டு இருக்கும். மற்றபடி பதிவெழுதும் எனது அனைத்து நண்பர்களின் இடுகைகளையும் வழக்கம்போல இரவு 12மணிவரை விழித்திருந்து படித்து கட்டாயம் என் கருத்துக்களைப் பின்னூட்டமாக இடுவேன்.(வேற என்ன ":)" என் கருத்து...)

நண்பர் டிபிசிடி அவர்கள், இதுவரை நான் எழுதிக் கிழித்த பதிவுகள் ஒவ்வொன்றையும் படித்து நான் மீண்டும் வரும்வரை எனக்குத் தொடர்ந்து பின்னூட்டமிட்டு, என் பதிவைத் தமிழ்மணத்தில் தொடர்ந்து வர வைப்பார் என நம்புகிறேன். அப்படியே அவர் பதிவில் ஏதாவது ஒரு மூலையில் இடம் இருந்தால் என் படத்தைக் கட்டம் கட்டிப் போட்டு, மீண்டும் என்னை எழுதவர அழைப்பார் என நம்புகிறேன்.....

நல்லது பதிவு நண்பர்களே. அழுகாச்சி பின்னூட்டங்கள் இங்கு தேவைதான்!!!
(அதிகம் அழுகை வரும்படியாகப் பின்னூட்டம் இடுபவர்களுக்குத் தக்க பரிசு அளிக்கப் படும்...)


அன்புடன்..
ஜெகதீசன்.

பி.கு: இந்தப் பதிவு யாரையாவது தாக்கி(கலாய்த்து) எழுதப்பட்ட பதிவு என்று நினைத்து, யாராவது எனக்கு ப்ரெளனீஸ் புள்ளிகள் தந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்!!!

17 comments:

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

ஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

:)

இலவச விளம்பரமா ? ரசிகர் மன்றமாகத்தான் அலையுறாங்க !

நன்றி !

said...

நல்ல தலைசீவி, அழகு மாவு பூசி, ஒரு நிழற்படம் எடுத்து அனுப்புங்க...கூடிய விரைவில், ஒரு இடத்தை காலி செய்து உங்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

வேண்டுக்கோள் இப்படி இருக்கலாம். :

அன்பின் உருவம் ஜெகதீசனுக்கு, நீங்கள் எழுதிக் கிழித்ததுப் போதும், திரும்ப வராதீங்க. நன்றி.

விடு ஜூட்... :P

said...

தங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்யவும்.

said...

எக்ஸ்யூஸ்மி,

இங்கே கும்மி நடக்குதா ? முறைப்படி அழைப்பு வரவே இல்லை.

said...

எச்சூஸ்மி

said...

மே ஐ கம் இன்சைடு!?!?

Anonymous said...

ஜெகதீசன் அவர்களே,

கழக வேலைகள் கவனிக்க, எங்கள் தலைவரின் வாரிசுகள் இருப்பதால், நீங்க உருப்படியா பதிவு எழுதுவதையே செய்யுங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

இவன்,

இளைஞர் அணித் தலைவர்
எ.ஏ.தி.க தலைமை நிலையம்.

said...

பதிவு தலைப்பு சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

//
TBCD said...
நல்ல தலைசீவி, அழகு மாவு பூசி, ஒரு நிழற்படம் எடுத்து அனுப்புங்க...கூடிய விரைவில், ஒரு இடத்தை காலி செய்து உங்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

வேண்டுக்கோள் இப்படி இருக்கலாம். :

அன்பின் உருவம் ஜெகதீசனுக்கு, நீங்கள் எழுதிக் கிழித்ததுப் போதும், திரும்ப வராதீங்க. நன்றி.

விடு ஜூட்... :P
//

வழி மொழிகின்றேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்

said...

//
கோவி.கண்ணன் said...
எக்ஸ்யூஸ்மி,

இங்கே கும்மி நடக்குதா ? முறைப்படி அழைப்பு வரவே இல்லை.
//

இதுக்கெல்லாம் அழைப்புக்காக காத்துருக்க முடியுமா????

எண்ணன்ணே :(

said...

//

TBCD said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


TBCD said...
ஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


TBCD said...
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

நல்லா மாடுலேஷன் பண்ணுறீர் !!!!

டிவில ட்ரை பண்ணலாம்

நல்ல எதிர்காலம் இருக்கு

Anonymous said...

நீங்க களையா இருக்கீங்க..

ஆமாம், பதிவுகலகத்தில் பதிவு எழுதாம களையா இருக்கீங்க..

நான் களை பறிக்க வந்திருக்கேன்.

said...

//மங்களூர் சிவா said...
எச்சூஸ்மி
//

சிவா,

மூக்கில் வியர்த்துவிட்டதா ?
கும்மி என்று எப்படித்தான் கண்டுபிடிப்பிங்களோ
:)
நல்லா இருங்க

said...

உங்க ஸ்டைலில் ஒரு பின்னூட்டம் ...

:)