Sunday, November 18, 2007

மாண்புமிகு வேலைக்காரர் முனியப்பர்

நான் ஆணாதிக்கவாதி இல்லைன்னு நிரூபிக்க எனக்கு வேறு வழி எதுவும் தெரியாததால் இந்தப் பதிவை இடுகிறேன். நம்ம மை ஃபிரண்ட் அக்கா "மாண்புமிகு வேலைக்காரி முனியம்மா" ன்னு ஒரு பதிவு போட்டாங்க. நானும் அதப்படித்து ரசித்து நல்லா இருக்குன்னு கமெண்ட் வேற போட்டுட்டேன்.

அப்புறமாப் பாத்தா, "இம்மாதிரி ஜோக்குகள் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே" ன்னு கடுமையான கண்டனங்கள் எல்லாம் அந்தப் பதிவுக்குத் தெரிவிச்சுருக்காங்க. அந்தப் பதிவுக்கு கமெண்ட் போட்டதால எனக்கும் யாராவது "ஆணாதிக்கவாதி" பட்டம் தந்துவிடக் கூடாது என்பதற்காக சில வேலைக்காரன் ஜோக்ஸ்(நெட்ல சுட்டது தான்)...

நம்ம முனியப்பர் இப்பத்தாங்க புதுசா ஒரு வீட்டுல வேலைக்குச் சேந்துருக்கார்..
முதலாளி: என் மேசை மேல பாத்தியா ஒரு மாத தூசி படிஞ்சிருக்கும் போலத் தெரியுது?
முனியப்பர்
: அது என் தப்பு இல்ல எஜமான். நான் வேலைக்குச் சேந்தே ஒரு வாரம் தான் ஆகுது
*************
முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்ணி ஊத்தியாச்சா?
முனியப்பர்:
ஐயா! நல்ல மழை பெஞ்சுக்கிட்டு இருக்கு.
முதலாளி:
அதனால என்ன குடை பிடிச்சுக்கிட்டு ஊத்து!

**************
முனியப்பர் கடைல வெங்காயம் வாங்கப் போறார்....
கடைக்காரரே, ஒரு பத்து கிலோ வெங்காயம், சின்னச் சின்ன வெங்காயமாப் போடுங்க. பெருசா இருந்தா ரெம்ப கனமா இருக்கும். தூக்க முடியாது!!!!!!
*****************************
முனியப்பர் புதுசா ஒரு கடைல வேலைக்குச் சேந்துருக்கார்....
முதலாளி: என்னடா டின்ல எண்ணை குறையுது?
முனியப்பர்: டின் அடியில சின்ன ஓட்டை இருந்துருக்கு, கவனிக்காம விட்டுட்டேன்..
முதலாளி:
டேய்.. டின் மேல தான எண்ணை குறையுது. அடியில் ஓட்டைன்னு கதை விட்டு ஏமாற்றவா பாக்குற?
*****************************
ஒரு கடைக்கு நைட் வாட்ச்மேன் வேலை கேட்டுப் போறாரு நம்ம முனியப்பர்...

முதலாளி: நைட் வாட்ச்மேன் வேலை கேக்குறயே.. உனக்கு அனுபவம் இருக்கா?
முனியப்பர்:
என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. நைட் தூங்குறப்ப சின்னச் சத்தம் கேட்டாலும் எந்திரிச்சுருவேன்!!!

***************************************************************

நான் ஆணாதிக்கவாதி இல்லை! இல்லை! இல்லை!!!!!!!!!!!!!!

39 comments:

said...

இப்போ..நான் சொல்லுறேன்...நீங்க ஒரு பெண்ணாதீக்கவாதி...

ஏன்..வேலைக்காரனாவே எல்லாம்..சிரிப்பு துனுக்கையும்..போட்டிருக்கீங்க..

Anonymous said...

ஏன்ய்யா...எங்க வூட்டுக்காரரு..வேலைக்கு போனா உங்களுக்கு என்னா...

Anonymous said...

அம்மா, அப்பா வேலைக்கு போங்க..நான் இசுகோலுக்கு போறேன்...

Anonymous said...

என்ன பத்தி யாராச்சும் பேசுறீங்களா...

Anonymous said...

தம்பி..உன்னையெல்லாம்..யாரு எழுதச் சொன்னா..அழகா அப்பா, தொழிலைப் பாத்து இருக்கலாமே...பார் நீ படிச்சதாலே தானே கேள்வி எல்லாம்..கேட்குறே..அது எல்லாம்..தப்பு..நாங்களே யோசிச்சுக்கிறோம்..உங்களுக்கும் சேர்த்து..

Anonymous said...

இப்படியாப்பட்ட மனுசரை புரிஞ்சிக்கிற அளவுக்கு கனிசமான தமிழர்களை வளர்த்து விட்டுயிருக்கேனே..அதுவே ஒரு நல்ல ஆரம்பம் தான்...வெங்காயத்தைக் கண்டுக்காதீங்க..

said...

யோவ் நான் வந்து போன பின்னாடி.இப்படி கமெண்டு போட்டா..வேலையில்லாமா நாந்தான் போட்டேன்னூ நினைக்க மாட்டாங்களா..பொறுங்க கும்மியடிக்கிற சாமிகளா...

said...

TBCD said...
யோவ் நான் வந்து போன பின்னாடி.இப்படி கமெண்டு போட்டா..வேலையில்லாமா நாந்தான் போட்டேன்னூ நினைக்க மாட்டாங்களா..பொறுங்க கும்மியடிக்கிற சாமிகளா...///

ஜெகதீஸனுக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு மாமு.

said...

எல்லா ஜோக்கும் அருமை:) நன்றாக இருக்கு இப்படி நான் சொன்னா நான் எனா வாதி? பிரதிவாதியா? இல்ல ஆண் ஆதிக்கவாதியா?

said...

//
TBCD said...
யோவ் நான் வந்து போன பின்னாடி.இப்படி கமெண்டு போட்டா..வேலையில்லாமா நாந்தான் போட்டேன்னூ நினைக்க மாட்டாங்களா..பொறுங்க கும்மியடிக்கிற சாமிகளா...
//
அந்தக் கமெண்டு எல்லாம் நீங்க போடலைன்னு நம்பிட்டேன்.... :P
(ஆமா... அது எப்படி நான் அந்தக் கமெண்ட் எல்லாம் ரிலீஸ் பண்ண முன்னாடியே இந்தக் கமெண்ட் போட்டீங்க?)

said...

குசும்பன்,
//
ஜெகதீஸனுக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு மாமு.
//
நீங்க என்ன சொல்லுறீங்க? இந்தக் கமெண்ட் எல்லாம் போட்டது டிபிசிடி ன்னா? சீச்சீ... அப்படியெல்லாம் இருக்காது.. அவருக்கு ரெம்ப வேலை இருக்காம்(சிவாஜி படம் பாக்குற வேலை)

said...

//
குசும்பன் said...
எல்லா ஜோக்கும் அருமை:) நன்றாக இருக்கு இப்படி நான் சொன்னா நான் எனா வாதி? பிரதிவாதியா? இல்ல ஆண் ஆதிக்கவாதியா?
//
இந்த ஜோக்ஸ் மட்டும் படிச்சிருந்தா நீங்க பெண்ணாதிக்கவாதி(டிபிசிடி தான் சொல்றார்)... மை-பிரண்ட் பதிவையும் படிச்சிருந்தா ஆணாதிக்கவாதி+பெண்ணாதிக்கவாதி....
:)

said...

//ஜெகதீசன் said...
குசும்பன்,
//
ஜெகதீஸனுக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு மாமு.
//
நீங்க என்ன சொல்லுறீங்க? இந்தக் கமெண்ட் எல்லாம் போட்டது டிபிசிடி ன்னா? சீச்சீ... அப்படியெல்லாம் இருக்காது.. அவருக்கு ரெம்ப வேலை இருக்காம்(சிவாஜி படம் பாக்குற வேலை)
//

இடுகையில் இருப்பதை விட இதுதான் பெரிய காமடி
:)

said...

நண்பர் வீட்டுக்குப் போயிருந்த போது அவருக்கு லட்சார்ச்சனை நடந்து கொண்டிருந்தது. மேசையில் கொட்டப்பட்டிருந்தது பொடிப்பொடியான அளவில் இருந்த சின்ன வெங்காயம். "பாருங்க இவருக்குக் கூறே கிடையாது. சின்ன வெங்காயம் வாங்கிட்டு வரச் சொன்னா இப்படி வாங்கிட்டு வந்திருக்கார். எப்படி உரிக்கிறதாம்?" என்பது அவர் மனைவியின் குற்றச் சாட்டு. "இவங்க சொன்னதை அப்படியே செஞ்சாலும் திட்டறாங்க, நாமா எதாவது யோசிச்சுச் செஞ்சாலும் திட்டறாங்க" என்கிற பாவனையோடு நின்றிருந்த நண்பர் மறுநாள் என்னிடம் சொல்கிறார்: "இப்படி எசகு பிசகா செஞ்சாத் தான் தானே போய் காய் வாங்கிக்குவாங்க, இல்லைன்னா காய்கறி வாங்கறது நம்மளோட நிரந்தர வேலையா ஆயிடும் பாருங்க"

ஜெகதீசன் சார், இவர் எந்த ரகம்?

said...

//
நண்பர் வீட்டுக்குப் போயிருந்த போது அவருக்கு லட்சார்ச்சனை நடந்து கொண்டிருந்தது. மேசையில் கொட்டப்பட்டிருந்தது பொடிப்பொடியான அளவில் இருந்த சின்ன வெங்காயம். "பாருங்க இவருக்குக் கூறே கிடையாது. சின்ன வெங்காயம் வாங்கிட்டு வரச் சொன்னா இப்படி வாங்கிட்டு வந்திருக்கார். எப்படி உரிக்கிறதாம்?" என்பது அவர் மனைவியின் குற்றச் சாட்டு. "இவங்க சொன்னதை அப்படியே செஞ்சாலும் திட்டறாங்க, நாமா எதாவது யோசிச்சுச் செஞ்சாலும் திட்டறாங்க" என்கிற பாவனையோடு நின்றிருந்த நண்பர் மறுநாள் என்னிடம் சொல்கிறார்: "இப்படி எசகு பிசகா செஞ்சாத் தான் தானே போய் காய் வாங்கிக்குவாங்க, இல்லைன்னா காய்கறி வாங்கறது நம்மளோட நிரந்தர வேலையா ஆயிடும் பாருங்க"

ஜெகதீசன் சார், இவர் எந்த ரகம்?
//
தெரியலையே சார்....
டிபிசிடி கிட்ட தான் கேக்கனும்... அவருக்குத் தான் ஆணாதிக்கவாதி, பெண்ணாதிக்கவாதி பத்தியெல்லாம் தெரியும்...(வேலைக்காரி பத்தி ஜோக் சொல்லுறதே ஆணாதிக்கம்ன்னா,காய்கறி வாங்குறது பெண்களின் வேலைன்னு சொல்லுறது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு இல்லையா?)
:))

said...

ஜெகதீசன்..இதுக்கு விடை தெரியனுமின்னா, சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க.

இதற்கிடையிலே, ரத்னேஷ் குறிப்பிட்ட அந்த மனிதருக்கு என் கண்டனங்கள். கனவர் வர்க்கத்தின் ரகசியத்தை வெளியிட்டு அவர்கள் ஒரே தந்திரத்தை கடைப்பிடிக்க வகையில்லாமல் செய்ததற்கு.

ஜெகதீசன், பின்னுட்டம் வெளியிடும் போது, இது போன்ற, சென்சிடிவ்வான, விசயம் இருந்தா, மட்டுறுத்துங்க...


//*ஜெகதீசன் said...

தெரியலையே சார்....
டிபிசிடி கிட்ட தான் கேக்கனும்... அவருக்குத் தான் ஆணாதிக்கவாதி, பெண்ணாதிக்கவாதி பத்தியெல்லாம் தெரியும்...(வேலைக்காரி பத்தி ஜோக் சொல்லுறதே ஆணாதிக்கம்ன்னா,காய்கறி வாங்குறது பெண்களின் வேலைன்னு சொல்லுறது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு இல்லையா?)
:))*//

said...

ஃஃ
நண்பர் வீட்டுக்குப் போயிருந்த போது அவருக்கு லட்சார்ச்சனை நடந்து கொண்டிருந்தது. மேசையில் கொட்டப்பட்டிருந்தது பொடிப்பொடியான அளவில் இருந்த சின்ன வெங்காயம். "பாருங்க இவருக்குக் கூறே கிடையாது. சின்ன வெங்காயம் வாங்கிட்டு வரச் சொன்னா இப்படி வாங்கிட்டு வந்திருக்கார். எப்படி உரிக்கிறதாம்?" என்பது அவர் மனைவியின் குற்றச் சாட்டு. "இவங்க சொன்னதை அப்படியே செஞ்சாலும் திட்டறாங்க, நாமா எதாவது யோசிச்சுச் செஞ்சாலும் திட்டறாங்க" என்கிற பாவனையோடு நின்றிருந்த நண்பர் மறுநாள் என்னிடம் சொல்கிறார்: "இப்படி எசகு பிசகா செஞ்சாத் தான் தானே போய் காய் வாங்கிக்குவாங்க, இல்லைன்னா காய்கறி வாங்கறது நம்மளோட நிரந்தர வேலையா ஆயிடும் பாருங்க"

ஜெகதீசன் சார், இவர் எந்த ரகம்?

ஃஃ
ரத்னேஷ் இவர் பொழைக்க தெரிந்தவர்!

போனவாரம் முழுக்க பாருங்க நம்ப டிபிசிடி சமூக சேவையில் இருந்தார். இன்னா சமூக சேவை என்கிறீர்களா?

அதான் காய்கறி வாங்குவது, வீடு துடைப்பது, பாத்திரம் கழுவது என்று மனிதர் பயங்கர பிஸி!

said...

//
ஜெகதீசன், பின்னுட்டம் வெளியிடும் போது, இது போன்ற, சென்சிடிவ்வான, விசயம் இருந்தா, மட்டுறுத்துங்க...
//
சரிங்க தலைவரே...
:)

said...

////
கோவி.கண்ணன் said...

//ஜெகதீசன் said...
குசும்பன்,
//
ஜெகதீஸனுக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு மாமு.
//
நீங்க என்ன சொல்லுறீங்க? இந்தக் கமெண்ட் எல்லாம் போட்டது டிபிசிடி ன்னா? சீச்சீ... அப்படியெல்லாம் இருக்காது.. அவருக்கு ரெம்ப வேலை இருக்காம்(சிவாஜி படம் பாக்குற வேலை)
//

இடுகையில் இருப்பதை விட இதுதான் பெரிய காமடி
:)
////
என்ன கோவியாரே, நீங்களும் இப்படி சொல்லுறீங்க? ஒரு வேளை நிஜமாவே டிபிசிடி தான் கமெண்ட் எல்லாம் போட்டுருக்காரோ? :)

said...

//இதற்கிடையிலே, ரத்னேஷ் குறிப்பிட்ட அந்த மனிதருக்கு என் கண்டனங்கள். கனவர் வர்க்கத்தின் ரகசியத்தை வெளியிட்டு அவர்கள் ஒரே தந்திரத்தை கடைப்பிடிக்க வகையில்லாமல் செய்ததற்கு.//

அரவிந்த் சொன்னதை நானும் வழிமொழிகிறேன். இருந்த ஒரே ரகசியத்தையும் இப்படி பொதுவில் போட்டுடைத்த ரத்னேஷுக்கு கண்டனங்கள். அடுத்த பிறவியிலும் ஆணாகவே பிறந்து கஷ்டப்படனும்.
:)

said...

//என்ன கோவியாரே, நீங்களும் இப்படி சொல்லுறீங்க? ஒரு வேளை நிஜமாவே டிபிசிடி தான் கமெண்ட் எல்லாம் போட்டுருக்காரோ? :)//

இந்த வாரம் கடைசியில் பினாங் போகிறேன், நீங்க கேட்பதையெல்லாம் பப்ளிக்கா சொன்னேன் என்றால் அப்பறம் சாப்பாட்டில் விசம் வச்சுருவார்.
:)

said...

//
இந்த வாரம் கடைசியில் பினாங் போகிறேன், நீங்க கேட்பதையெல்லாம் பப்ளிக்கா சொன்னேன் என்றால் அப்பறம் சாப்பாட்டில் விசம் வச்சுருவார்.
:)
//
:))
நானும் தான வர்றேன்... அப்ப எனக்கும் விசம் வச்சிருவாரா? :P

said...

அதென்னங்க - ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம்னு - ஒரு எளவுமே புரியலேங்க - இப்பல்லாம் முனிமா முனிப்பன் எல்லாமே வேலைக்கு போகணுங்க - இப்படித்தான் இருப்பாங்க

said...

//
cheena (சீனா) said...

அதென்னங்க - ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம்னு - ஒரு எளவுமே புரியலேங்க - இப்பல்லாம் முனிமா முனிப்பன் எல்லாமே வேலைக்கு போகணுங்க - இப்படித்தான் இருப்பாங்க

//
எனக்கும் கூட ஒன்னும் புரியலங்க...
ஜோக் போட்டா அத ரசிக்காம ஆராய்ந்து,ஆணாதிக்கம் அது இதுன்னு கமெண்ட் எல்லாம் ஒரு சிலர் போடுறாங்க...

said...

என் மீது தனிப்பட்ட முறையிலே தாக்குதல் நடத்த துனை புரியும் ஜெகதீசா..

நீ ஒரு ராம பக்தன்..

மறைந்திருந்து வாலி மீது அம்பு விட்ட ராமன் பக்தன் என்பதை நிருபித்துவிட்டாய்..நீ குடைப் பிடிக்க இலைக்காரனைத் தான் காணவில்லை.

-------<@-@>-------<@-@>-------
அப்பறம்..கீழ் கணடவற்றில் உங்க மூனு ஏருக்கும் விருப்பமானதைச் சொல்லிவிட்டால் வாங்கி வைக்கிறேன்..

1) எலி மருந்து

2) பாலிடால்

3) விஷம் (பிரண்டு கிடையாது..கொட்டை எழுத்திலே எழுதியிருக்கும்..கோடம்பாக்கத்தில் மட்டுமே கிடைக்கும்..ஹீரோ சாப்பிட்ட சாக 2 நாள் ஆகும்..நீங்க சாப்பிட உடனே...)

said...

சமூக சேவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்...

நாங்கள் (அதாவது கனவர்கள்) போய் கொள் முதல் பண்ணினால் தான், அந்தக் கடைக்கார்கள் லாபம் பாக்கலாம்..தெரியும்மா..பேரம்..பேசி பேசி பெண்கள், அவர்களின் லாபத்தை குறைத்து விடுகிறார்கள்..

லாபம் வருவதால், அவர்கள் இன்னும் தொழில் செய்கிறார்கள்.அவர்களால், மக்கள் இன்னும் சிறு கடைகளுக்குச் செல்கிறார்கள். இல்லையென்றால், சிறு தொழில் வனிகம் வாடிவிடும்.

ஆதலால், குடும்பச் சேவையே சமூக சேவை என்று திடமான கருத்துக் கொண்ட அனைத்து மணமான ஆணகள் சார்பில் கூறிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.

--------<>--------<>--------
//*பாரி.அரசு said...
வீடு துடைப்பது, பாத்திரம் கழுவது என்று மனிதர் பயங்கர பிஸி!*//

என் விட்டைத் துடைப்பதில் எனக்கு என்ன நட்டம் வரப் போகிறது...வெட்டியா பிளாக் பிளாக் என்று குப்பைக் கொட்டுவதை விட வீட்டுக் குப்பையயை சுத்தம் செய்வதில் தப்பே இல்லை...

--------<>--------<>--------

இதற்கிடையில், பாரிக்கு அவசரமாக திருமணம் செய்விக்க வேண்டியிருப்பதால், பதிவு படிப்பவர்களில் விருப்பமுள்ள பெண்கள் இருந்தால், *******DONT PUBLISh****** என்று பின்னுட்டம் மூலம், பாரி அரசுக்கு தகவல் அனுப்பினால், உடனடியாக பரிசீலிக்கப்படும்

அவரின் ஃபுரொபைல் : தனிக்கட்டை, தொழில் : வம்பளப்பது, வாசம் : சிங்கப்பூர்

--------<>--------<>--------

இந்தப் பின்னுட்டம் வரவில்லை என்றால், சத்தியமாக சாப்பாட்டிலே விசம் வைக்கப்படும் என்று தாழ்மையுடன் சொல்லிக் கொல்லுகிறேன்(ள்ளுகிறேன்)

said...

மன்னிக்கவும் tbcd அவர்களே... உங்கள் பின்னூட்டத்தை இப்போது வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன். அதில் தனி மனிதத் தாக்குதல்கள் இருக்கிறது.. அதனால் சிறிது நேரம் கழித்து வெளியிடுகிறேன்...
உங்கள் பின்னூட்ட ஆதரவு தொடரும் என நம்புகிறேன்.. நன்றி

:P

said...

ஃஃ
சமூக சேவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்...

நாங்கள் (அதாவது கனவர்கள்) போய் கொள் முதல் பண்ணினால் தான், அந்தக் கடைக்கார்கள் லாபம் பாக்கலாம்..தெரியும்மா..பேரம்..பேசி பேசி பெண்கள், அவர்களின் லாபத்தை குறைத்து விடுகிறார்கள்..

லாபம் வருவதால், அவர்கள் இன்னும் தொழில் செய்கிறார்கள்.அவர்களால், மக்கள் இன்னும் சிறு கடைகளுக்குச் செல்கிறார்கள். இல்லையென்றால், சிறு தொழில் வனிகம் வாடிவிடும்.

ஆதலால், குடும்பச் சேவையே சமூக சேவை என்று திடமான கருத்துக் கொண்ட அனைத்து மணமான ஆணகள் சார்பில் கூறிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.
ஃஃ
சமீபத்தில் டி.ராஜேந்தருக்கு அடுத்தபடியாக விளக்கம் கொடுப்பதில் விருது வழங்க டிபிசிடி க்கு நான் பரிந்துரைச்செய்கிறேன்.

said...

பரிந்துரையயை ஏற்றுக்கொள்ளுகிறேன்.

--------<>--------<>--------

விருதை பினாங்க வரும் போது தவறாமல் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன். ;)

said...

//
இந்தப் பின்னுட்டம் வரவில்லை என்றால், சத்தியமாக சாப்பாட்டிலே விசம் வைக்கப்படும் என்று தாழ்மையுடன் சொல்லிக் கொல்லுகிறேன்(ள்ளுகிறேன்)
//
ஒரு சின்னப் புள்ளய இப்படிப் போட்டு மிரட்டுறீங்களே... இது நியாயமா?

said...

//
ரத்னேஷ் இவர் பொழைக்க தெரிந்தவர்!

போனவாரம் முழுக்க பாருங்க நம்ப டிபிசிடி சமூக சேவையில் இருந்தார். இன்னா சமூக சேவை என்கிறீர்களா?

அதான் காய்கறி வாங்குவது, வீடு துடைப்பது, பாத்திரம் கழுவது என்று மனிதர் பயங்கர பிஸி!
//

:)))
ஓ...அதனாலதான் கமெண்ட் ரிலீஸ் பண்ணக்கூட நேரமில்லையா?

said...

//
என் மீது தனிப்பட்ட முறையிலே தாக்குதல் நடத்த துனை புரியும் ஜெகதீசா..

நீ ஒரு ராம பக்தன்..

மறைந்திருந்து வாலி மீது அம்பு விட்ட ராமன் பக்தன் என்பதை நிருபித்துவிட்டாய்..நீ குடைப் பிடிக்க இலைக்காரனைத் தான் காணவில்லை.
//
ஜெய் ஸ்ரீராம்!!!!

said...

//
delphine said...
:)
//
நன்றி டாக்டர்...:))
உங்க பதிவுல இருந்த நகைச்சுவைகள் ரெம்ப நல்லா இருந்தது..

Anonymous said...

நாங்கள் சமூகத்துக்கு ரெம்ப சேவை செய்யுறோம்.. ஆனா எங்களக் கேலி பண்ணியும் ஜோக் எழுதுறாங்க... இத யாராவது கண்டியுங்களேன்....

said...

// நாங்கள் சமூகத்துக்கு ரெம்ப சேவை செய்யுறோம்.. ஆனா எங்களக் கேலி பண்ணியும் ஜோக் எழுதுறாங்க... இத யாராவது கண்டியுங்களேன்....//

தங்கள் உணர்வு எனக்குப் புரிகிறது. உண்மை நிகழ்வுகளை ஜோக் என்று எழுதினால் விவரம் தெரிந்தவர்கள் மனம் என்ன பாடுபடும் என்று ஏன் இவர்களுக்குப் புரிவதே இல்லை?

said...

//
தங்கள் உணர்வு எனக்குப் புரிகிறது. உண்மை நிகழ்வுகளை ஜோக் என்று எழுதினால் விவரம் தெரிந்தவர்கள் மனம் என்ன பாடுபடும் என்று ஏன் இவர்களுக்குப் புரிவதே இல்லை?
//
:))))

said...

//அப்பறம்..கீழ் கணடவற்றில் உங்க மூனு ஏருக்கும் விருப்பமானதைச் சொல்லிவிட்டால் வாங்கி வைக்கிறேன்..

1) எலி மருந்து

2) பாலிடால்

3) விஷம் (பிரண்டு கிடையாது..கொட்டை எழுத்திலே எழுதியிருக்கும்..கோடம்பாக்கத்தில் மட்டுமே கிடைக்கும்..ஹீரோ சாப்பிட்ட சாக 2 நாள் ஆகும்..நீங்க சாப்பிட உடனே...)//

யோவ் அரவிந்த்,

நான் குடும்பஸ்தன்யா, என்னையுமா ?
:)

said...

"முனியப்பர்" என்னும் பெயர் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

said...

//
TBCD said...
இப்போ..நான் சொல்லுறேன்...நீங்க ஒரு பெண்ணாதீக்கவாதி...

ஏன்..வேலைக்காரனாவே எல்லாம்..சிரிப்பு துனுக்கையும்..போட்டிருக்கீங்க..

//
கலக்கல்

ரிப்பீட்டேய்