Friday, September 21, 2007

இறைவன் எல்லாம் வல்லவனா?

இறைவனின் இயல்புகளில் முக்கியமான ஒன்றாகக் கூறப்படுவது, அவனின் வல்லமை.-"அவன் எல்லாம் வல்லவன்". அவனால் முடியாதது ஒன்றுமே இல்லை.

இறைவனின் இந்த இயல்புக்கு எதிராக இறை மறுப்பாளர்கள் வைக்கும் முக்கிய வாதம்:

இறைவன் எல்லாம் வல்லவன் எனில்,
"அவனால் தூக்கமுடியாத அளவு பெரிய கல் ஒன்றை அவனால் உருவாக்க முடியுமா?"

அவனால் அப்படிப்பட்ட கல்லை உருவாக்க முடியும் எனில்:
அவன் உருவாக்கிய கல்லைத் தூக்க முடியாதவன் எப்படி "எல்லாம் வல்லவன்" ஆகமுடியும்?

அவனால் அப்படிப்பட்ட கல்லை உருவாக்க முடியாது எனில்:
அதை உருவாக்க முடியாதவன் எப்படி "எல்லாம் வல்லவன்" ஆகமுடியும்?

எனவே "இறைவன் எல்லாம் வல்லவன்" என்னும் கூற்று எப்படி உண்மையாக இருக்க முடியும்?

7 comments:

Anonymous said...

avan shakthi ku mel ethum illai
by sulthan

said...

//
avan shakthi ku mel ethum illai
by sulthan
//
சுல்தான்,
புரியவில்லை... சிறிது விளக்கவும்..

said...

என்னுடைய "இறைவழிபாடு-ஓர் அலசல்" என்னும் கட்டுரையை
என்பதிவில் படித்துப் பார்த்தால்,
ஒரு வேளை உங்களுக்குப் புரியலாம்.
ஆர்வமிருப்பின் செய்யலாம்.

said...

நன்றி. ஜீவி அவர்களே, கட்டாயம் படிக்கிறேன்.

said...

சொன்னபடியே உடனே என் பதிவிற்கு
வந்து, குறிப்பிட்டக் கட்டுரையைப்
படித்துப் பார்த்ததுமல்லாமல், உங்கள்
கருத்தை ஒரு பின்னூட்டமாகவும்
இட்டதற்கு, நன்றி நண்பரே!

said...

நல்லாவே யோசிச்சிருக்கீங்க :)

Logic சரிதான். ஆனாலும் அவனாலே தூக்க முடியாதா கல்லை உருவாக்குவதால் என்ன பயன்? பயனில்லாத விஷயத்தில் அவன் ஏன் மெனக்கட வேண்டும்?

said...

இந்த பதிவை நான் எப்படி தவறினேன்.

அசத்தல் கேள்விகள், யாரும் நேரடியாக பதில் சொல்ல மாட்டாங்க.

கூடவே இன்னொன்றும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இறைவன் தன்னைப் போலவே இன்னொரு இறைவனை படைக்கும் சக்தி கொண்டவனா ?
:)