Showing posts with label மன நோயாளி. Show all posts
Showing posts with label மன நோயாளி. Show all posts

Wednesday, June 18, 2008

கண்ணைக் குத்தும் சாமியும், நக்சலைட் பதிவரும் - வலைக் கிசுகிசு

லேசியமாரியாத்தா, அ(டி)ப்பாவிச் சிறுமி, அறுந்த வாலு எனப் பல பெயர்களில் அறியப்படுகிறார் சிங்கையில் உயிரித் தொழில்நுட்பம் படிக்கும் பிரபல மலேசியப் பெண் பதிவர் ஒருவர். இவரைப் போலவே இவரது பல் ஒன்று சொன்னபடி கேட்காமல் மேலிருந்து கீழாக வளராமல், இடமிருந்து வலமாக வளர்ந்து விட்டதாம். இதனால் கிருமித் தொற்று ஏற்பட்டுவிட்டதாம். மருத்துவர், அந்தப் பல்லை அறுவைசிகிச்சை செய்து அகற்ற வேண்டும் (ஏம்மா, பல்லுப் பிடுங்குறதுக்கு உங்க ஊர்ல அறுவைசிகிச்சைன்னு பேரா :P ) என்று கூறிவிட்டாராம். இதனால் விரைவில் இவருக்கு அறுவை சிகிச்சை நடக்கப் போகிறதாம். இவர் விரைவில் நலமடைய வாழ்த்துவோம்..

(இவரின் சாட்டிங், தொலை/அலைபேசி அறுவைகளைத் தாங்கமுடியாத, பொய்யாக் கெட்டவர் உள்ளிட்ட சில பதிவர்கள், "இவர் விரைவில் நலமடையட்டும். ஆனால், குறைந்தது ஒரு மாதத்திற்காவது சாட்டிங் செய்யாமால், தொலை/அலை பேசாமல் இருக்கவேண்டும் என மருத்துவர் இவருக்கு அறிவுறுத்த வேண்டும் " எனக் கடவுளை வேண்டுகிறார்களாம்)

ன் பதிவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பதிவிட்டுவரும் மலேசியப் பதிவர் ஒருவரின் பதிவுகளைப் பற்றி அவரது மனைவி அவரின் அம்மா, அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டாராம். அவரது வீட்டில் இப்போது அவருக்கு "சாமி கண்ணைக் குத்திவிடும்" எனக் கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாம். பதிவர் ஆடிப்போய் இருக்கிறார். யாருக்கும் தெரியாமல் இணைய மையங்களுக்கு வந்து வீட்டுக்குத் தெரிந்துவிடுமோ எனப் பயந்து பயந்து பதிவிடுகிறாராம் இப்போது...

மூத்த சிங்கைப் பதிவர் ஒருவரின் வீட்டிலும் இதே பிரச்சனையாம். என்னை
நக்சலைட்டா எனக் கேட்கிறார்கள் என பதிவர் சந்திப்பில் இவர் புலம்பினாராம். இவரது அண்ணன் இவரின் பதிவைப் படித்துவிட்டு, வீட்டில் "இவன் நக்சலைட் மாதிரி எழுதுறான்" எனப் போட்டுக் கொடுத்துவிட்டாராம். சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த அவர் வீட்டில் தங்காமல் பதிவர்களைச் சந்திக்க ஊர் ஊராகச் சுற்றியதைக் கண்டு, "நக்சலைட் ஆகீட்டயா?" எனக்கேட்டு பதிவரின் அம்மா நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாராம். இனிமேல் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். வீட்டில் சமைக்கும் நேரம் தவிர எந்தநேரமும் கணிப்பொறி முன்னரே அமர்ந்திருப்பதைக் கண்டு கடுப்பில் இருக்கும் அவரது மனைவியும் தாக்குதலைத் தொடங்கியுள்ளாராம். இருமுனைத் தாக்குதலையும் சமாளித்து ஒரு நாளுக்கு 2 பதிவுகளைப் போட்டுத் தள்ளுகிறார் பதிவர். இவரால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ... :P

சிங்கைப் பதிவர் சந்திப்பு குறித்துப் பதிவிட்ட பதிவர்களில் சிலருக்கு
"ஏண்டா **** * *** ***********,உன்னை மாதிரி *****
ஒண்ணா சேர்ந்து * தின்னறதுக்கு
பெயர் சந்திப்பாடா,**:( "

என ஒரு மனநோயாளியிடமிருந்து பின்னூட்டம் வந்திருக்கிறதாம். அந்த மனநோயாளியின் மனநோய் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்!!!