Showing posts with label தூதரகம். Show all posts
Showing posts with label தூதரகம். Show all posts

Sunday, August 19, 2007

சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...

சிங்கப்பூரில் எல்லா இடங்களிலும் தமிழ் இருக்கும். இதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

"தளமேடை இடைவெளியை கவனத்தில் கொள்ளுங்கள்", "விளக்கு மின்னும் போது உள்ளே நுழையாதீர்கள்" என்பது போன்ற வாக்கியங்களைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இது போல அனைத்து இடங்களிலும் தமிழ் இருக்கும்.

ஒரு வேலையாக இந்தியத் தூதரகத்திற்கு சென்றேன். அங்கு தமிழ் இல்லை. ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே உள்ளது. சிங்கப்பூரின் எல்லா இடங்களிலும் தமிழ் இருக்கும் போது இந்தியத் தூதரகத்தில் மட்டும் இல்லாமல் இருப்பது நெருடலாக இருக்கிறது.

தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்திய அரசு ஏன் தமிழுக்கும் ஆதரவு தரக்கூடாது? இத் தூதரகங்களில் தமிழிலும் அலுவல்களை நடத்தலாமே?