Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, June 9, 2008

ஏர்இந்தியா எக்ஸ்பிரஸில் தமிழ்!!!!!!




அதிசயம் ஆனால் உண்மை!!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் தமிழையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்!!!!!!

இந்த முறை ஊருக்குச் சென்றபோதும், திரும்பியபோதும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் பயணித்தேன்... முதலில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது.. வழக்கம்போல ஆங்கிலம் மற்றும் இந்தியில் பாதுகாப்பு வழிமுறைகள் எல்லாம்...

ஒரு அரை மணி நேரம் கழித்து திடீரென்று மேலிருந்து ஒரு டீவி முளைத்தது.. அங்கு தான் தமிழ்.... ஆமாங்க தமிழ்ப்படம் போட்டாங்க... அதிரடி நாயகன் சுந்தர்சி யின் வீராப்பூ படம் போட்டாங்க... முதல் 5 நிமிடம் சத்தத்துடன் படம் ஓடியது... திடீருன்னு சத்தம் நின்று போனது... அப்புறம் பாத்தா அந்தப்பக்கத்துல இருந்து விமாணப் பணிப்பெண் அத்தை (ஏர் இந்தியா இப்பல்லாம் மாறிடுச்சி... பணிப்பெண்கள் 50 வயது பாட்டிகள் இல்லை... அதுக்கு பதில் 40 வயது அத்தைகள்... :) ) headphone எடுத்துட்டு வந்தாங்க ஒரு தட்டில்....


ஒரு headphone 2 சிங்கப்பூர் வெள்ளி அல்லது ஒரு அமெரிக்க வெள்ளி அல்லது 50 ரூபாயாம்.... ஹிஹிஹி..... அந்த மட்டமான headphone விக்கிறதுக்குத்தான் தமிழ்ப்படம் போட்டாங்க போல...

ஆனாலும் அவங்க யாருக்குமே தெரியலை வீராப்பூ, வேல்(திரும்ப வந்தப்ப போட்டாங்க) மாதிரி மட்டமான படங்களுக்காக எல்லாம் நம்மாளுங்க யாரும் 50 ரூபாய் தந்து headphone வாங்கமாட்டாங்கன்னு..... :)) ஒரு 2 அல்லது 3 பேர் தவிர வேற யாருமே வாங்கலை.....


சென்னையில் இருந்து மதுரை சென்ற பாரமவுண்ட் விமானத்தில் அப்படியே தலைகீழாக இருந்தது.... தமிழிலும் அறிவிப்புகள்.. கனிவுடனும், சிரிப்புடனும் பணிப்பெண்கள்.. 1/2 மணிநேரப் பயனம் என்றாலும் இனிய அனுபவம்.. நல்ல உணவுடன்.

நான் சென்ற அதே விமானத்தில் முதல்வர் கலைஞரும் வந்திருக்கிறார், விமானநிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நட்டும் விழாவிற்காக.. ஆனால் இதனால் மற்ற பயணிகளுக்கு சிறிதும் இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.. விமானம் நின்ற பின் ஒரு 5 நிமிடம் தாமதமாக விமானத்தில் இருந்து வெளியெறுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதைத் தவிர ஒரு சிறு சிரமம் கூட மற்ற பயணிகளுக்கு ஏற்படவில்லை.. நல்ல சேவை..

அரசு விமான நிறுவனங்களின் சேவை எப்போது இதுபோல் மாறுமோ தெரியவில்லை.... :(

Sunday, August 19, 2007

சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...

சிங்கப்பூரில் எல்லா இடங்களிலும் தமிழ் இருக்கும். இதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

"தளமேடை இடைவெளியை கவனத்தில் கொள்ளுங்கள்", "விளக்கு மின்னும் போது உள்ளே நுழையாதீர்கள்" என்பது போன்ற வாக்கியங்களைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இது போல அனைத்து இடங்களிலும் தமிழ் இருக்கும்.

ஒரு வேலையாக இந்தியத் தூதரகத்திற்கு சென்றேன். அங்கு தமிழ் இல்லை. ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே உள்ளது. சிங்கப்பூரின் எல்லா இடங்களிலும் தமிழ் இருக்கும் போது இந்தியத் தூதரகத்தில் மட்டும் இல்லாமல் இருப்பது நெருடலாக இருக்கிறது.

தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்திய அரசு ஏன் தமிழுக்கும் ஆதரவு தரக்கூடாது? இத் தூதரகங்களில் தமிழிலும் அலுவல்களை நடத்தலாமே?

Sunday, August 12, 2007

இனிவரும் தமிழினம்

இனிவரும் தமிழினம் - உயர்ந்து ஓங்க வேண்டும்.

உலகத் தமிழ் அறக்கட்டளையின் வெளியீடான, "திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி" ஆகிய மூன்றும் கொண்ட நூலில், "தமிழின எதிர்கால வழிகாட்டி" பகுதியில் திரு. தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய "இனிவரும் தமிழினம் - உயர்ந்து ஓங்க வேண்டும்" என்ற கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த இடுகை. (பக்கம் - 1765)

அந்தக் கட்டுரையின் சில பகுதிகள்:

கி.பி 1200 இறுதியில் அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட தமிழகம் இறுதியாக ஆண்ட ஆங்கிலேயர் ஆட்சியில் ஒரு மாநிலமாக சிறுத்துப் போனது போன்று தமிழினத்தின் மாண்பும் சிதைந்து போனது. பல நூற்றாண்டுகளாகத் தமிழினத்தின் மீட்சிக்கு பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வந்த போதிலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் இம்முயற்சிகள் பன்மடங்காக மேலோங்கிற்று. ஆங்கிலேயர் வழங்கிய கல்வியும் - பிற மதங்களின் மனித நேயமும் தமிழினத்தின் விடியலுக்கு வித்தாக அமைந்தது என்பதை மறுக்கவியலாது.

வள்ளலார், மறைமலையடிகளார், திரு.வி.க போன்ற தமிழ் அறிஞர்களின் அயராத முயற்சியும் - தந்தை பெரியாரின் சுயமரியாதைப் போராட்டமும் அறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் போராட்டமும், மொழிப்போராட்டங்களும், தமிழர் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட வழி வகுத்தது என்பது மறுக்கவியலாத உண்மையாகும். ......................
........................................................................
........................................................................


நாடு

பிறரின் நாடுகளைப் பிடிப்பதல்ல தமிழினத்தின் நோக்கம். தனக்குரியதை மீட்டெடுக்க வேண்டும். ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை எனும் கவிஞர் காசி ஆனந்தனின் வைர வரிகள் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சங்களிலே ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
எந்த இனம் அரசாளும் உரிமையை இழந்து விடுகிறதோ, அந்த இனம் பிற இனத்தவரின் தயவில் தான் வாழ வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் உரிமை போன்றவற்றில் தலைதூக்கினால் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும். இத்தகய அடக்கு முறையை முறியடிக்க எழுந்ததுதான் தமிழீழ விடுதலைப் போராட்டம்.

மொழி
...............................................................
தமிழ்ர்கள் கட்டிய கோயிலில் தமிழ் மொழிக்கு இடமில்லை என்று கூறும் மதத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்யாத அர்ச்சகர்களையும், கோயில்களையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
.........................................

இனம்

சாதிப் பெயர்களைத் தவிர்க்க வேண்டும். சாதிவாரியான அமைப்புகள் கலைக்கப்பட வேண்டும். சாதிப் பெருமையை விட்டொழித்துத் தமிழினப் பெருமையை நிலைநாட்டச் செய்ய வேண்டும். ஒரே இனமாக சேர்ந்து வாழ வேண்டும்.
..........................................................................

சமயம் - மதம்

திருக்குறள் தமிழ் இனத்தின் பொது மறை எனவும், ஏனய சமய மறைகள் அனைத்தும் தனி மறைகள் எனவும் தமிழினம் பின்பற்ற வேண்டும்.
.......................................

கல்வி

தமிழ் சமுதாயத்திற்கு முறையான வாய்ப்பு வழங்கப்பட்டால் கல்வித்துறையில் உலகை ஆளும் என்பதற்கு சான்றுகள் கட்டியம் கூறுகின்றன.
....................................................................................

ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குள் தமிழினம் கல்வித் துறையில் கணிசமான அளவில் விரைந்து முன்னேற்றம் கண்டுள்ளது.
......................................
.....................................

சிறுபான்மை இனம்

தமிழர்கள் வாழுகின்ற அனைத்து நாடுகளிலும் சிறுபான்மை இனமாக வாழுகின்றார்கள். தமிழகத் தமிழர்கள் இந்தியாவில் சிறுபான்மை, மற்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் ஆங்காங்கே சிறுபான்மை.

சிறுபான்மையினர் எக்காலத்திலும் அரசாளும் உரிமையைப் பெறுவதில்லை. அரசு சட்டங்கள் இயற்றுவதில்லை. அரசு தரப்பில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வரையறுப்பதில்லை. பெரும்பான்மையர் சிறுபான்மையினர் குரிது எப்போதுமே கவலைப்படுவதில்லை.
.....................................................
.....................................................

தமிழினத்திற்கும், தமிழுக்கும் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உலகளாவிய அளவில் தமிழீழ விடுதலைப் பேராளிகளே வருங்காலத்தில் சிறுபான்மை இனம் என்ற நிலையில் இருந்து தமிழினத்தை மீட்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளைத் தோற்றுவிக்கப் போகிறார்கள். அவர்களை உற்சாகப் படுத்த வேண்டிய உதவிகளை தமிழினத்தவர் ஒவ்வொருவரும் விரைந்தும் ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டும்.
......................................................
......................................................

கல்வியும் பொருளாதார மேம்பாடும் இனி வரும் தமிழினத்தை உயர்த்தும். தமிழீழம் தமிழர் தன்மானம் காக்கும். வெற்றி நிச்சியம்.