Showing posts with label சவால். Show all posts
Showing posts with label சவால். Show all posts

Monday, June 16, 2008

மங்களூர் சிவா & நிஜமா நல்லவனுக்கு ஒரு சவால்

உங்க ரெண்டு பேருக்கும் இப்படி ஒரு பின்னூட்டம் போட எப்படி மனசு வந்தது?
நிஜமா நல்லவன் said...
///ஜெகதீசன் said...
//பல பதிவர்கள் எழுத்துக்களில்தான் அனல் பறக்கும்//
சிவா... நீங்க என்னை சொல்லலியே... :P///
நீங்க தான் எழுதுறதே இல்லையே. அப்புறம் என்ன கேள்வி:)

மங்களூர் சிவா said...
/
ஜெகதீசன் said...
//பல பதிவர்கள் எழுத்துக்களில்தான் அனல் பறக்கும்//
சிவா... நீங்க என்னை சொல்லலியே... :P
/
நீங்கதான் எழுதறதே இல்லியே ஜெகதீசன் அதனால உங்க பதிவுல தூசிதான் பறக்குதாம் :))))
நான் என்ன உங்களை மாதிரி வெட்டியா உக்காந்துட்டு இருக்கேன்னு நினைச்சீங்களா?

காலைல அலுவலகம் வந்ததும்,
முதல்ல தட்ஸ் தமிழ் படிக்கனும்..

அப்புறமா தினமலர் படிக்கனும்..


அடுத்து தமிழ்மணத்தைத் திறந்து ஒவ்வொரு பதிவா நாள் முழுதும் படிக்கனும்.


பல பதிவுகளுக்கு ":)" பின்னூட்டம போடனும்.


பல பதிவுகளில் பின்னூட்டங்களுக்கு "வழிமொழிகிறேன்" போடனும்.


சில பதிவுகளுக்கு இரண்டு அல்லது 3 சொற்களில் பின்னூட்டம் போடனும்.


சில பதிவுகளுக்கு மூன்றுக்கு மேற்பட்ட சொற்களில் 4 அல்லது 5 பின்னூட்டங்கள் போட்டு கும்மனும்.


வரும் forwarded mailகள் எல்லாம் படிக்கனும்.


கொஞ்சம் மொக்கை mailகளுக்கு அதை விட மொக்கையா பதில் அனுப்பனும்..


இதற்கிடையில் அலுவலகத்தில் கொஞ்சம் ஆணியும் பிடுங்க வேண்டும்.


இத்தனை வேலைகளுக்கு நடுவில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு பதிவாவது போட்டுவிடுகிறேன்.. இது எவ்வளவு பெரிய காரியம்??

ஒரு நாளில் எத்தனை ":)" எத்தனை பின்னூட்டம் .... எத்தனை பின்னூட்டத்துக்கு பதில் .. எவ்வளவு tension... எத்தனை சாட்டிங் ..... எத்தனை email..
ஒரு நாள்... ஒரே நாள் நீங்க என் இடத்துல இருந்து பாருங்க.. அப்பத் தெரியும் என் சிரமங்கள் எல்லாம்..

சவாலுக்கு வறீங்களா?? ஒரு நாள் என்னோட இடத்துல இருந்து என்னோட வேலையெல்லாம் செஞ்சு பாருங்க.... அப்பத் தெரியும் பதிவு போடுறது எவ்வளவு சிரமம்ன்னு...

கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்.
நான் ஒரு பதிவு போட்டா..... அது 100 பதிவு போட்ட மாதிரி!!!!