"கடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது" என்று திரு ரத்னேஷ் அவர்கள் கோவி.கண்ணன் அவர்களுக்கு மின் அஞ்சல் செய்திருந்தார். அவரது சொல், எனது பதிவில் 2089ஆம் ஆண்டு வரை மட்டுமாவது பலிக்கிறதா என்று பார்க்கிறேன். மனக்கட்டுப்பாடு இருக்கவேண்டும். முயற்சி செய்கிறேன்.
ஆறு மாதங்கள் பதிவு எழுதியதில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி. குறிப்பாக பதிவர் அ, ஆ, இ, ஈ, உ, ஊ கியோரை மிகவும் நேசிக்கிறேன். கூகுள் சாட் லிஸ்டில் இருந்து தொடர்ந்து என்னுடன் உரையாடும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி.
தொடர்ந்து எழுதியது மிகுந்த அயர்ச்சியைக் கொடுத்துவிட்டது. மீண்டும் 2090ல் எழுதவருவேன். அதற்குள் நல்ல மாற்றங்கள் எனக்குள் ஏற்பட்டு இருக்கும். மற்றபடி பதிவெழுதும் எனது அனைத்து நண்பர்களின் இடுகைகளையும் வழக்கம்போல இரவு 12மணிவரை விழித்திருந்து படித்து கட்டாயம் என் கருத்துக்களைப் பின்னூட்டமாக இடுவேன்.(வேற என்ன ":)" என் கருத்து...)
நண்பர் டிபிசிடி அவர்கள், இதுவரை நான் எழுதிக் கிழித்த பதிவுகள் ஒவ்வொன்றையும் படித்து நான் மீண்டும் வரும்வரை எனக்குத் தொடர்ந்து பின்னூட்டமிட்டு, என் பதிவைத் தமிழ்மணத்தில் தொடர்ந்து வர வைப்பார் என நம்புகிறேன். அப்படியே அவர் பதிவில் ஏதாவது ஒரு மூலையில் இடம் இருந்தால் என் படத்தைக் கட்டம் கட்டிப் போட்டு, மீண்டும் என்னை எழுதவர அழைப்பார் என நம்புகிறேன்.....
நல்லது பதிவு நண்பர்களே. அழுகாச்சி பின்னூட்டங்கள் இங்கு தேவைதான்!!!
(அதிகம் அழுகை வரும்படியாகப் பின்னூட்டம் இடுபவர்களுக்குத் தக்க பரிசு அளிக்கப் படும்...)
அன்புடன்..
ஜெகதீசன்.
பி.கு: இந்தப் பதிவு யாரையாவது தாக்கி(கலாய்த்து) எழுதப்பட்ட பதிவு என்று நினைத்து, யாராவது எனக்கு ப்ரெளனீஸ் புள்ளிகள் தந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்!!!
Monday, March 17, 2008
Sunday, March 9, 2008
புரியல்ல, தயவு'ச்' செய்து விளக்கவும்...
அன்பின் டி.பி.சி.டி அய்யா அவர்கள் சமூகத்திற்கு, உங்களின் அண்மைய பதிவுகள் என்னைப் வியப்படைய வைக்கின்றன. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!
உங்கள் தமிழார்வத்தை நான் பாராட்டுகிறேன். நானும் இனிமேல் என் பதிவுகளில்(எப்போதாவது எழுதினால்... :) ) தமிழ் தவிர மற்ற மொழி சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடிவு செய்திருக்கிறேன்..
அப்படியே உங்களுக்கு ஒரு சிறு விண்ணப்பம்...
இனி வரும் பதிவுகளில் ஒற்று எங்கு மிகும், எங்கு மிகாது எனக் கவனித்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்....
உங்கள் பதிவுகளில் தவறாக ஒற்று மிகுந்துள்ள/ மிகாத சில இடங்கள்:
க, ச, த, ப - ஒற்று மிகாத இடங்கள்
முழுதும் பார்க்க:http://www.thamizham.net/innov/innov155.htm
(பின் குறிப்பு: இது மொக்கை மட்டுமே... :) )
உங்கள் தமிழார்வத்தை நான் பாராட்டுகிறேன். நானும் இனிமேல் என் பதிவுகளில்(எப்போதாவது எழுதினால்... :) ) தமிழ் தவிர மற்ற மொழி சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடிவு செய்திருக்கிறேன்..
அப்படியே உங்களுக்கு ஒரு சிறு விண்ணப்பம்...
இனி வரும் பதிவுகளில் ஒற்று எங்கு மிகும், எங்கு மிகாது எனக் கவனித்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்....
உங்கள் பதிவுகளில் தவறாக ஒற்று மிகுந்துள்ள/ மிகாத சில இடங்கள்:
என்பதுப் போலவும் (என்பது போலவும்)
என்றுச் சொல்ல (என்று சொல்ல)
கலைஞரை சாடியவர்(கலைஞரைச் சாடியவர்)
.......
........
க, ச, த, ப - ஒற்று மிகாத இடங்கள்
1) அகர ஈற்றுப் பெயரெச்சம்
தின்றன காளைகள்
2) வினைமுற்று தொடர்
வாழ்க திலகர்
3) எட்டாம் வேற்றுமை, விளிவேற்றுமை
அம்மா கொடு
4) று, து, டு, - ஈற்றெழுத்து எனின் மிகாது
சென்று கண்டான்(வந்து, கண்டு)
5) ஆ, ஏ, ஓ, யா - வினா முன் மிகாது
ராமனா செய்தான்
முழுதும் பார்க்க:http://www.thamizham.net/innov/innov155.htm
(பின் குறிப்பு: இது மொக்கை மட்டுமே... :) )
Labels:
மொக்கை
Sunday, March 2, 2008
உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்1!!
19 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தென்ஆப்ரிக்காவை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது...
இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!
:) :) :) :) :) :) :) :) :) :) :)
டிஸ்கி: தலைப்பில் இருந்த எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்... திருத்திவிட்டேன்..
இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!
:) :) :) :) :) :) :) :) :) :) :)
டிஸ்கி: தலைப்பில் இருந்த எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்... திருத்திவிட்டேன்..
Labels:
கிரிக்கெட்
Saturday, February 9, 2008
வட்டம்!!!!!!
சீனப் புத்தாண்டு தினத்தில் பக்கத்து வீட்டு சீன ஆண்ட்டி & அங்கிளிடம் Gong Xi Fa Cai (Happy Chinese New Year) சொன்ன போது, அவர்களும் பதிலுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு இந்த ஆரஞ்சுப் பழங்களைப் பரிசாகத் தந்தார்கள்...


இவை இந்த மாத PIT போட்டிகாக!!!
இவை இந்த மாத PIT போட்டிகாக!!!
Thursday, January 3, 2008
குசும்பன் சொன்னது சரிதான் - கலைஞர் ஒப்புதல்
இப்பொழுதெல்லாம் அரசியல்வாதிகள் பதிவுகளைப் படிக்கிறார்களோ என சந்தேகம் வந்துள்ளது (சில மாதங்களுக்கு முன்கூட யாரோ இதைப் பற்றிப் பதிவு எழுதினார்கள்)...
கலைஞர் அவர்கள் நேற்று ஒரு கேள்வி-பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முழு செய்தி இங்கே:
என்னுடைய பகுத்தறிவுக்கு வைகோ சான்றிதழ் தேவையில்லை-கருணாநிதி
இதில் விஜயகாந்துக்கு சொல்லியிருக்கும் பதில்:
இது குசும்பனின் இடுகை:
தமிழகம் முன்மாதிரி மாநிலமாக மாறுகிறதா?
கலைஞரின் கேள்வி-பதில் அறிக்கை குசும்பன் சொன்னதை அப்படியே ஆமோதிப்பது போல இருக்கிறது....
ஒருவேளை அரசியல்வாதிகளும் பதிவுகளைப் படிக்க ஆரம்பிச்சுட்டாங்களோ?? :)))
கலைஞர் அவர்கள் நேற்று ஒரு கேள்வி-பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முழு செய்தி இங்கே:
என்னுடைய பகுத்தறிவுக்கு வைகோ சான்றிதழ் தேவையில்லை-கருணாநிதி
இதில் விஜயகாந்துக்கு சொல்லியிருக்கும் பதில்:
கேள்வி: கடந்த முப்பதாண்டில் ஒரு தடவையாவது ஏழை மக்களுக்காக சோறு
போட்டிருக்கிறோம் என்று நிருபிக்கத் தயாரா என்று விஜயகாந்த் சவால்
விடுகிறாரே?
பதில்: சபாஷ் இவரும் சவாலா. விசேஷ காலம் போல ஒரு தடவையல்ல, ஒவ்வொரு நாளும் ஏழை
மக்கள் சோறு சாப்பிட வேண்டும் என்பதற்காக பதவிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே
ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி விற்கப்படும் என்று முதல் ஆணை நான் பிறப்பித்தேன். அந்த
ஆணை பிறப்பித்த பிறகு உதாரணமாக தமிழ்நாட்டில் வேளாண்மை பணிகளுக்கு நாற்று நட மகளிர்
கிடைப்பதில்லை என்ற ஒரு குறை உள்ளது.ஏன் தெரியுமா, ஒரு பெண் இரண்டு நாள் வேலை
செய்தால், அந்த மாதத்திற்கு தேவையான அரிசியை இவர் இரண்டு நாளில் தான் பெறுகின்ற
கூலியிலிருந்து வாங்கி விட முடிகிறது. அந்த இரண்டு நாள் மட்டும் வேலை செய்து விட்டு
பிறகு வேலைக்கே வர மறுக்கிறார்கள். பட்டினியாக அல்ல.
இது குசும்பனின் இடுகை:
தமிழகம் முன்மாதிரி மாநிலமாக மாறுகிறதா?
.......ஏன் இப்படி என்று அப்பாவிடம் கேட்டேன் அவர் சொன்னார் இங்கு மட்டும் என்று
இல்லை எங்கேயும் இதுபோல் ஆட்கள் பிரச்சினை இருக்கிறது அரிசி கிலோ இரண்டு ரூபாய்கு
கிடைக்கும் பொழுது யாரும் வேலை செய்து சாப்பிட தயாராக இல்லை, கல் அறுக்க போனால் ஒரு
நாளைக்கு 200 வரை கிடைக்கிறது ஒரு வாரம் போகிறார்கள் ஒரு மாதம் வீட்டில் இருந்து
சாப்பிடுகிறார்கள் என்றார் பின் அறுவடை அப்பொழுதும் இது போல் ஆட்கள் பிரச்சினை
இருந்ததாகவும் நிறைய பணம் நஷ்டம் என்றார்........
கலைஞரின் கேள்வி-பதில் அறிக்கை குசும்பன் சொன்னதை அப்படியே ஆமோதிப்பது போல இருக்கிறது....
ஒருவேளை அரசியல்வாதிகளும் பதிவுகளைப் படிக்க ஆரம்பிச்சுட்டாங்களோ?? :)))
Labels:
அரசியல்
Wednesday, December 26, 2007
கலக்கும் லாலு!!
பல மாநிலங்களுக்கு குடிநீர் சப்ளை செய்து, ரயில்வே துறை சம்பாதிக்க முடியுமா? ஏன் முடியாது என்று புதுமையான திட்டத்தை தீட்டியிருக்கிறார், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்!
ரயில்வே துறை அமைச்சராக லாலு பொறுப்பேற்றதில் இருந்து, ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது.
"ரயில்வே துறை லாபம் குவிக்க இன்னும் பல வழிகள் உள்ளது. அதைப்படிப்படியாக நிறைவேற்றுவேன்' என்று, அமைச்சர் கூறியிருந்தார். அதன் முதல் கட்டமாக, குடிநீர் "பைப் லைன்' திட்டம் பற்றி லாலு தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.
நாடு முழுவதும் போடப்பட்டுள்ள 63 ஆயிரம் கி.மீ., நீள தண்டவாளங்களில், இரு பக்கமும், குடிநீர் பைப்களை புதைத்து, பல்வேறு மாநிலங்களில் உள்ள நதி நீரை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு சப்ளை செய்வது தான் லாலுவின் திட்டம்.
இந்த திட்டம் நிறைவேறினால், சில மாநிலங்களில் பல ஆண்டாக மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயம் நீங்கும்; வறட்சியில் உள்ள சில மாநிலங்களுக்கு தண்ணீர் சப்ளை கிடைக்கும்.
முழு செய்திக்கு: தண்டவாளம் அருகே "பைப் லைன்' லாபத்தை பெருக்க லாலு புது திட்டம்
உண்மையிலேயா லாலு கலக்குகிறார்!!!!
நன்றி: தினமலர்
பின் குறிப்பு:
இது சென்ற வார செய்திதான்... இப்போது தான் பார்த்தேன். :)
ரயில்வே துறை அமைச்சராக லாலு பொறுப்பேற்றதில் இருந்து, ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது.
"ரயில்வே துறை லாபம் குவிக்க இன்னும் பல வழிகள் உள்ளது. அதைப்படிப்படியாக நிறைவேற்றுவேன்' என்று, அமைச்சர் கூறியிருந்தார். அதன் முதல் கட்டமாக, குடிநீர் "பைப் லைன்' திட்டம் பற்றி லாலு தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.
நாடு முழுவதும் போடப்பட்டுள்ள 63 ஆயிரம் கி.மீ., நீள தண்டவாளங்களில், இரு பக்கமும், குடிநீர் பைப்களை புதைத்து, பல்வேறு மாநிலங்களில் உள்ள நதி நீரை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு சப்ளை செய்வது தான் லாலுவின் திட்டம்.
இந்த திட்டம் நிறைவேறினால், சில மாநிலங்களில் பல ஆண்டாக மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயம் நீங்கும்; வறட்சியில் உள்ள சில மாநிலங்களுக்கு தண்ணீர் சப்ளை கிடைக்கும்.
முழு செய்திக்கு: தண்டவாளம் அருகே "பைப் லைன்' லாபத்தை பெருக்க லாலு புது திட்டம்
உண்மையிலேயா லாலு கலக்குகிறார்!!!!
நன்றி: தினமலர்
பின் குறிப்பு:
இது சென்ற வார செய்திதான்... இப்போது தான் பார்த்தேன். :)
Labels:
லாலு
Monday, December 24, 2007
எ.ஏ.தி.க தலைவருக்கு வாழ்த்துக்கள்!!!!!!
எ.ஏ.தி.க தலைவர், வருங்காலத் தமிழகத்தின் விடிவெள்ளி, பிணாங்கு சிங்கம் எங்கள் தலைவர் டி.பி.சி.டி(அரவிந்த்) க்கு இன்று பிறந்தநாள்! அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!! :P

தமிழக மக்களே... சிந்தித்துப் பாருங்கள்... புலியையும் அடக்கி நண்பனாக்கும் திறமை கொண்ட ஒரே அரசியல்வாதி, எங்கள் தலைவர், கொள்கைக் குன்று டி.பி.சி.டி மட்டுமே!!!! இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து எங்களுக்கு ஓட்டுப்போட்டு 200011 தேர்தலில் எங்கள் தலைவரை முதல்வராக்குங்கள்!!!!
பின் குறிப்பு:
கும்மி not allowed... :P
Labels:
வாழ்த்து
Subscribe to:
Posts (Atom)
