Showing posts with label குறள். Show all posts
Showing posts with label குறள். Show all posts

Saturday, August 11, 2007

வழிகாட்டும் வள்ளுவர்-2

ராஜன், என்னுடன் பணிபுரிந்த நண்பன். அவனும் எங்கள் திட்டப்பணித் தலைவர்(P.L) இளங்கோவும் மிகவும் நெருக்கம். பல விசயங்களில்(ஆன்மீகம்,...) அவர்கள் ஒரே கருத்து கொண்டவர்கள் என்பதால் எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பார்கள்(தேனீர் இடைவேளையின் போது இருவரும் எங்களால் ஒன்றாகவே கலாய்க்கப் படுவ்ர்...).

ஒரு புதிய திட்டப்பணி(project), நல்ல சவாலானது(web services ,swt,....). அந்தப் பணிக்கான ஆட்களைத் தேர்வு செய்யும் போது இளங்கோ, ராஜனைத் தேர்ந்தெடுக்க வில்லை. இது ஏன் என்பது அனைவருக்கும் மிகவும் குழப்பமாக இருந்தது.

ஒரு நாள் தனியாக இருந்தபோது அவரிடம் இது பற்றி நான் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்:

ராஜனுக்கும் எனக்கும் உள்ள நட்பு வேறு, வேலை வேறு. ஒரு வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் போது அவரால் முடியுமா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதமை யெல்லாந் தரும்.

-திருக்குறள்(அதிகாரம்- 51(தெரிந்து தெளிதல்) ; குறள்-507)

(அமர்த்தும் பணியில் அறியவேண்டுவன எதனையும் அறியாத ஒருவரை அவர்மீது நாம் வைத்திருக்கும் பாசத்தையே அடிப்படையாகக்கொண்டு அமர்த்துதல், நம்மை உலகம் அறிவில்லாதவர் எனத் தூற்றும் படியான எல்லாத் தீமைகளையும் கொடுக்கும்)

Wednesday, August 8, 2007

வழிகாட்டும் வள்ளுவர்-1

இளங்கோ, நான் இதற்கு முன் பணி புரிந்த நிறுவனத்தில் என் திட்டப்பணித் தலைவர்(Project Leader). அவர் ரெம்ப நல்லர். நாங்கள் என்ன செய்தாலும் ஒன்றும் சொல்லமாட்டார். அவர் கோவப்பட்டு நாங்கள் பாத்ததே இல்லை.(ஆனால் ஐஸ் வைத்தே எல்லா வேலையும் வாங்கிடுவார்).

ஒரு நாள் திட்டப்பணி மேலாளரிடமிருந்து(Project manager) தொலைபேசி. வழக்கம் போல ஏதோ ஒரு பிரச்சனைய சரியாகப் புரிந்துகொள்ளாமல் இளங்கோவக் காய்ச்சி எடுத்துக் கொண்டு இருந்தார். இளங்கோவும் வழக்கம் போல பொறுமையா விளக்கி அவருக்குப் புரிய வைத்தார். அதுக்குப் பின் எங்களிடம் வந்து வாங்க டீ குடிக்கப் போகலாம்ன்னு கூப்பிட்டார். ("தேனீர் இடைவேளை" என்ற பெயரில் 1/2 மணி நேரம் தினமும் மொக்கை போடுவோம். அந்த மொக்கையில் இளங்கோவும் கலந்து கொள்வார். நான் தான் சொன்னேனே, "அவரு ரெம்ப நல்லவருன்னு")

அன்று பேசும்பொழுது அவரிடம் நான் கேட்டேன், "திட்டப்பணி மேலாளர்(Project manager) படுத்துற பாட்டை எல்லாம் கோவப்படாமல்இருப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எங்களுடட கிறுக்குத்தனங்களுக்குக் கூட கோவப் படமாமல் இருக்கிறீர்களே. அது ஏன்?" .

அதற்கு அவர் சொன்ன பதில்:

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.

-திருக்குறள்(அதிகாரம்- 31(வெகுளாமை) ; குறள்-301)

(எங்கு தன் சினம் செல்லுமோ, அங்கு சினங்கொள்ளாதிருப்பவனே சினத்தைக் காப்பவனாவான். சினங்கொள்ள முடியாத இடத்தில் காத்தால்தான் என்ன; காவாக்கால் என்ன
?)

ரெம்ப நாள் கழித்து தமிழ் எழுதத் தொடங்கியுள்ளேன். பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.