பசியைப் போக்க மீன் தந்துவிட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவது அதை விட சிறந்தது.
தமிழக அரசின் "இலவசங்கள்" இது போன்ற பசியைப் போக்க மீன் தருவது போலவே ஆகும். ஆனால் மீன் பிடிக்கக் கற்றுத் தரும் திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.(சென்ற அரசு மீனும் தரவில்லை, மீன் பிடிக்கக் கற்றும் தரவில்லை என்பது வேறு விசயம்...)
இப்படிப் பட்ட திட்டங்களில் ஒன்று தான் கலைஞர் அவர்களின்
"ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு விமான பணிப் பெண் பயிற்சி" தரும் திட்டம்.
இது குறித்த தட்ஸ்தமிழ் செய்தி இங்கே
இது குறித்து பதிவர் உடன்பிறப்பு அவர்களின் இடுகை இங்கே
தமிழகத்துக்குத் தேவை "இலவசங்கள்" அல்ல. இது போன்ற திட்டங்கள் தான்.
எடுத்துக்காட்டாக,
அனைத்து விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ததில் அரசுக்கு இழப்பு ரூ6866 கோடி. இதில் ஏழை விவசாயிகளின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்திருக்கலாம். பணக்கார விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ததற்குப் பதில் அந்தப் பணத்தில் இனிமேல் விவசாயிகளுக்கு நட்டம் வராமல் தடுக்கும் முறைகளை ஆராய்வதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.
வேலையில்லா இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்குவதற்குப் பதில் அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சுயதொழில் தொடங்கவும் திட்டங்கள் தீட்டலாம்.(உதவித்தொகை பசிக்கு மீன் தருவது போல் தான். அது மட்டும் போதாது)
"விமான பணிப் பெண் பயிற்சி" திட்டம் போல மீன் பிடிக்கக் கற்றுத்தரும் வகையான திட்டங்கள் பல கலைஞர் அவர்கள் தருவார் என நம்புவோம்.
